கேள்விகளும் பதில்களும் COD 11 59-12-23 பிரன்ஹாம் கூடாரம்,ஜெபர்சன்வில், இந்தியானா 1. பிரசங்கிப்பதற்கு எதாவது உங்களிடம் உள்ளதா? (யாரோ ஒருவர் “இல்லை ஐயா'' என்கிறார்- ஆசி) அங்கே சகோதரன் பீலர் அவர்களைக் குறித்தென்ன? (“அவரைக் குறித்து எனக்குத் தெரியாது'') சகோதரன் பீலர், இன்றிரவிற்கான செய்தியை நீங்கள் ஆயத்தமாய் வைத்திருக்கிறீர்களா? (சகோதரன் பீலர், ''இல்லை ஐயா” என்கிறார்) எனக்கு தொண்டை சிறிது கரகரப்பாக உள்ளது. இன்னும் சில கேள்விகள் என்னிடமாக உள்ளன. அவைகள் தாமே. இச்சகோதரர்களில் யாராவதொருவர் பிரசங்கிக்கச் செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இப்பொழுது, மெய்சிலிர்ந்து போகாதீர்கள். இது ஒரு... அல்ல. இது ஆப்பிரிக்காவிற்கு அனுப்பப்படவிருக்கின்ற சில ஜெப துணிகள். இவை ஜெபத்துணிகளாக வெட்டப்படவிருக்கின்றன, இதற்கும் சில உறைகள் நிறைய உள்ளவற்றிக்கும் நான் ஜெபம் ஏறெடுக்க வேண்டுமென அவர்கள் கூறினர். இவை எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று நான் எண்ணினேன். நான் ஆப்பிரிக்காவிற்கு சென்றடையும் முன்னர் இவையெல்லாம் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டுவிடும். இந்த பெரிய துணியில் எவ்வளவு ஜெபத்துணிகள் வெட்டப்பட்டு வரு மென்று உங்களுக்கு தெரியுமா, ஆயிரக்கணக்கான துணிகள். முன்பொரு நாளில் சகோதரன் ஃபிரட் ஒரு சிறிய பையில் எண்ணூறுதுணிகள் கொண்டு வந்தார். அப்படியானால் இந்த உறைகளில் எவ்வளவு வருமென்று நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். ஆகவே நாம். சிறிது நேரம், நாம் இதன் பேரில் ஜெபிக்கலாம். 2. இப்பொழுது, எனக்கு சிறிது தொண்டை கரகரப்பாக உள்ளது, ஆனால் என்னால் முடிந்தவரை சிறந்த அளவில் இந்த கேள்விகளின் சிலவற்றிற்கு பதிலளிக்க நான் திரும்ப வருவேன் என்று நான் கூறியிருந்தேன். ஆகவே இப்பொழுது, எப்பொழுதுமே இந்த எழுப்புதல்களானது வருகையில், ஒரு சிறு அசைவை அது ஆரம்பித்து விடுகிறது. ஆகவே இதுவும் சபையோடு பொருந்தும் என்று எண்ணினேன்- விரும்புகிறேன், ஏனெனில் சபை புரிந்துகொள்ளாத அளவிற்கு சில சமயங்களில் ஏதோ ஒன்று கூறப்பட்டிருக்கும். ஆகவே இப்பொழுது உங்களுடைய சொந்த கேள்வியை நீங்களே எழுதத்தக்கதாக உங்களுக்கு ஒரு வாய்ப்பை அவர்கள் அளித்துள்ளனர். என்னிடம் இருப்ப வைகளை நான் உங்களுக்குத் தருகிறேன்; பிறகு அதைப் போன்று ஒன்று உங்களிடம் இருக்கிறதென்றால், நீங்கள் அதை எழுத வேண்டியிருக்காது. ஆகவே அவைகளில் ஒன்றானது: தயவுகூர்ந்து ரோமர் 7:25ஐ விளக்கவும். அடுத்தது: ஒரு நபர் தேவனுடன் மிக நெருங்கி அவன் பாவமே செய்யாத அளவிற்கு ஜீவிக்கலாம் என்று நீங்கள் கூறினீர்களே. உயிர்த்தெழுதலில் நாம் எந்த சாயலில் இருப்போம்? சகோதரன் பிரன்ஹாமே, நீர் போதித்த எல்லா கட்டளைகளையும் ஒரு நபர் பின்பற்றி விட்டு என்ன செய்ய வேண்டும்: பிறகு பரிசுத்த ஆவியைப் பெறுவது எப்படி? தயவு கூர்ந்து எபிரெயர் 6:4ஐ விளக்கி அதை எபிரெயர் 10:26 உடன் ஒப்பிடவும். பிறகு: உலகத்தோற்றத்திற்கு முன் முன்குறித்தல் என்பதற்கு அர்த்தம் என்ன; அதைப் போன்ற ஒன்றை வேதாகமத்தில் எங்கேயிருந்து நீங்கள் எடுக்கிறீர்கள்? 3. ஆகவே சகோதரி மெக்... இல்லை, அது - அது ஒரு ஜெப விண்ணப்பமாகும். 4. இப்பொழுது, இன்றிரவு நமக்கிருக்கும் கேள்விகள் இவைதாம். இங்கே சிறிது ஆரம்ப நிலையாக நாங்கள் பதிலளிக் கையில் உங்களிடம் வேறு கேள்வி இருந்தால், நல்லது, நீங்கள் அதை எடுத்து வரலாம், நாம் சற்று முயற்சி செய்வோம்.... இப்பொழுது, இங்கே சபையின் சிந்தையில் எந்த காரியத்தைக் குறித்தாவது ஒரு கேள்வி இருக்குமானால், நாங்கள் கொண்டிருப்பதைக் குறித்தும் இருந்தால், எங்களுக்குத் தெரிந்த வரையில் சிறந்த முறையில் உங்களுக்கு உதவ எங்களுக்கு விருப்பம். பாருங்கள் ? 5. ஆகவே நீங்கள் எப்பொழுதுமே நினைவில் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புவதென்னவெனில், நான் கூறுவதுதான் அழுத்தமான சத்தியம் என்று நான் சொல்வ தில்லை. அது நான் அறிந்துள்ள மிகச்சிறந்த அழுத்தமான சத்தியமாயிருக்கும்படியான ஒன்றாகும். நான் - மற்ற மனிதரைப்போல நானும் தவறாயிருக்கக்கூடும். ஆனால் - சகோதரன் ஜாக்சன்- சரியானது என்று நான் சிந்திக்கும் விதத்தில் அதை விளக்கிக் கூறுகின்றேன். (நீங்கள் பாருங்கள்?) சகோ. மைக், அது வேதத்திலுள்ளபடி நான் பார்த்து ... இவைகளை நான் படிக்கையில், நான் வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வதில்லை. நான் - அதை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையில், வேத வாயிலாக அதை முழுமையாகச் கொண்டு வருகிறேன். 6. அப்பொழுது, நீங்கள் அந்த பொருளை நீங்கள் விளக்கலாம். ஆனால் இதில் இருக்கின்ற எல்லாவற்றோடும், வேதவசனம் எல்லாவற்றோடும் அது முழுவதுமாக பொருந்த வில்லையெனில், எப்படியிருந்தாலும் சரி இது தவறாகத்தான் இருக்கும். உங்களுக்கு புரிகின்றதா? ஆகவே வேதவசனங்கள் எல்லாமும் சரியாக வைக்கப்படுமானால் அது சரியாக ஒன்றோடு ஒன்று பொருந்தும், இல்லையெனில் அது ஒரு புதிர்போன் றிருக்கும். நான் அப்படி கூற வரவில்லை... நான் தவறாகக் கூறுவேனானால் தேவன் என்னை மன்னிப்பாராக. வேதாகமம் என்பது ஒரு புதிர்போன்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. அது... அது எல்லாம் கூறாக உடைக்கப்பட்டு ஒரு பெட்டியில் கலந்து வைக்கப்பட்ட ஒன்றாகும், அதை சரியாக ஒன்று கூட்டி சேர்க்க பரிசுத்த ஆவியானவரால் தான் முடியும். பாருங்கள்? ஆகவே - ஆகவே நம்மால் அதைச் செய்யமுடியாது. இப்பொழுது, வேதாகமத்திற்கு 969 விதமான வியாக்கியானங்கள் கிடையாது, ஏனெனில் வேதவசனமானது சுய விளக்கத்திற்குரிய ஒன்றல்ல என்று வேதம் கூறுகின்றது. அது எழுதப்பட்ட விதமாகத்தான் இருக்க வேண்டும். நாம் நம்புகிறோம் அது... (சகோதரன் பாட், உமக்கு நன்றி). நாம் .... வேதாகமத்தில் எவ்விதமாக எழுதப்பட்டுள்ளதோ அதே விதமாகத்தான் அது இருக்க வேண்டும்; அதே விதமாகவே தான் நாம் அதை விசுவாசிக்க வேண்டும். அதைப் போன்றே. காரியத்தை இங்கே அது கூறுகிறது. பாருங்கள், நாம் - நாம் வேதவசனமானது தனக்குத்தானே இங்கே பதிலளித்துக் கொள்ளவும், தனக்குத் தானே இங்கே பதிலளித்துக் கொள்ளும் விதத்திலே நீங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள், ஒவ்வொரு வசனமும் சரியாக அதனுடைய இடத்தைச் சென்ற டைந்து எல்லாம் வேதாகமத்தை ஒருசேர ஒன்றாக ஆக்க வேண்டும். 7. ஆகவே இப்பொழுது, நான் எண்ணினது ஒருக்கால்... இன்றிரவு நான் கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக்கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்துள்ளோம் என்ற தலைப்பில் பேசுவேன் என்று கூறியிருந்தேன்; ஆனால் அதை பிரசங்கம் செய்ய எனக்கு போதுமான அளவிற்கு பேச முடியவில்லை. ஒரு நாள் இரவு இங்கே எனக்கு உடல் வெப்பநிலை அதிகமானது, அப்பொழுது நான் வெளியே சென்றேன். நான் காரில் உட்கார்ந்த போது எனக்கு மிகவுமாக வெப்பம் அதிகரித்தது, உடல் வெப்பமானது அப்படியே வாய்வழியாக வெளியே வந்தது. நான் காரின் ஜன்னலை கீழறக்கி வீட்டிற்குச் சென்றேன். பிறகு அது ஒரு வியாழன் அல்லது வெள்ளி இரவு என்று நான் நினைக்கிறேன். அடுத்த இரவே எனக்கு தொண்டை சிறிது கரகரப்பாகத் துவங்கினது, ஒரு விதமான... ஓ, அது.... எனக்கு, வியாதியில்லை, காய்ச்சல் இல்லை, பெலவீனமில்லை, ஜலதோஷம் இல்லை, ஆனால் அது மிக கடினமாக பிரசங்கித்ததினால் தொண்டை சேதமடைந்து குரல்வளை அழற்சி போன்று உண்டாகி, பிறகு - சளி பிடித்துக் கொண்டது. ஆனால் அது இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாளில் ஒருக்கால் ஞாயிற்றுக்கிழமைக்குள் சரியாகிவிடும். சகோதரனுக்கு உதவி செய்யத்தக்கதாக மறுபடியுமாக நான் வருவேன். அவர் தன்னுடைய பிரசங்கத்தை முடித்த பிறகு, மீதமாக என்ன விடப்பட்டிருக்கின்றது என்று நான் தேடிப்பார்ப்பேன். 8. ஆகவே பிறகு- ஆகவே பிறகு சபையார் முழுவதுமாக பரிசுத்த ஆவியைப் பெற நான் விரும்புகிறேன். இப்பொழுது, எனது மருமகள் இங்கே அமர்ந்திருக்கிறாள். லாய்ஸ், இவள் என்னுடைய மருமகள் என்பதனால் அல்ல, இவள் இங்கிருக் கின்றாள் என்றல்ல, நான் அறிந்த பெண் பிள்ளைகளில் இவள் அருமையான பெண்களில் ஒருவளாவாள்; இவள் மிகச் சிறந்த ஒரு இளம் பெண்ணாவாள். இவளுடைய பின்னணியானது, இவள் பெரிய காரியங்களிலிருந்து வெளியே வந்துள்ளாள், தேவனை வழிபடாத ஒரு குடும்பத்திலிருந்து இவள் வெளியே வந்தாள். அவள் வெளியே வரவேண்டியிருந்தது, அதற்காக இப்பிள்ளையின் நிலையைக் கண்டு வருத்தப்படுகிறேன். ஆகவே இப்பொழுது, இவள் பரிசுத்த ஆவியை பெறும்படிக்கு காத்திருக்கிறாள், பரிசுத்த ஆவி வேண்டுமென ஜெபித்து உபவாசித்துக் கொண்டிருந்தாள், இவளால் நிற்க்கக்கூட முடியாத அளவிற்கு உபவாசித்திருந்தாள். 9. என் சகோதரி டோலரேஸ், அவள் "பில், என்னால்... சபையானது - சபையில் வல்லமை இருந்த போது, நான் அப்படியே பறந்துவிடுவது போல எனக்கு இருந்தது. அப்பொழுது, எல்லோரும் - பரிசுத்த ஆவியானது மக்களின் மீது விழ ஆரம்பித்தபோது, நான் அங்கே உட்கார்ந்து சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன்” என்றாள். பாருங்கள்? நல்லது, பாருங்கள், அதைக் குறித்து அந்த கேள்வியானது இங்கே இருக்கின்றது. ஆதலால் சபை பெற்றுக் கொள்ளத்தக்க தாக அது ஒருக்கால் உதவியாக இருக்கும் என்றெண்ணினேன். ஆகவே இப்பொழுது, புதன் இரவு ஜெப கூட்டத்தை வேறு விதமாக மாற்றிப் போட எனக்கு விருப்பமில்லை, ஆனால் சபையானது கட்டாயமாக இந்தக் காரியங்களை முழுவதுமாக புரிந்து கொள்ளத்தான் வேண்டும் என்று நான் விரும்புகிறேன் (உங்களுக்கு புரிகின்றதா?), அதற்கு முன்னர்... 10. ஞாயிற்றுக்கிழமையன்று நான் இங்கே சபையின் பின்புறத்தில் இங்கே சபையின் பின்புறத்தில் ஒரு மருத்து வருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு மருத்துவராவார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக (தேவனுடைய சபை ஸ்தாபனத்தில் தலைமை அலுவலகம் எங்குள்ளது?) அவர் மஸ்ஸோரியிலுள்ள, ஸ்பிரிங்ஃபீல்ட் இடத்திலிருந்து இவ்வளவு தூரமாக காரோட்டி வந்தார். அவர் கூறினார், "சகோதரன் பிரன்ஹாம்...''(இப்பொழுது அந்த ஸ்தாபனத்தின் தலைமை இடத்திலிருந்து வருபவர்.) அவர் ''என்னுடைய வாழ் நாள் முழுவதுமாக அதைக் குறித்து நான் புரியாமல் எனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். என் வாழ் நாளில் இப்பொழுது தான் முதன் முறையாக அதைக் குறித்து நான் தெளிவானேன்'' என்று கூறினார். அவர் ஒரு மருத்துவர், அங்கே பின்புறத்தில் என் அறையில் என்னை சந்தித்தார். 11. ஆகவே - ஆகவே அங்கே சகோதரன் மெர்சர் மற்றும் சகோதரன் ஜீன் கோட் ஒலி நாடாக்களுடன்... (கூட்டத்தில் நல்ல பயனடைந்ததாக) சகோதரன் மெர்சர் இப்பொழுது தான் கூறினார் - அந்த கூட்டத்தில் நான் அதை விவரித்த போது பரிசுத்த ஆவியானவர் கூட்டத்திற்குள் வந்து தம்மைத்தாமே பிரித்து ஊற்றினார், நம்முடைய ஜனங்களின் மத்தியில் தேவன், தம்மைத்தாமே பகிர்ந்தளித்து கொடுத்தல். அதைத் தான் அது செய்கின்றது. ஆகவே அப்படியானால், தேவனுடைய மக்கள் மறுபடியுமாக ஒன்று சேர ஆரம்பிக்கையில், அங்கே ஒற்றுமை உண்டு, அங்கே வல்லமை இருக்கின்றது. பாருங்கள்? தேவன் எப்பொழுதெல்லாம் மக்கள் முழுவதுமாக ஒன்று சேரச் செய்கின்றாரோ, அப்பொழுது உயிர்த்தெழுதல் நடக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் அதை ஒன்று சேர்க்கத் துவங்கும் போது எடுக்கப்படுதலின் நேரமாக அது இருக்கும், அவர்கள் ஒரு சிறு கூட்டமாகத்தான் இருப்பார்கள், ஆனால், ஒரு மகத்தான ஒன்று கூடுதல் ஒன்று இருக்கும். 12. இப்பொழுது, அனுப்பப்பட்டுள்ள இந்த ஜெபத் துணிகள், சுகமளித்தலின் சத்தம்... கர்த்தருக்கு சித்தமானால், வருட முதலில், நான் சரியாக உடனே, நான் ஜமாய்க்கா வில்லுள்ள, கிங்ஸ்டன் நகரிற்கு சென்று, அங்கிருந்து ஹாய்தி தீவிற்கு சென்று, பிறகு அங்கிருந்து... ஹாய்தியின் ஜனாதிபதி தங்கள் முழு இராணுவப்பாதுகாப்பை அளிப்பதாக கூறி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அங்கே ஒரு கலகம் ஏற்பட்டிருக் கின்றது. அது என்னவாயிருந்தாலும் சரி, கடந்த ஆண்டு அவர் சான் ஜீவானில் இருந்த போது அவர் கேட்ட, இந்த விதமான ஊழியத்துடன் நாம் அவரிடம் வரவேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய நாட்டைக் காப்பாற்ற இந்த ஒரேயொரு காரியம் தான் உண்டு என்று அவர் எண்ணினார். பாருங்கள்? 13. இப்பொழுது கத்தோலிக்க நண்பர் யாராவது இங்கே அமர்ந்திருப்பாரானால், உங்களை புண்படுத்தவோ அல்லது ஏதாவது செய்யவோ நான் இதைக் கூறவில்லை; அந்த விதமாகக் கூற நான் விழையவில்லை. ஆனால் ஹாய்தியை கத்தோலிக்க சபையானது தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது (பாருங்கள்?); ஆகவே அதை காப்பாற்றக் கூடிய ஒரேயொரு காரியம் என்ன வென்றால், சரியாக இப்பொழுதே ஒரு பிராடெஸ்டெண்டு, எழுப்புதல் அவசியம். குலுக்குகின்ற எழுப்புதலாகும். பாருங்கள்? ஆகவே அது உண்மையாகவே அருமையானதாகும், நான் அதை மெச்சுகிறேன். ஆகவே கிறிஸ்துமஸ் வாரத்தின் போதும் இன்னும் சில நாட்களில், நாளை கழித்து, நான் உபவாசம் செய்து ஜெபித்து எந்த விதத்தில் கர்த்தர் நம்மை நடத்தப் போகிறார் என்று பார்க்கப் போவதாக நான் அவரிடம் கூறினேன். 14. பிறகு தென் அமெரிக்கா... அதற்கு பிறகு நார்வே தேசத்திற்கு நிச்சயமாக செல்ல வேண்டும் என்ற நடத்தப்படுதலை என்னால் உணரமுடிகிறது. இந்த வருடம் நான் நார்வே செல்ல வேண்டும் என்று நிச்சயமாகவே நான் நடத்தப் படுகிறேன், பிறகு ஆப்பிரிக்காவிற்கும் கூட செல்ல வேண்டும். ஆகவே இவை சிறு ரிப்பன் துண்டுகளக வெட்டப்பட்டு கூட்டத்திற்கு முன்னால் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பபட விருக்கின்றன. அது எத்தனை ஜனங்கள்... இங்கு வருவதை நீங்கள் கேள்விப்படுகையில் எத்தனைப் பேர்கள் ஜெபத் துணிகளுக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு பொதுவான ஒரு எண்ணிக்கையை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும், (பாருங்கள்?) மறுபடியுமாக தொடர்பை கொண்டிருத்தல். ஆகவே ஏற்கெனவே வெட்டப் பட்டு வெளியே பல மக்களுக்கு அனுப்பயிருக்கின்ற துணிகள் இவை. 15. இந்த மகத்தான ஜீவனுள்ள தேவனுடைய சபையோடு சேர்ந்து, சற்று நமது தலைகளை இப்பொழுது தாழ்த்துவோமாக. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த வழியில் தேவன் இந்த துணிகளை அபிஷேகிக்கத்தக்கதாக ஜெபம் செய்யுங்கள். இப்பொழுது முதலாவதாக "பவுலினுடைய சரீரத்திலிருந்து அவர்கள் உறுமால்களையும் அல்லது கச்சைகளையும் கொண்டுவந்து, அவைகளை வியாதியஸ்தர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவி களும் அவர்களை விட்டுப்புறப்பட்டன. அவர்கள் சுகமடைந்தனர்.'' 16. கர்த்தாவே, இங்கே இவ்வளவு வருடங்களாக இருக்கின்ற இந்த சிறிய மேஜை- சுவிசேஷமானது தொடர்ந்து இதனைக் கடந்து சென்றது, எவ்வளவாக எங்களை மிகவுமாக நீர் ஆசீர்வதித்திருக்கிறீர்; மேலும்... இந்த சிறிய மேஜைக்கு கண்கள் இருந்து மற்றும் இதனால் பேசக்கூடுமானால், சரியாக இதன் முன்பாக நிகழ்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான மகத்தான அற்புதங்களைக் குறித்து முடமானோர், ஊனமுற்றவர், குருடர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுகமடைந்ததைக் குறித்து இது சொல்லும்: ஜீவனுள்ள தேவனுடைய வல்லமைகள் இந்த சிறிய கட்டிடத்திற்குள் தெரியப்பட்டிருக் கின்றது. பிதாவாகிய தேவனே, இந்த காரியங்களுக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். 17. இப்பொழுது, சபையானது உம்மை ஆராதிக்க இன்றிரவு ஒன்றாகக் கூடியுள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக் கத்தக்கதாக நாங்களும் வந்துள்ளோம். இம்மக்களுடைய இருதயங்களும் உத்தமுமான ஒன்றாகும். இந்த காரியங்கள் அவர்கள் மனதில் புரியாத புதிராக உள்ளது. கர்த்தாவே, ஏதாவதொரு காரியம் எங்களை திகைக்க வைக்குமானால், ஒரு கேள்வியானது எவ்வளவு காலமாக இருக்கின்றதோ, அதுவரை நாங்கள் விசுவாசத்தை கொண்டிருக்க முடியாது என்பதை நாங்கள் உணருகிறோம். ஆதலால் எங்களுக்கு எந்த கேள்விகளும் வேண்டாம். 18. கர்த்தாவே, எங்கள் மக்கள் மத்தியிலும் இந்த சபையின் மத்தியிலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் தேவையை நாங்கள் கேட்கிறோம். ஆகவே அவர்களுடைய மனதில் எந்த ஒரு கேள்விகளும் இல்லாமலிருக்கவே நாங்கள் விரும்பு கிறோம். அவையெல்லாம் தெளிவாக்கப்பட வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம், ஆதலால் அது வருகையில் அதென்னவென்று அவர்கள் அறிந்து கொண்டு, அது அவர்களுக்குத் தான் என்று அறிந்து கொள்வார்கள். 19. ஆகவே பிறகு, கடலைக் கடந்து, அங்கேயுள்ள அந்த இருண்ட காடுகளுக்குள் முரசுகள் (Drums) அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், மரத்தின் கீழாக மற்றும் எல்லா இடங்களிலும் குஷ்டரோகிகள் படுத்துக்கிடப்பார்கள், ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும், அவர்கள் கால்கள் வெட்டப்பட்டிருக்கும், அவர்களுடைய காதுகள் மற்றும் முகங்கள் குஷ்டரோகத்தினால் தின்னப்பட்டிருக்கும். கர்த்தாவே, அந்த கூட்டத்தினரைச் சேரும் முன்னரே துர்நாற்றம் வரும். அந்த பரிதாபமான சிறிய பிள்ளை உணவு, ஆடைகள் இல்லாமல்... கர்த்தாவே, அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையானது அவர்களில் அநேகரை சுகமாக்கின பிறகு அவர்கள் ஊழியத்தை விசுவாசிக்கின்றனர். அங்கே உள்ள அந்த பயங்கரமான சூழ்நிலையில், மற்றும் மந்திரவாத சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த பரிதாபத்திற்குரிய, சோர்வுற்ற மக்களின் நிலையை அறிந்தவனாக, நான் ஆப்பிரிக்காவை விட்ட நாள் முதற்கொண்டு என் ஆவியில் அமைதியில்லாதவனாக நானிருக்கிறேன். அந்த மந்திரவாதி, தன்னுடைய விரல்களில் மனித எலும்புகளை வைத்து அடித்து தீய ஆவிகளை அழைத்துக் கொண்டிருப்பான், ஓ, இங்கே அமெரிக்காவில் அருமையான சபைகள், பெரிய இடங்களைப் பார்க்கையில், அந்த இடங்கள் எப்படிப்பட்டவையாயிருக்கின்றன. ஆகவே, தேவனே, அந்த தேவையுள்ள பரிதாபத்திற்குரிய ஜனங்கள், உம்மை அறிந்துள்ள தாக வரும் யாரோ ஒருவர் பேசும் சில வார்த்தைகளை கேட்க முயற்சித்துக் கொண்டிருக்கிற அவர்கள் அங்கேயே படுத்து மரித்துப்போவர். அப்பொழுது செய்தியும் மற்றும் கடிதங்கள் ஆப்பிரிக்கா முழுவதுமாக வேகமாக பரந்துகொண்டு செல் கையில் கர்த்தாவே, அவர்களுடைய இருதயங்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்ற. அக்கினிகள் மறுபடியுமாக கொழுந்து விட்டெரிய ஆரம்பித்துள்ளது போல காணப்படுகிறது. 20. ஒரு மகத்தான சபையாக காணப்பட்ட அங்கேயிருந்த உம்முடைய மகத்தான சபை அநேக துண்டுகளாக உடைந்து போனது, ஓ தேவனே, குளிர்ந்து போய் சடங்காச்சாரமாக இருக்கின்றதற்குள் ஒரு பிரிவு சென்று விட்டது, மற்றவைகள் சத்தியத்தையும் ஆவியானவரையும் பற்றிக் கொண்டிருக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே இப்பொழுது, ஆயிரக்கணக்கானோர் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்; நான் ஜெபம் ஏறெடுத்த ஜெபத் துணிகளை சீக்கிரமாகக் கொடுக்க அவர்கள் கேட்கின்றனர். இந்த சிறிய உறைகளில் ஜெப விண்ணப்பங்களும் தேவையுள்ளோருக்காக அனுப்பப்பட விருக்கின்ற ஜெபத்துணிக ளடங்கிய சிறு மூட்டைகள் உள்ளன. ஓ, வானங்களையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனே, இந்த மூட்டைகளில் உள்ள ஒவ்வொரு நூலையுங்கூட நீர் தாமே பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று இயேசுவின் நாமத்தினாலே உம்மிடம் ஜெபிக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவி தாமே இந்த துணிகளின் ஒவ்வொரு நூலிலும் செல்லட்டும் கர்த்தாவே. இந்த துணி பிணியாளிகள் மற்றும் வியாதியஸ்தர் மீது வைக்கப்படுகையில் தீய ஆவிகள் தாமே அவர்களை விட்டுச் செல்வதாக. 21. அங்கே காடுகளுக்குள் இருக்கின்ற பிசாசையுங் கூட வழிபடுகின்ற அவர்கள் அநேகருக்கு இந்த துணிகள் செல்வதை நினைத்துப்பார்த்தால், தேவனே, அவன் நிற்கத்தக்கதாக ஒரு இடம் கூட அவனுக்கு இராமல் அவன் கூடாரங்களை விட்டு ஓடிவிடவும், அப்பொழுது அம்மக்கள் கர்த்தராகிய இயேசுவைக் குறித்த அறிதலுக்குள் அவர்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இதை அருளும் கர்த்தாவே, அவர்களுடைய வியாதிகள் சுகமாக்கப்படுவதாக, அவர்களுடைய பிரச்சனைகள் சரிசெய்யப்படுவதாக, தேவனு டைய வல்லமை தாமே முதன்மை யான உயர்ந்த இடத்தைப் பெறுவதாக. பிதாவே, இதை அருளும். இந்த சரக்குகளின் ஒவ்வொரு தையலையும் ஒரே அளவைக் கூறாக நாங்கள் அனுப்புகிறோம். அக்கினியின் அநேகக் கூறுகள் இங்கே இன்றிரவு உள்ளது, கர்த்தாவே, இது யாரின் மீது வைக்கப்படு கிறதோ அந்த ஒவ்வொரு நபரும் சுகமாக்கப் படுவார்களாக என்று இதன் சார்பாக நாங்கள் ஒன்றாக எங்களுடைய ஜெபங்களை உம்மிடம் அனுப்புகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 22. இப்பொழுது, அங்கே பின்னால் இருப்பவர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா, இப்பொழுது இன்றிரவு அங்கே பின்புறமாக இருக்கிறவர்களுக்கு? அது அருமையானது. இங்கே இன்னொரு சபையானது நமக்கு கிடைக்கும் போது நாம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம் என்று நினைக்கிறேன், ஏனெனில் இந்த சில காரியங்கள், உங்கள் சத்தத்தை மறைக்கின்றன. அதனால் உங்களால் கேட்க முடியாமல் போகின்றது. 23. இப்பொழுது, நான் மறுபடியுமாக உணர்கிறேன், இன்றிரவு நான் - நான்... சகோதரன் உட் - அதை நான் மறப்பதற்கு முன், -அந்த கைக்குட்டையை நான் வைத்திருக்கிறேன். யாரோ ஒருவருக்காக ஒரு கைக்குட்டையை என்னிடம் நீங்கள் கொடுத்தீர்கள் அல்லவா? அல்லது அது நீங்கள் கொடுத்ததா? என் சட்டைப் பையில் வைத்துக் கொள்ள யாரோ ஒருவர் என்னிடம் ஒரு கைக்குட்டையை அளித்தார், கூட்டம் ஆரம்பித்த முதற் கொண்டு அதை நான் வைத்திருக்கிறேன். அதைக் கொடுத்தது யார் என்று எனக்குத் தெரியாது. ''இந்த கைக்குட்டையை சட்டைப்பையில் வைத்திருங்கள்” என்று கூறினது நீங்கள் தான் என நினைத்திருந்தேன். யாரோ... (இந்த கைக்குட்டையைக் குறித்து சகோதரன் நெவில் சகோதரன் பிரன்ஹாமிடம் விவரிக்கிறார்- ஆசி) அப்படியா? சகோதரன் ஜாக்சன், ஒருவருக்காக ஒரு கைக்குட்டையை நீங்கள் வைத்திருந்தீர்களா? இது தான். சரி. இது... நல்லது, சகோதரன் ஜாக்சன், உமக்கு அது விருப்பமானால் சரியாக இது இங்கே இருக்கும். ஆகவே இப்பொழுது, யாரோ ஒருவர் என்னிடம் கொடுத்து, ''அதை உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவும்'' என்று கூறினது எனக்குத் தெரியும். அப்பொழுது நான் அதை என்னுடைய கோட்டில் வைத்து அதைக் குறித்து மறந்து போனேன். 24. இப்பொழுது, அந்த... இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், என் தொண்டை சரியாயிருக்குமானால், ஞாயிறு காலை அல்லது ஞாயிறு இரவு ஒன்றில் கர்த்தருக்கு சித்தமானால் உங்களுக்கு நான் வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் செய்தியாக: அந்த தவறாத அடையாளம் என்பதின் பேரில் நான் பேச விரும்புகிறேன். சரிதானே? நான் இன்னுமாக... நான் அதை ஞாயிறு காலை என்று தீர்மானித் திருந்தேன், அப்பொழுது ஏதோ ஒன்று என் இருதயத்தில் கொழுந்து விட்டெரியச் செய்தது. அதை நான் மறுபடியுமாக செய்தியோடு கூட எடுக்க இயலாதிருந்தது. ஆகவே அதை நான் கர்த்தருக்கு சித்தமானால் ஞாயிறு காலை அல்லது ஞாயிறு இரவன்று எடுக்க விரும்புகிறேன். ஆகவே சகோதரன் நெவிலும் நானும் அந்த நேரத்தில் ஒன்றாக இருப்போம். 25. இப்பொழுது, சகோதரன் நெவில் கூறின விதமாக, உங்களது வாழ்த்து அட்டைகள் மற்றும் கிறிஸ்துமஸ் நினைவு கூறுதலுக்காக நானும் கூட உங்களுக்கு நன்றி கூற விரும்பு கிறேன். சகோதரன் மற்றும் சகோதரி ஸ்பென்சர், உங்களுடைய வாழ்த்து அட்டைகள் எனக்குக் கிடைத்தது. இங்கே சுற்றும் முற்றும் உள்ளவர்கள் எனக்கு அனுப்பின வாழ்த்து செய்தி அட்டைகள் மற்றும் எனக்கு அனுப்பின வெகுமதிகள் மற்றும் காரியங்களை, நான் மெச்சுகிறேன். நிச்சயமாக அதை நாங்கள் மெச்சுகிறோம். என் மனைவியினிட மிருந்தும், மற்றும் நான்நாங்கள்- மற்றும் பிள்ளைகளிட மிருந்து, நாங்கள் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு கிறிஸ்துமஸ் வெகுமதியை எங்களால் அனுப்பக் கூடுமானால் அது எங்களுக்கு பிரியம்தான், ஆனால் ஒரு பிரசங்கிக்கு அவ்விதம் செய்வது ஒரு கடினமான ஒன்றாகும், அப்படித்தானே? நல்லது, ஒருக்கால் சுற்றும்முற்றும் உள்ளவர் களுக்கு செய்ய முடியலாம். ஆனால் அநேகர் உள்ளனர், என்னால் அதைச் செய்ய இயலாது. உங்களுக்கு புரிகின்றதா? என்னால்... கூடுமானால் சிறுபிள்ளைகளுக்கு, ஒவ்வொருவருக்கும் ஏதாவ தொன்றை செய்ய விருப்பம் தான், ஆனால் அது ஒரு ..... ஊழியக்காரர்களால் அவ்விதம் செய்ய இயலாது. பாருங்கள்? ஏனெனில் அநேகம் பேர்களுக்கு வாங்க வேண்டியுள்ளதால் அது இயலாத ஒன்றாகும். ஆனால் நாங்கள் எல்லாரும், நானும் மற்றவர்களும் கூட நிச்சயமாகவே நம்முடைய சபையாரை மெச்சுகிறோம். ஆகவே, இந்த வருடத்தில் நான் நினைப்ப தென்ன வென்றால் நீங்கள் செய்த மகத்தான காரியங்களில் ஒன்று, இங்கே உங்கள் மேய்ப்பர்களில் ஒருவனாகிய என் பேரில் நீங்கள் கொண்டுள்ள அன்பும் மற்றும் என்றும் மறையாத விசுவாசமும் தான். 26. என் அருமையான சகோதரனே, சகோதரன் நெவில், அது உங்களுக்கும் கூட பொருந்தும். சகோதரன் நெவில் எப் போது மே அந்த மென்மையான ஆவியையுடையவராக ''இங்கே முன்னே வாரும் சகோதரன் பிரன்ஹாமே; இதோ பிரசங்க பீடம், இதை எடுத்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் , நான் உட்கார்ந்து கேட்கவே விரும்புகிறேன்” என்று கூறுவது போல .... அது எனக்கு பிடிக்கும். சகோதரன் நெவில் கொண்டிருக்கின்ற அந்த தாழ்மையான, தன்னலமற்ற விதம் எனக்கு பிடித்தமான ஒன்று. 27. உங்கள் எல்லாருடைய விசுவாசம், மற்றும்... உங்களால் எனக்கு செய்ய இயலுகின்ற நன்மை என்னவென்றால், எனக்காக நீங்கள் ஜெபம் செய்வதேயாகும். இப்பொழுது பெரிய நிகழ்ச்சி நிரலானது ஆரம்பிக்கும் முன்னர் ஆங்காங்கே சில கூட்டங்களை நான் நடத்தப்போகிறேன். அவைகள் கிலாஸ்கோ, கெண்டக்கியைச் சுற்றிலும் நடத்தப்படவிருக்கிறது என்று நினைக்கிறேன். அங்கே ஒரு இரவு நடத்துவேன். ஒருக்கால் கெண்டக்கியிலுள்ள காம்பெல்ஸ்வில்லில் ஒரு நாள் இரவு நடத்துவேன். அங்கே கெண்டக்கியில் இன்னும் வேறு சில இடங்களில் வில்லோ ஷேட் இடத்தில் ஒரு இரவு இருக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில்.... அதே போன்று வரவிருக்கின்ற அந்த கூட்டங்களைக் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நான் ஊழியத்திற்கு செல்லும் வரைக்கும் சிறிய கூட்டங்களாக நடத்தப்படுகின்ற இவைகள் சரியாக தீர்மானிக் கப்பட்டவுடன் நான் உங்களுக்கு தெரியப்படுத்துவேன். 28. முன்னொரு இரவு தேவனிடம் புதிதாக, என்னைத் தானே மறுபடியுமாக அர்ப்பணித்தேன். ஆகவே தேவனுடைய உதவியால் மற்றும் தேவனுடைய கிருபையால் நான் மரிக்கும் வரைக்கும் ஆயுதம் தரித்திருக்கிறவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். பாருங்கள்? அதை நான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் அதைச் செய்தேன். ஆகவே நான்... என்னால் இயலுகின்ற அளவிற்கு மேல் செல்வதால் சில சமயங்களில் எனக்கு களைப்பு உண்டாகிறது. இன்னுமாக என்னால் செல்ல முடியாத ஒரு கட்டத்திற்கு நான் வந்து விடுகிறேன். நீங்களெல்லாரும் அதை இங்கு மாத்திரமே காண்கிறீர்கள். ஆனால் அது அங்கே எப்படியாக இருக்கும் என்று நீங்கள் உணர்வதில்லை. ஒரு நகரத்திலிருந்து கூட, இல்லை; ஒரு பிரதேசத்திலிருந்து கூட, இல்லை; அமெரிக்காவில் கூட கிடையாது; ஆனால் உலகத்தில் (பாருங்கள்?), உலகம் முழுவது மாக. பாருங்கள்? இன்றிரவு கூட அநேகர் தொடர்பு கொள் கின்றனர், நான் சந்தித்ததோ அல்லது தொடர்பு கொண்டதோ ஆயிரக்கணக்கானோர் மாத்திரமல்ல, இலட்ச இலட்சகணக்கான மக்களுடன். பாருங்கள்? அவர்களில் எத்தனைப் பேர் வியாதியஸ் தராயிருந்தார்கள் என்பதைக் குறித்து நீங்கள் வியப்படைவீர்கள். பாருங்கள்? இன்னுமாக அவர்கள் அழைத்துக் கொண்டிருக் கின்றனர்; அது ஒரு பெரும் அழுத்தத்தை உண்டாக்குகின்றது. 29. ஆகவே உங்களெல்லாருடைய ஜெபங்களையும் நான் மெச்சுகிறேன். தேவனுடைய ஒத்தாசையாலும் கிருபையாலும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அருமையான மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் இருப்பதாக. இது சாண்டா கிளாஸாகிய கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல, இது இயேசுவுக்குத் தான் என்னும் என் கருத்தை நினைவில் கொள்ளுங்கள். சரியா? கிறிஸ்துமஸ் என்றால் ''கிறிஸ்து” என்பதே. நாங்கள் கடந்த இரவு பிரயாணம் செய்கையில், எல்லா வீடுகளும் மற்றவைகளும் ஜோடிக்கப் பட்டிருந்ததை பிள்ளைகளுக்கு காண்பித்தோம், அது அருமையாக இருந்தது. அப்பொழுது நான் நினைத்துக் கொண்டது, என் வீட்டின் மீது ஏதாவது எழுதவேண்டுமென்று விரும்பினால் அது: உங்கள் கிறிஸ்துமஸில் கிறிஸ்து இருப்பார் என நம்புகிறேன் என ஒரு செவ்வொளி விளக்கில் இருக்க வேண்டும் என்பதே. அது சரி. கிறிஸ்துமஸில் கிறிஸ்துவை வைத்தல். 30. இப்பொழுது, தேவனாகிய பிதாவே, கேள்விகளை இப்பொழுது நாங்கள் அணுகுகிறோம். நாங்கள் மிக மிக உத்தமமாக வருகிறோம். கர்த்தாவே, இந்த விலையேறப்பெற்ற மக்கள், தங்கள் இருதயங்களில் கொண்டிருந்த இந்த கேள்விகளை இங்கே வைத்துள்ளனர், ஒருக்கால் கட்டிடத்தில் இன்னும் அதிகமாக இருக்கலாம்; என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய அவர்கள் ஆவலுடன் உள்ளனர். பிதாவே, நான்- நான் ஒரு ஒன்றும் இயலாத ஒரு பதிலாக (substitute) உமக்காக இங்கிருக்கிறேன், உம்முடைய வார்த்தையை அறிந்து கொள்ள நீர் தாமே எனக்குதவுமாறு ஜெபிக்கிறேன், அது தாமே ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு திருப்திகரமான பங்கை கொண்டு வரும். இதை இப்பொழுது உம்முடைய கரங்களில் விடுகிறோம், உம்முடைய நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 31. இப்பொழுது இங்கேயுள்ள சகோதரன் பாட் அவர்களின் கேள்வி மிக மிக அருமையான ஒன்றாகும். சகோதரன் பாட், இதன் பேரில் நான் அப்படியே பேச ஆரம்பித்து விடலாம். உங்களில் யாருக்காவது ஒரு கேள்வி இருக்குமானால், நீங்கள் அதை எழுதி இங்கே வைத்து விடுங்கள், அல்லது - அல்லது உங்களிடம் காகிதத் துண்டுகள் இல்லையனில் சகோ. பாட் அதை உங்களிடம் கொண்டு வருவார். என்னால் முடிந்த வரையில் சிறந்த விதத்தில் பதிலளிக்க எனக்கு மகிழ்ச்சி தான். இப்பொழுது, சகோதரன் பாட், இது ஒரு அருமையான கேள்வி. இது ஒரு நகைச்சுவையான கேள்விபோல இருக்கும், ஆனால் இது ஒரு கேள்வியாகும். 101. பன்றிக்குள் சென்ற அந்த ஆவிகள் இப்பொழுது எங்கே இருக்கின்றன? அந்த பித்து பிடித்த வெறியனிலிருந்து இயேசுவால் வெளியே விரட்டப்பட்டு அந்த நாளிலே பன்றிக் கூட்டத்திற்குள் சென்ற ஆவிகள் எங்கேயுள்ளன? 32. நல்லது, சகோதரன் பாட், எனக்குத் தெரிந்த வரையில்... இப்பொழுது, நாம் பிசாசியலில் ஆரம்பிக்கவுள்ளோம். இப்பொழுது, பிசாசியல் ஒரு மகத்தான காரியமாகும். (இப்பொழுது, உங்களில் சிலர் கடிகாரத்தை கவனித்துக் கொண்டேயிருங்கள். ஒரே கேள்வியின் பேரில் நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதபடிக்கு பாருங்கள்). ஆனால் அந்த பிசாசின் வல்லமைகள், லேகியோன் என்றழைக்கப்பட்ட அந்த மனிதனில் இருந்த அந்த ஆவிகள். அது சரிதானே? அவனுடைய பெயர் லேகியோன். ஏனெனில் எபிரெய மொழியில் லேகியோன், என்பதற்கு 'அநேகம்'' என்று அர்த்தம். பாருங்கள்? அந்த ஆவிகள் அநேகம் அங்கே இருந்தன. 33. அந்த அருமையான மனிதனுக்குள் இருந்த அந்த ஆவிகள் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவனாக ஆக்கியது. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை கண்டிருந்தாலோ அல்லது அவர்களோடு ஏதாவது செய்திருந்தாலோ, அவர்களுடைய பலம் அதிக அதிகமாக இருப்பது தெரியும். ஏனெனில் அவர்கள் பிசாசினால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியமான மனிதனை அடக்க முயற்சித்திருப் பீர்களானால், ஓ, அவனை அடக்க அநேக பலசாலி மனிதர்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியம் பிடித்த மனிதருக்கு தங்கள் பலத்தைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு பலம் இருக்கும். 34. இப்பொழுது, ஒரு மனிதன் முடமாயிருந்து பரிசுத்த ஆவியானவர் அவர்களைதம் கட்டுக்குள் எடுத்துக் கொள்கையில் - ஒரு மனிதனுக்கு அவனுடைய மனித பலத்தை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக்க பிசாசானவனுக்கு அப்படிப்பட்ட ஒரு வல்லமை இருக்குமானால் - தேவனாலே ஒரு மனிதனுக்குள் எவ்வளவாக வல்லமையை வைக்க முடியும் என்றறிவீர்களா? பாருங்கள்? அவன் அநேக வருடங்களாக முடமாக்கப்பட்டு படுத்துக் கிடக்கையில் அவனை தேவ பலத்தில் நடக்க செய்வது அவன் மீது வருகின்ற தேவ வல்லமையே. அவனுடைய எலும்புகள் நேராகின்றன; அவனுடைய கைகள் நேராகின்றன; அவன் ஒரு புதிதான வாலிப மனிதனைப் போன்று நடக்கிறான், ஏனெனில் பரிசுத்த ஆவியின் வல்லமை அவன் மீது இருப்பதால் தான். 35. இப்பொழுது, இவைகள் மிகவுமாக தீய ஆவிகளாக இருந்ததினால் அந்த மனிதனை அவர்கள் சங்கிலிகளினால் கட்ட வேண்டியதாயிருந்தது, ஆனால் அவனோ அச்சங்கிலிகளை முறித்து தகர்த்துப்போடுவான். அவன் அச்சங்கிலிகளை முறித்து தகர்த்துப் போட்டுவிடுவான் என்று அவர்கள் கூறினர். அவனை எதைக் கொண்டும் கட்டிப் போட முடியவில்லை. அவனுடைய நிலையானது மிக மிக மோசமான ஒரு நிலையாயிருந்தது, ஏனெனில் அவனுக்குள் பிசாசுகளான லேகியோன் இருந்தது. அப்பொழுது அவன். இயேசு கடலைக் கடந்து கதரேனருடைய நாட்டுக்குள் வந்து கல்லறைகளின் வழியாக நடக்கத்து வங்கின போது. ஆகவே அவன் மிகவும் தீயவன் ஆவான், அந்த மனிதன் அல்ல (பாருங்கள்?), அந்த மனிதன் சரியாகத் தான் இருந்தான். 36. அந்த மனிதன் செய்ததல்ல. அவ்விதமாகக் காணப்படுகின்ற ஒரு மனிதனை நீங்கள் காண்பீர்களானால், அந்த மனிதன் தான் அவ்வாறு நடந்து கொள்ளுகிறான் என்று ஒரு போதும் நினைக்கா தீர்கள்; அவ்வாறு செய்வது அந்த மனிதனுக்குள்ளிருக் கின்ற பிசாசுதான். இப்பொழுது, ஓரேகான் என்ற இடத்தில் அன்றொரு இரவில் என்னைக் கொல்ல மேடையின் மீது வந்த அந்த வெறிப்பிடித்த மனிதன். அந்த மனிதன், நான் - ஏறக்குறைய பத்தாயிரம் மக்களிற்கு முன்பாக அவன் என்னிடமாக வந்து என் முகத்தில் எச்சியைத் துப்பிக்கொண்டு "புல்லுக்குள் மறைந்து கிடக்கும் பாம்பு” என என்னை அழைத்து கொண்டிருந்த அந்த மனிதன், இல்லை, அது அதுவல்ல, அந்த மனிதன் அவ்வாறே செய்யவில்லை. என்னைப் போல அல்லது உங்களைப் போலவே, உணவு உண்டு, குடித்து உறங்கி, ஒருக்கால் ஒரு குடும்பத்துடன் இருந்து அன்பாயிருக்கின்ற ஒரு மனிதன் தான் அவன். ஆனால் அவனுக்குள்ளிருந்த அந்த பிசாசு தான் அதைச் செய்து கொண்டிருந்தது. புரிகின்றதா? 37. ஒரு தவறான நோக்கத்தைக் கொண்டு ஒரு பிசாசை நீங்கள் வெளியே துரத்த முடியாது. அன்பைக் கொண்டுதான் அதை செய்ய முடியும். உலகத்தில் இருக்கின்ற எல்லா சக்தியைக் காட்டிலும் மிக வல்லமையுள்ள ஒரு சக்தி அன்பு தான். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால் பகைப்பது, வெறுப்பது எப்பொழுதுமே பிசாசின் காரியமாகும். பகைத்தல், வெறுத்தல் பிசாசினால் உண்டாகின்ற ஒன்று. மக்கள் யாரையாவது கடுமையாக வெறுத்தால், நினைவில் கொள்ளுங்கள், இழிவாகக் கருதுதல் அல்லது கடும் வெறுப்பை காண்பித்தால் அது ஒரு மோசமான பிசாசாகும். நீங்கள் அவ்வாறு செய்யவே கூடாது., 38. நீங்கள் நினைவு கொள்ளுங்கள் அந்த - அந்த... இயேசு தம்முடைய பிரசங்கத்தில் கூறினது, நீங்கள் ஜெபம் செய்கையில், ''எங்கள் பரலோகப் பிதாவே, '' .... அப்பொழுது அவர் கீழே வந்த போது, அவர், ''ஒவ்வொரு மனுஷனுடைய தப்பிதத்தை உன்னுடைய முழு இருதயத்துடனே நீ அவனுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பரம பிதா உங்கள் தப்பிதங்களிலிருந்து உங்களை மன்னியாதிருப்பார்'' என்று கூறினார். பாருங்கள்? நீங்கள் அவ்வாறு செய்யக் கூடாது. 39. ஆனால், வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகின்ற வல்லமையை பிசாசு உருவாக்கி (பாருங்கள்?) மேடையின் மீது ஓடச் செய்து என்னைக் கொல்லப்பார்த்தான், சரீரப்பிரகாரமாக அந்த மனிதனால் செய்ய முடியும், அவன் அநேக மடங்கு பலம் வாய்ந்தவனாக... அவன் என்னை அப்படியே தன்னுடைய இரண்டு விரல்களால் அந்த பெல்ட்டை தூக்குவது போல் என்னை உயரத் தூக்கியிருக்கலாம், ஏனெனில் அவன் 260 அல்லது 270 பவுண்ட் எடையுள்ளவனாக இருந்தான்; அவன் ஆறறை அடி அல்லது ஏழு அடி உயரமிருந்தான், ஒரு மகத்தான பெரிய ஆள். அவன் அப்படியே... தெருவில் ஒரு பிரசங்கியை தன் கையின் முட்டியால் அடித்து கழுத்துப்பட்டை எலும்பையும் தாடையெலும்பையும் உடைத்து அந்த பிரசங்கியை காயப்படுத்தினான், அவர் மருத்துவமனைக்கு கொண்டு போகப் பட்டார். அவன் பிரசங்கிகளை வெறுத்தான். ஆகவே அப்பொழுது சரியாக அந்த இடத்திலேயே என்னைக் கொன்று போட ஓடி வந்தான். பாருங்கள்? 40. இப்பொழுது, கதரேனருடைய நாட்டில் பன்றிக்குள் அனுப்பப்பட்ட இந்த ஆவிகளில் சில அந்த மனிதனுக்குள் இருந்தன. அப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய மக்களில் சிலர் இங்கே அந்த மனநலக் காப்பகத்தில், தங்கள் தலைகளை சிறு அறைகளிலும் மோதிக்கொண்டிருக்கின்றனர். நினைவில் கொள்ளுங்கள், பிசாசுகள் மரிக்காது. பிசாசுகள் எப்பொழுதும் வாழும், ஆனால் பிசாசுகள் கட்டாயம் மரிக்க வேண்டிய ஒரு சமயமானது இருக்கப் போகின்றது. அவைகள் முழுவதுமாக அடியோடு நிர்மூலமாக்கப் படும். ஆனால் இப்பொழுது அவை உயிரோடிருந்து மானிடர்களில் அநேக சந்ததிகளாக கிரியை செய்து வருகின்றன. அவைகளில் சில புற்று நோய் வியாதியின் உருவில் வரும்; சில காச நோயாகவும் வரும். அவை சரீரத்தில் புகுந்து கொள்ளும், அவை ஒரு நபருக்குள் புகுந்து கொள்ளும் வரைக்கும் வல்லமையற்ற வைகளாக இருக்கின்றன. அவைகளால் ஒரு நபரின் மூலமாகத் தான் கிரியை செய்ய முடியும், இது நமக்கு மற்றொரு சிந்தனையை அளிக்கிறது, அது பரிசுத்த ஆவியைக் குறித்ததாகும். அது பூமியை மூடிக் கொண்டிருக்கிறது, ஆனால் அது உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் வரும் வரை ஏறக்குறைய உதவியற்றதாக அது காணப்படுகிறது. 41. தேவன் உங்கள் பேரிலும் என் பேரிலும் முழுவதும் சார்ந் திருக்கிறார். பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர். பூமி முழுவதும் தேவனுடைய ஆவியால் நிரம்பியுள்ளது, அது ஊற்றப்பட்டுள்ளது. ஆனால் அது நமக்குள்ளாக, மானிடப் பிறவிகளாகிய நமக்குள் வரும் வரைக்கும் அதனால் - அதனால் கிரியை செய்ய முடியாது. 42. ஆகவே நாம் அவனுக்கு கீழாக கிரியை செய்யத்தக்கதாக பிசாசானவன் நம்மை ஆட்கொள்ள விரும்புகிறான். ஆகவே அவன் மிருதுவான முறையில் அவன் செயலாற்றத் தொடங்குகையில், அவன் பாவத்தில் ஆரம்பிக்கின்றான். அவன் அவைகளை ஒரு நீதியான மனிதனுக்குள் வைக்கத்துவங்குகையில், ஒரு அருமை யான மனிதன், அவனை அப்படியே நல்லவனாகவே இருக்க முயற்சி செய்ய வைத்து விடுவான்; கூடுமானால் அவன் மரிக்கும் வரைக்கும் அவன் அப்படியே நல்லவனாகவே இருக்கும் படிக்குச் செய்து விடுவான், அவ்விதமாகவே செய்ய அவன் விரும்புகிறான். அவன் இந்த மனிதனை ஆட்கொள்வான், ஏனெனில் நீ எவ்வளவாக நீதியாக இருந்தாலும் சரி, எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு ஒழுக்கமுள்ளவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு சுத்தமுள்ளவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு நேர்மையுள்ளவனாக இருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல, நீ மறுபடியும் பிறக்காவிட்டால் உன்னால் பரலோகத்தை அடைய முடியாது. இயேசு அவ்விதம் கூறினார். ஆகவே... அது... நீ மறுபடியும் பிறக்கத்தான் வேண்டும், உனக்கு புதுபிறப்பளிக்கப்பட வேண்டும், இல்லையென்றால் நீ பரலோகத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது - அல்லது கிறிஸ்துவினிடம் வரவோ உலகத்தில் எந்த ஒரு வழியும் கிடையாது. 43. இப்பொழுது, நான் சற்று முன்னர் நான் கூறினது, உங்களுடைய சிந்தனையில் மற்றுமொரு கேள்வியைத் தோன்றச் செய்யும், நான் உங்களுக்கு போதித்தது, அது இன்னுமாக ... நான் விசுவாசிப்பதில்லை. ஒரு நித்திய ... ஒரு நித்திய எரிகின்ற நரகம் உண்டென்று வேதாகமம் போதிக்கிறதென்று நான் விசுவாசிப்பதில்லை. அவ்வாறு அது போதிப்பதில்லை, ஏனெனில் நரகமானது நித்தியமானதாக இருக்குமானால் அங்கே செல்கின்ற மக்கள் நித்தியமாக தண்டிக்கப்பட முடிகின்ற ஒரே வழி அவர்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்க வேண்டி யிருக்கும். ஆனால் ஒரேயொரு விதமான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அது தேவனுக்குள் இருக்கின்ற ஒன்று மாத்திரமே. புரிகின்றதா? ஆகவே அவர்கள் அழிக்கப்பட வேண்டும் (பாருங்கள்?); அதாவது அவர்களுடைய சரீரப் பிரகாரமான பாகம் அழிக்கப்படும். அதற்கு பிறகு அவர்களு டைய ஆவிக்குரிய பங்கு அழிக்கப்பட்டுவிடும். அது முழுவதுமாக அழிக்கப்படும்; பிறகு அதைக் குறித்த எந்த ஒரு காரியமும் இருக்காது. ''வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும்'' என்று வேதம் கூறுகின்றது. அவை முற்றிலும் அழிக்கப் பட்டுவிடும். 44. பிறகு, பரலோகத்தில் அளவு கோள்கள் உள்ளன என்றும் அவை எல்லாம் ஒரே விகிதத்தில் ஆக்கப்படமாட்டாது என என்னால் நிரூபிக்கமுடியும், ஆனால் உங்களுக்கோ சரிசமமான நித்திய ஜீவன் உண்டு. ஆனால் பூமியில் ராஜாக்கள் தாங்கள் மகிமையையும் கனத்தையும் கொண்டுவருவார்கள் (வெளிப் படுத்தல் 22) தங்களுடைய கனத்தையும் மகிமையையும் நகரத்திற்குள்ளே கொண்டு வருவார்கள் என்று வேதம் கூறுகின்றது. ஆகவே புதிய பூமியில் ராஜாக்கள் மற்றும் அதிபதிகள், இருப்பார்கள் என்று அது நிரூபிக்கின்றது. இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார். அவர்கள், "எங்கள் தகப்பனையும் தாயையும் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்றார்கள். 45. அவர், ''அந்நாளிலே நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாக பன்னிரண்டு சிங்காசனங்கள் மேல் விற்றிருப்பீர்கள்” என்று கூறினார். பாருங்கள், அது எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாக இருக்கப் போகின்ற ஒரு வரப்போகின்ற வேறொரு பூமிக்குரிய ஒழுங்காகும். அதில் பாவம் இருக்காது, ஆனாலும் நகரங்களில் அவர்களுக்கு அதிபதிகள் மற்றும் இன்னும் மற்றவர் உண்டு, அவை எல்லாமே நித்திய ஜீவனின் வழியிலேயே செய்யப்படும். 46. ஆனால் துன்மார்க்கர் சரீரத்தில் செய்த கிரியைகளுக்குத் தக்கதான தாங்கள் செய்த பாவங்களின்படியே தண்டிக்கப்படுவார்கள், பிறகு அவர்கள் முழுவதுமாக முற்றிலுமாக அழிக்கப்பட்டுப்போவார்கள். இப்பொழுது அதை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள். எழுதி குறித்து வைத்துக் கொண்டிருப்'பவர்களே, அதை நினைவில் கொள்ளுங்கள். 47. ஒரே ஒரு விதமான நித்திய ஜீவன் தான் உண்டு என்றும் நாம் அதைத் தான் நாடித் தேடுகிறோம் என்று நான் கூறுவது ஆணித்தரமாக பதிவு செய்யுங்கள்; மேலும் தேவன் ஒருவரே நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறார். இரண்டு விதமான நித்திய ஜீவன் என்பது கிடையாது, ஒரேயொரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது மாத்திரமே ஜீவிக்கின்றது. மேலும் நினைவில் கொள்ளுங்கள், இதையும் கூட உங்கள் குறிப்பில் எழுதிக் கொள்ளுங்கள்: துவக்கம் என்பதைக் கொண்டதாக உள்ள உண்டாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கின்றது. துவக்கத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொன்றிற்கும் ஒரு முடிவு உண்டு, துவக்கமே இல்லாத ஒரு காரியத்திற்கு முடிவே கிடையாது. ஒன்றிற்கு மாத்திரம் தான் துவக்கம் என்பதே கிடையாது, அதுதான் தேவன் ஆகும். உயிர்த்தெழுதலில் எழுவதற்கான ஒரேயொரு வழி - உங்களுக்குள் அந்த நித்திய ஜீவன் இருக்கவேண்டும். பாருங்கள்? நீங்கள் திரும்பி மறுபடியுமாக வர ஏதுவான ஒரேயொரு வழிதான் உண்டு, அது துவக்கம் என்பது இல்லாத ஏதோ ஒன்று தான். ஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் போது, ஒருபோதும் துவங்காதிருந்த மற்றும் முடிவைக் கொண்டிருக்க முடியாத ஒரு ஜீவன் உங்களுக்குள் வாசம் செய்யும்; நீங்கள் அந்த ஜீவனை உங்களுக்குள் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்கள், அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்று தேவனுக்கு குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள். பாருங்கள்? தேவனால் மரிக்க முடியாதிருப்பதைப் போலவே உங்களாலும் மரித்துப்போக முடியாது, ஏனெனில் நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக உள்ளீர்கள். 48. இங்கே முன்குறித்தலைக் குறித்த ஒரு கேள்வியை சற்று முன்னால் நாங்கள் கொண்டிருந்தோம், அது அந்த அதே காரியத்துடன் சரியாக இதைக் கொண்டு வருகின்றது. நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள்; ஆகவே தேவன் தம்மைத் தாமே அந்த மகத்தான அக்கினிஸ்தம்பத்தில் பகிர்ந்து பிரித்துக்கொண்டு, அதில் ஒவ்வொன்றும் அந்த ஒவ்வொரு நபருக்குள்ளும் செல்லுமானால், இன்னும் இன்னுமாக அதே விதமாகத்தான் அது செய்கின்றது. நாம் அதை, நாம் கொண்டிருக் கின்ற அனுபவத்தின் மூலமாகவும், வேதாகம போதனைகளின் படியேயும், விஞ்ஞான ஆராய்ச்சியின்படியேயும், அதைக் காண்பிக்க ஏதுவான ஒரு புகைப்படத்தைக் கொண்டு தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் தம்மைப் பகிர்ந்தளிக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும் என்று இயேசு கூறினார். நம்மால் மரிக்க முடியாது. ஒரு கிறிஸ்தவனுக்கு மரணம் என்பது கிடையாது; "என் பேரில் விசுவாசம் கொண்டிருக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் (பாருங்கள்?) மரிப்பதில்லை 49. மரணம் என்கின்ற வார்த்தைக்கு "பிரிவினை'' என்று அர்த்தம். இப்பொழுது, சரீரப்பிரகாரமாக, நாம் நம்முடைய சரீரப்பிரகாரமான பார்வையிலிருந்து நாம் வேறு பிரிகிறோம், ஏனெனில் அது இன்னுமாக பாவத்தில் இருக்கின்றது, ஆனால் நம்முடைய ஆவியோ தேவனிடமிருந்து பிரிக்கப்பட முடியாதிருக்கின்ற தேவனுடைய ஆவியாகும், ஏனெனில் நாம் தேவனுடைய பாகமாக இருக்கின்றோம். நாம் - நாம் கொண்டு ...... தேவனுடைய அந்த சிந்தைக்குள்ளாக நாம் மறுபடியுமாக திரும்பக் கொண்டு வரப்படுகிறோம். தேவன் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் பரிபூரணமானதும் நித்தியமானதாகும். ஆகவே அவரைத் தொழுது கொள்ளப்போகும் ஒரு இராஜ்யத்தின் மக்கள் பேரிலேயே தேவனுடைய மெய் மூலமான சிந்தனைகள் சென்றன, அந்த மெய் மூலமான சிந்தனைகள் நித்தியமாகும். பாருங்கள்? அவர்களால் அழிந்து போகவே முடியாது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் நித்தியமானதாகும். இயேசு, ''வானமும் பூமியும் ஒழிந்து போகும்; என் வார்த்தைகளோ ஒரு போதும் ஒழிந்து போவதில்லை,'' என்றார். பாருங்கள்? அவைகள் தேவனோடு நித்தியமானதாக உள்ளன. ஆகவே, ''நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் ... " பாருங்கள்? நாம் அவருடைய வார்த்தையின் ஒரு பாகமாகிறோம், அவருடைய ஜீவனின் பாகமாகிறோம், ஏனெனில் நாம் அவருடைய மாம்சத்தின் மாம்சமாகவும், அவருடைய எலும்பின் எலும்பாகவும், அவருடைய ஜீவனின் ஜீவனாகவும் இருக்கிறோம். அப்படியானால் தேவனால் தம்மைத்தாமே அழிவிற்க்கு ஆளாக்கி கொள்ளமுடியாது. அதே போன்று நாமும் அழிந்து போகவே முடியாது. அப்படித்தான் பரிசுத்த ஆவியும் இருக்கின்றது. 50. ஜார்ஜியாவிலிருந்து வந்துள்ள இந்த சிறிய நபர், சகோதரன் இவான்ஸ் - அவர் நாடு முழுவதும் எல்லா இடத்திற்கும் சென்று வந்துள்ளார். மேலும் இவர் என் அருமை நண்பராகிய ஓரல் ராபர்ட்ஸினுடைய தீவிர ஆதவராளரும் கூட; அவருடைய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மற்றும் அவர் செய்த எல்லா காரியங்களுக்கும் இவர் ஆதரவளித்தவர். ஆனால் அன்றொரு நாள் அவர் என்னிடம் ''சகோதரன் பிரன்ஹாம், நான் சகோதரன் ஜாக்கருடைய கல்லூரிக்கு சென்றேன். நான் எல்லா இடத்துக்கும் சென்றேன்; அங்கே மூன்று மாதங்கள் நான் தங்கியிருந்தேன். நான் வேட்டைக்குச் சென்றேன்; அநேக இடங்களுக்குச் சென்றேன், அவை ஒவ்வொன்றும், அதே காரியத்திற்குத் தான் திரும்பவுமாக கொண்டுவந்தன. எந்த ஒரு நிச்சயமும் தருகின்ற ஒரு இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவேயில்லை (உங்களுக்கு புரிகின்றதா?) நான் இதைச் செய்வேனானால், அல்லது அதைச் செய்வேனானால், அல்லது இங்கே நான் என்ன செய்யமுடியும், அல்லது என்னால் முடியுமா, அல்லது என்னால் முடியாதா என்றிருந்தேன், உங்களுடைய போதனைகளை கேட்கும் முன்வரை அவ்விதமாக நான் இருந்தேன். கேட்ட பிறகு எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது.'' என்றார். ஏனெனில் அவன் மரணத்திலிருந்து ஜீவனிற்குள் வந்து விட்டான். அவன் தனக்குள்ளாக நித்திய ஜீவன் வாசம் செய்ய பெற்றிருக்கிறான். ஆகவே தேவனே மரித்தாலொழிய அவனால் மரிக்க முடியாது. சரியாக அது வேதாகமப் பூர்வமானது ஆகும். பாருங்கள்? அவன் என்றென்றுமாக பாதுகாக்கப்படுகிறான், ஏனெனில் அவன் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறான். 51. இப்பொழுது, அப்படியென்றால் நீங்கள் பாவம் செய்து பிறகு அதை சரிசெய்து கொள்ளலாம் என்றல்ல, ஏனெனில் நீங்கள் பாவம் செய்கையில் உங்களுடைய பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்கள். முற்றிலும் சரி. ஆனால் நித்திய ஜீவன் உங்களுக்குள்ளாக இருக்கிறதென்றால், நீங்கள் என்றென்றுமாக ஜீவிக்கிறீர்கள். இயேசு ''என்னுடைய வசனத்தைக் கேட்டு (பரி. யோவான் 5:24) - என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்புக்கு வருவதில்லை - ஆனால் அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்,'' என்றார். பாருங்கள்? ''என் பிதா ஒருவனை முதலாவது இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரான். என்னிடத்தில் வருகின்ற எல்லா ரையும்... என் பிதாவினால் கொடுக்கப்பட்டயாவும் என்னிடத்தில் வரும்.'' அது சரி. ''என் பிதாவினால் கொடுக்கப்பட்ட யாவும் என்னிடத்தில் வரும்; அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போவதில்லை. நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து, கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்.'' (பரி. யோவான் 6) ஓ, எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட நிச்சயம். பாருங்கள்? ஆகவே நீங்கள் மரணத்தைக் குறித்து திகிலடையவோ அல்லது அதிசயப்பட வேண்டிய அவசியம் என்பதோ உங்களுக்குத் தேவையில்லை. 52. நாம் அவருடைய பிள்ளைகள் என்கின்ற அந்த பரிபூரண நிச்சயத்தை தேவன் நமக்கு அளித்துள்ளார். நீங்கள் உங்கள் பிள்ளைகளை திருத்துவது போல, நான் என் பிள்ளைகளை திருத்துவது போல, நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதால் அவர் நம்மைத் திருத்துகிறார். பிள்ளைகள் தவறு செய்யும் போது நாம் அவைகளைத் திருத்துகிறோம். என் பிள்ளைகள் தவறு செய்யும் போது ஒரு தகப்பன் என்கின்ற வகையில் அப்பொழுது அவர்களை திருத்துவது என் கடமையாயிருக்கிறது. அப்படியானால், தேவனுடைய பிள்ளைகள் தவறு செய்வார்களானால், ஒரு தகப்பன், பிதா என்கின்ற வகையில் அவருக்கும் அது ஒரு கடமையாகும், ஆகவே அவர் உங்களை திருத்துவார். அதை நினைவில் மாத்திரம் கொள்ளுங்கள், நீங்கள் திருத்தப் படுவீர்கள். ஆகவே நீங்கள் அவருடைய பிள்ளையாயிருக்கும் வரையிலும் உலகம் உங்களைத் தொடாதிருப்பதாக (அது சரி!) ஏனெனில் அவர், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்தில் அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 53. இப்பொழுது, சகோதரன் பாட், உங்களுடைய கேள்விக்கு திரும்பவுமாக வருகின்றேன். அந்த மனிதனை பித்து பிடித்த வெறியனைப் போன்று ஆக்கி, அவனை விட்டு வெளியே சென்ற அந்த ஆவிகள் (பாருங்கள்?) இன்றைக்கும் மக்களுக்குள் அதே காரியத்தைச் செய்கின்றன. பாருங்கள்? அவைகள் அந்த ஆவிகள் தாம் - ஆயிரமாயிரக் கணக்கானவைகள். ஆகவே அந்த பிசாசு ஒரு சிறு அபினி போதை பொருளைப் போல (opium) உள்ளே வருகின்றான். ஒரு சிறு பள்ளி மாணவிக்கு அவர்கள் செய்வது போல; முதல் காரியமாக அவளை சிகரெட் புகைக்க வைப்பார்கள். பாருங்கள்? அந்த பழக்கம் அவளை ஆட் கொள்ளத்துவங்கும். அடுத்ததாக அது என்ன செய்யு மென்றால் இன்னும் கிளர்ச்சி ஊக்கமுடைய சிகரெட்டுகள் புகைக்கும்படிச் செய்யும். அதன் பிறகு, முதலாவது காரியத் திற்கு பிறகு அது கஞ்சா புகைப்பதில் வந்து நிற்கும்; அதற்கு பிறகு இன்னும் கடுமையான அபின், டோப், போதை பொருள் பழக்கத்திற்குள் கொண்டு சென்று விடும். பிறகு அது என்ன செய்யும்? அது அவர்களை பித்து பிடித்த நிலைக்கு கொண்டுச் சென்று விடும். அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களாகின்றனர், பிசாசு அவர்களை பிடிக்கின்றன. புரிகின்றதா? 54. ஆகவே பிசாசானவன் சிகரெட்டுகள் புகைப்பதில் இருக்கின்றான். அது அவனுடைய சிறிய சாதாரண மென்மை யான வடிவமாகும். இப்பொழுது, அவன் உன்னை நாகரீகப் பாங்கில் முனைப்பான ஒருவன் என்றும் நீ அதைப் பிடித்துக் கொள்வாய் என்றும் அவன் கண்டறிந்துக் கொள்வானானால், அந்த பிசாசானவன் நீ சிகரெட்டுகளைத் தவிர வேறொன்றையுமே காண விடமாட்டான். பாருங்கள்? எவ்வளவு காலம் சிகரெட்டு பிடிக்கிறீர்களோ அவ்வளவு காலம் தன் பிடியில் வைத்திருந்து உங்கள் ஜீவன் அறுந்து போகும் படிக்குச் செய்து விடுவான், ஏனெனில் தேவன் கூறுகின்ற வரையில் உங்களால் செல்ல முடியாது என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் நீங்கள் பிரசங்கத்திற்கு மேல் பிரசங்கம், செய்திக்கு மேல் செய்தி, அதை குறித்த ஆணித்தரத்திற்கு மேல் ஆணித்தரமான செய்தி, அதைக் குறித்த எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கையை கேட்கலாம்; அவன் உங்களை புறம்பாக்கி, உங்கள் மனதை வேறெதின் மேலேயோ செலுத்தி விடலாம், நீங்கள் புகழ்பெற்ற ஒருவராக இருக் கிறீர்கள் என்பதின் பேரில் கூட, அல்லது நீங்கள் அந்த பழக்கத்தை கொண்டிருக்கத்தான் வேண்டும் அல்லது அதைப் போன்ற ஒரு எண்ணத்தை அளித்து, நீங்கள் மரித்துப்போகும் வரை உங்களை அதற்குள்ளாகவே வைத்திருப்பான். அல்லது அவன் உங்களை ஒரு சபைக்குள் சேர்ந்துகொள்ளும்படிக்குச் செய்து “நான் ஒரு நல்ல மனிதனாக இருக்கப் போகிறேன். நான் ஒரு நல்ல... நான் சபைக்குச் சென்று சபையை சேர்ந்து கொள்ளப் போகிறேன்'' என்று கூறும்படிக்குச் செய்வான். உங்களை அப்படியே அந்த சபைக்குள்ளாக இருக்கும்படிக்கு அவன் செய்வானென்றால், அவன் செய்ய வேண்டியது அவ்வளவே தான். உங்களை அவன் தன் கட்டுக்குள் வைத்துள்ளான், ஏனெனில் நீங்கள்... இயேசு, ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் அவன் தேவனு டைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே (முற்றிலுமாகவே, முற்றிலுமாகவே) உனக்குச் சொல்லுகிறேன்,'' என்றார். மற்றொன்றை உங்களுக்கு நான் காண்பிக்கட்டும். இன்றிரவு நான் பேசத்தக்கதாக போதுமான அளவுக்கு தொண்டைக்கு ஓய்வு கொடுத்து, என் மனதிற்கு சற்று ஓய்வளிக்க, ஒரு பிரயாணத்தை நாங்கள் மேற்கொண்டிருக் கையில்- பிற்பகல் வேளையில் ஒரு சகோதரனுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன், அவர் தான் சகோதரன் உட். 55. இப்பொழுது கவனியுங்கள்! நாம் தானியப் பயிரைக் குறித்து சற்று நாம் பார்க்கப் போகிறோம். அது நாட்டில் இருக்கின்ற தானிய பயிர்களிலேயே மிகச் சிறந்த ஒரு தானியப்பயிராக உள்ளது. இப்பொழுது நான் ... ? ... தானியம் அல்லது கதிர் என அழைக்கலாம், நீங்கள் அல்லது அதை எவ்விதமாகிலும் அழைக்கலாம். நான் - நான் இதை இங்கே கிளார்க் கோட்டப்பகுதி சந்தையில் கொண்டு செல்வேனானால் இந்த தானிய பயிருக்கு நீல ரிப்பன் பரிசை வெல்வேன். இருப்பதிலேயே மிகச் சிறந்த ஒரு தானியப் பயிராகும், அது யாருமே பார்த்திருக்க முடியாத மிக பூரணமான தானியமாகும். நான் இதற்கு நீல ரிப்பன் பரிசை வெல்வேன். நான் இதை பிளாய்ட் கோட்டப் பகுதிக்கு கொண்டுச் செல்வேன்; நான் இதை ஹாரிசன் கோட்ட பகுதிக்கு கொண்டு செல்வேன். நான் இதை மாநிலத்திற்கு கொண்டுச் செல்வேன், பிறகு நான் இதை தேசத்திற்கு கொண்டுச் செல்வேன். எல்லா இடத்திலும் இது நீல நிற ரிப்பன் பரிசை வெல்கின்றது. இது தான் ரிப்பன் பரிசை வெல்கின்றது. இது தான் மிகவும் பரிபூரணமான தானிய பயிராயிருக்கிறது. ஆகவே விஞ்ஞானிகள் தங்களுடைய மகத்தான நுண்நோக்கி கண்ணாடி களால் இதை உற்று நோக்கி, இதை ஆராய்வார்கள். பாருங்கள்? அந்த ... இது சரியான அளவு சாம்பலுப்பு, சரியான அளவிலான சுண்ணாம்புச்சத்தும், மற்றும் - மற்றும் சரியான அளவிலான ஈரப்பதமும் கொண்டதாக உள்ளது. இந்த தானியப் பயிரில் காணப்படுகின்ற ஒவ்வொரு காரியமும் சரியாக மிகப் பரிபூரணமாக காணப்படுகிறது. இப்பொழுது நீங்கள், ''நான் இதை எடுத்து விதைத்து இதிலிருந்து வேறொரு சிறந்த தானியத்தை நான் பெறுவேன்” எனக் கூறலாம். ஆகவே நீங்கள் அதை எடுத்து நிலத்தில் விதைக்கின்றீர்கள். அந்த தானியமானது, அந்த பரிபூரண தானியமானது தனக்குள்ளாக ஜீவ அணுவைப் பெற்றிருக் காவிடில், அது நிலத்திலேயே கிடந்து அழுகிப் போகும், அதன் முடிவும் அதுதான். அது எவ்வளவு பூரணமான ஒன்றாக இருந்தாலும் சரி, அது திரும்பவுமாக முளைத்தெழும்பாது. அதற்குள்ளாக உள்ள ஒரு புதிய ஜீவனால் அன்றி அது ஒருபோதும் மறுபடியும் முளைத்தெழும்பாது. 56. நீங்கள் ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளலாம் ..... இப்பொழுது, உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் இதை நான் கூறவில்லை, நான் .... இது சபை, இது என் கூடாரம், ஆதலால் நான் ஒரு பறவையைப் போல சுதந்திரம் கொண்டவனாக இருக்கிறேன். பாருங்கள்? இப்பொழுது, இந்த காரியத்தைக் குறித்ததை நீங்கள் நினைவில் வைத்திருக்க நான் விரும்புகிறேன், ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம்; அவன் தன்னுடைய தசமபாகங்களை செலுத்தலாம்; நேர்மையுள்ள வனாக அவன் இருக்கலாம்; விதவைகளுக்கு அவன் உதவி செய்யலாம்; அநாதைகளுக்கு அவன் உதவலாம்; ஒரு சபை அங்கத்தினனாக அவன் இருக்கலாம். அந்த மனிதனைக் குறித்த ஒரு சிறு குறைபாடும் கூட உன்னால் கண்டுபிடிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் ஒரு காரியம் சம்பவிக்கும்போது அவன் தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிற்குள் கை விட்டு, அவனிடம் இருக்கின்ற கடைசி காசையும் எடுத்து ஏழைக்கு கொடுப்பவனாக இருப்பான். அவன் பல்வேறு தடங்கல்களுக் கிடையிலும் உன்னோடு கூட துணையாக அவன் இருப்பான். மற்றவர்கள் அநேகர் உன்னைப் புறம்பாக்கினாலும் உன்னைத்தாழத் தள்ளினாலும் அவன் உன்னோடு இருந்து உன் தோழனாகவும் இருக்கலாம்; ஆனாலும் நித்திய ஜீவனாகிய பரிசுத்த ஆவியால் அவன் நிரப்பப்படாத வரையில் அந்த மனிதன் இன்னுமாக தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே தான் அவன் இருக் கின்றான். அது சரியே! இது எவ்வளவாக மிக முக்கியமான தாகும். 57. அதன் காரணமாகத் தான் என்னுடைய சபையானது இதைக் காணவேண்டுமென்று நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதைக் குறித்து கூர்மையான அறிவு எனக்கு இருக்கிறதென்று நான் காண்பித்துக் கொள்கிறேனென்று நீங்கள் எண்ணவேண்டாமென்று நான் - நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நான் - நான் உங்களுக்கு கூற முயற்சிப்பது என்னவென்றால், பிசாசானவன் மிக வஞ்சனை யுள்ளவன், நீங்கள் ஒரு கிறிஸ்தவனைப் போல நடந்து கொள்ளும்படிக்கு அவன் உங்களைச் செய்து மிகவுமாக வஞ்சித்து விடுவான். அவன் ஏதோ ஒன்றைச் செய்து தெரிந்து கொள்ளப் பட்டவர்களிடமும் கூட அவன் கிறிஸ்துவை பாவனைச் செய்து காட்டுவான். அது இரண்டும் மிக நெருக்கமாகக் காணப்படு மென்று வேதாகமம் கூறுகின்றது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருப்பீர்கள். நீங்கள் .... 58. இப்பொழுது இங்கே கவனியுங்கள், இதை ஆணித்தரமாக பார்க்க சில உதாரணங்களை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். இந்த ஆவிகளைக் குறித்து நாம் பார்க்கையில், வேத வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் எதையெல்லாம் வைத்துக் காண்கிறீர்களோ அதன்படியே பார்ப்போமானால் யாக்கோபைக் காட்டிலும் ஏசா மிக நல்லவனாகக் காணப்பட்டான். இப்பொழுது, ஏசா (இந்த கருத்தை கூறுவதற்காக தேவன் என்னை மன்னிப்பாராக) அவன் ஒரு வஞ்சகமானவன் தான். அவ்வளவு தான். இப்பொழுது, நீங்கள் அவனை கவனிப்பீர்களானால், அவன் என்னவா யிருந்தான்? அவன் வம்பளப்பவனாகவும் கோள் சொல் பவனாகவும், ஒரு பெரிய பொய்யனாகவும் இருந்தான். இப்பொழுது, இதை நான் தவறாக சொல்கிறேனென்றால் தேவன் என்னை மன்னிப்பாராக, ஆனால் அவன் பொய் சொன்னான். மேலும் அவன் ஒரு ஏமாற்று பேர்வழியாக இருந்தான், அவனைப் போன்று யாருமே இருக்க வில்லை. அவன் புள்ளியுள்ள கொப்புகளை யெடுத்து அவைகளை, ஆடுகளும் மாடுகளும் தண்ணீர் குடிக்க வரும்பொழுது தண்ணீரில் போட்டான். அவைகள் தண்ணீர் குடிக்க வரும்போது, பொலிவதுண்டு. ஆடுகள் மாடுகளும் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால் அவைகள் புள்ளியும் வரியு முள்ளதுமான குட்டிகளைப் போட்டது. யாக்கோபு அவைகளைத் தனக்காகப் பிரித்துக் கொண்டான். அவன் என்ன செய்தான்? அவன் ஏசாவின் வஸ்திரத்தை தன் மேல் உடுத்திக்கொண்டு ஒரு ஆட்டுத் தோலை தன் மீது போட்டுக் கொண்டு அங்கே சென்று தீர்க்கதரிசியான தன்னுடைய கண்பார்வையற்ற தகப்பன் முன்பாக நின்று ஏசாவைப் போல பாவனை செய்தான். அது சரிதானே? அவன் ஒரு எத்தன். உண்மையாகவே அவன் அப்படித்தான் இருந்தான். ஆகவே ஏசா ... அந்த விதமாக நான் கூறியிருக்கக் கூடாது. பாருங்கள்? அந்த விதமாக நான் கூற விழையவில்லை. நான் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். அவன் ஒரு - அவன் ஒரு ... எனக்குத் தெரியவில்லை; அவன் எந்த விதமாக இருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? நீங்கள் அதை உங்கள் சிந்தையில் சற்று சிந்தித்துப் பாருங்கள்; நான் .... அவன் தேவனுடைய மகத்தான மனிதனாக இருந்தான், அவனைக் குறித்து தீமையாக எதையும் நான் கூற விரும்பவில்லை (உங்களுக்கு புரிகின்றதா?) ஆனால் அவன் செய்த சிறு சிறு காரியங்களை நான் கூட்டிக்காட்ட விரும்பு கிறேன். அவன் எவ்வளவாக வஞ்சித் தான் பார்த்தீர்களா. பொய்யன்? நிச்சயமாக, அவன் அவ்வாறு இருந்தான், அவன் மோசமாக இருந்தான். ஆனால் அவன் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தது என்ன? 59. ஏசாவை கவனியுங்கள். இன்றைக்கு இருக்கின்ற நல்ல, ஒழுக்கமிக்க, சபை அங்கத்தினனைப் போல ஏசா ஒரு நல்ல மனிதனாக இருந்தான். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் வேட்டைக்காரனாக இருந்தான். அவன் வெளியே சென்று ... ஆம், அவர்கள் அப்படித்தான் தங்கள் ஜீவனத்தைச் செய்து கொண்டிருந்தார்கள். அவன் தன் தகப்பனுடைய மந்தைகளை பராமரித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தகப்பன் கண்பார்வையற்றவனாக இருந்தான். ஒரு தீர்க்கதரிசி, கர்த்தருடைய தீர்க்கதரிசி கண்பார்வை யற்றவனாக இருந்து தன்னுடைய சொந்த குமாரனால் வஞ்சிக்கப் பட்ட ஒரு தீர்க்கதரிசி, ஈசாக்கு; அவன் மூலமாக கிறிஸ்து வந்தார். நீங்கள் அவனை ஒரு தீர்க்கதரிசி என அழைக்கலாம், அவன் அவ்வாறு தான் என்று வேதாகமம் கூறுகின்றது. அவன் கண்பார்வை இல்லாமல் இருந்தானா? ஏன் அவன் தன்னை சொஸ்தமாக்கிக் கொள்ளவில்லை? அது ஏசாவென்று - வந்துள்ளவன் என்று ஏன் அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை? பாருங்கள்? தேவன் தன்னுடைய தீர்க்கதரிசிக்கு எல்லாவற்றையுமே கூறுவது கிடையாது ? அவர் விரும்புவதை மாத்திரமே அவர்களிடம் கூறுகின்றார். பாருங்கள்? 60. தேவன் அப்பொழுது ஒரு திட்டத்தை செயலாற்றிக் கொண்டிருந்தார், அவர் அதன் படியே தான் செயலாற்ற வேண்டியவராக இருந்தார். தேவன் ..... நீங்கள் உங்களையே தேவனிடம் ஒப்புக்கொடுத்தால், தேவன் உங்களை சரியாக அவருடைய திட்டத்தின்படியே உங்களை செயல்படுத்துவார். 61. இப்பொழுது, அவன் என்ன செய்தான் என்பதை கவனியுங்கள், இந்த நபர் என்ன செய்தான் என்பதைப் பாருங்கள். ஏசா சென்று தன்னுடைய பரிதாபத்திற்குரிய, வயதான, கண்பார்வை யற்ற தகப்பனை கவனிக்க முயற்சிகள் மேற்கொண்டான், ஆனால் யாக்கோபோ, தன் தகப்பனுக்கு என்ன நேரிட்ட போதிலும் அதை குறித்து அக்கரையற்றவனாக இருந்தான். யாக்கோபு விரும்பின ஒரு காரியம் இருந்தது, அது தான் சேஷ்ட புத்திர பாகம். என்ன வந்தாலும் சரி, எந்த விதத்திலும் அதைப் பெற்றுக் கொண்டாலும் சரி, அதற்காக எந்தக் கட்டத்திற்கு அவன் செல்வதென்றாலும் சரி, அந்த சேஷ்ட புத்திர பாகத்தைக் குறித்து அக்கரைக் கொண்டிருந்தான். ஆனால் ஏசாவோ அதை அலட்சியம் பண்ணினான் என்று வேதம் கூறுகின்றது; வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. ஆகவே வேதாகமம், "ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒரு வேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்ட ஏசாவைப் போல சீர் கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்,” என்று கூறுகின்றது. 62. இப்பொழுது; சேஷ்ட புத்திர- பாகம் என்றால் என்ன? அதுதான் அந்த உரிமையாகும். அதைத் தான் இப்பொழுது உங்களுக்கு நான் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பரிசுத்த ஆவிதான் உங்களுடைய சேஷ்ட புத்திர பாகமாகும்; அதுதான் உங்களுடைய சேஷ்ட புத்திர பாகம். அதுதான் தேவனால் உங்களுக்கு அளிக்கப்பெற்ற உங்களுடைய உரிமையாகும். இப்பொழுது, இப்பொழுது, இன்றைக்கு மக்கள், ''நான் சபைக்குச் செல்வேன். என்னுடைய அயலானைப் போல நானும் நல்லவன் தான். ஆனால் அந்த பரிசுத்த உருளையர்கள் போல நான் நடந்து கொள்ள வேண்டுமா? என்னால் முடியாது'' என்று கூறுகின்றனர். ஓ நீதான் ஏசா! புரிகின்றதா? சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியம் செய்வது போல - அதே விதமாகத்தான் அது காணப்படுகிறது. ஏன், அவன் அதை பயற்றங் கூழ் உணவுக்காக, அதை அவன் பண்டமாற்று கொடுத்து வாங்குதல் முறையில் கொடுத்தான். ஆகவே நீங்களும் அதை விற்கிறீர்கள் ... இப்பொழுது, நான் உங்களைக் கூறவில்லை, ஆனால் உலகமோ அதை விட சிறிய ஒன்றிற்கு அதை விற்றுப்போடுகிறது. 63. ஏசா பசியாயிருந்தான். ஆனால், நீங்கள் பாருங்கள், நல்ல குணத்தை நாம் எடுத்துக் கொள்வோமானால் ... யாராவது ... நாம் யாராவது அங்கு சென்று கூடாரத்தினருகே சில நாட்களுக்கு தங்குவோமானால், ஏசா எப்படிப்பட்டவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் .... நாம் ஏசாவைப் பற்றி பார்த்தோம். பாருங்கள்? ஆனால் அவனுடைய இருதயத்திலேயோ அந்த சேஷ்ட புத்திர பாகம் வேண்டுமென்று விரும்பினான். எதைக் குறித்தும் அவன் அக்கரைக் கொள்ளவில்லை. அந்த சேஷ்ட புத்திர பாகமே அவனுக்கு தேவையாயிருந்தது. அது மட்டுமே அவனுக்கு வேண்டியதாயிருந்தது. 64. ஆனால் ஏசாவோ ஒரு நல்ல மனிதனாக இருந்து எல்லாவற்றையும் நன்றாக கவனித்து அக்கரை கொண்டு, எல்லாவற்றையும் நியாயமாக செய்து எல்லாவற்றையும் செய்ய அவன் விரும்பினான்... ஏசா ஒரு சிறந்த சட்டப்பூர்வமாக ஒழுங்காக செயல்படுகின்ற சட்டவாதியாவான். எல்லா காரியமும் நியாயமாக இருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால் யாக்தோபிற்கோ ஒரேயொரு காரியம் தான் தேவையாயிருந்தது. அது தான் சேஷ்டபுத்திர பாகமாகும், அதைக் குறித்து தான் அவன் கவனம் செலுத்திக் கொண்டிருந் தான். ஏசா... அந்த இரண்டு பையன்களுக்கும் என்ன சம்பவித்த தென்று பார்த்தீர்களா? யாக்கோபிலிருந்து பன்னிரண்டு கோத்திரப் பிதாக்கள் வந்தது. அவர்களிலிருந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள் வந்தன, எல்லாம் யாக்கோபி லிருந்து வெளிவந்தவை. அவன் - தேவன் யாக்கோபை தன் சொந்த குமாரனென்று அழைத்தார். நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களாலே காணமுடிகிறதா? 65. உங்களுடைய கெளரவம், உங்கள் வாழ்க்கை , உங்கள் வேலை, உங்களைச் சார்ந்த எதுவாயிருந்தாலும், உலகத்திலுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் பரிசுத்த ஆவி தான் உங்களுக்கு அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்க வேண்டும். நீங்கள் அதைப் பெறும் வரையிலும் ஓயவே கூடாது. நீங்கள் அதைப் பெற்றுத்தானாக வேண்டும். அது தான் உங்களுடைய தலையாய .... நீங்கள், ''உம், என் வேலை ஸ்தலத்தில் அவர்கள் - எனக்கு தெரியவில்லை. எனக்கு பயமாயிருக்கிறது. ஏனென்றால் என் கணவன், என்... '' எனலாம். பயப்படாதீர்கள்; முதலாவதாக அது இருக்கட்டும். மற்ற எல்லாவற்றையும் புறம்பே செல்ல விடுங்கள். அது முதலாவதாக இருக்கட்டும். ''நல்லது, நான் வருகின்ற நாட்களில் ஒன்றில் அதை பெற்றுக்கொள்வேன் என எதிர்ப்பார்க்கிறேன் சகோதரன் பிரன்ஹாம்'' எனலாம். வருகின்ற நாட்களில் அல்ல, இப்பொழுதே! இதுதான் நேரம். ''நான் மற்றவற்றை செய்யும் முன்னர் அது முதலாவதாக இருக் கட்டும். இப்பொழுதே அதை நான் பெற்றுக் கொள்வேனாக.'' பதறல் கொள்ளுங்கள்! நம்முடைய கேள்விக்கு பதில் கூற அது உதவும். நீங்கள் - அதற்காக நீங்கள் பதறல் கொள்ள வேண்டும், உண்மையாகவே நீங்கள் அதைப் பெறவேண்டும் அல்லது மரிக்கவேண்டும். இன்று அதைப் பெற பதறல் கொள்வீர் களானால், (பாருங்கள்) அப்பொழுது தான் நீங்கள் அதைப் பெறப் போகிறீர்கள். 66. இங்கே பட்டினத்திலே ஒரு யூதன் வசித்துக் கொண்டிருந் தார். உங்களுக்கு அவரைத் தெரியுமா அல்லது இல்லையா என்று நானறியேன். புற்று நோயிலிருந்து அவர் சுகமாக்கப்பட்டார். அவர்கள் அவரை புறம்பாக்கிப் போட்டார்கள். அவர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டபோது அவர்கள் அவரை வெளியே விரட்டி, அங்கே வெளியே முற்றத்தில் துரத்தி விட்டார்கள். ஆகவே அவர் சென்று மெதோடிஸ்ட் சபையில் சேர்ந்தார். அங்கே அவர்கள் இவர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பதை கண்டு பிடித்த போது, அவர்கள் அவரை பூஜ்யம் சீதோஷ்ணத் தில் வெளியே அனுப்பிவிட்டார்கள், ஓஹியோவில் பத்து டிகிரிக்கு கீழுள்ள சீதோஷ்ணத்தில் அங்கே அவருக்கு ஒரு படுக்கையை போட்டார்கள். (சகோதரன் பீரீமேன், நீங்கள் சகோதரன் இவான்ஸ் அவர்களை நினைவு கூற வேண்டும், அப்படித் தானே?) - அவரை அங்கே வெளியே வைத்து - அங்கே - அங்கே ஒரு நீரிறைக்கும் இயந்திரத்தை வைத்து ''இயேசுவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறும் படிக்கு போதுமான அளவு தண்ணீர் அங்கே இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 67. ஆனாலும், அவர் ஒருமுறை ஒரு சிறு சம்பவத்தை என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். அவர் தன் மனைவியுடன் இந்த குறிப்பிட்ட மக்களுடன் தங்கியிருக்கையில் .... அவர் தன்னு டைய எல்லா பொருட்களையும் ஒரு பழைய உடைந்த வண்டியில் குவித்து ஏற்றிக்கொண்டு பட்டினத்தை விட்டு வெளியே கிளம்பிச் சென்றார். அவருடைய மனைவி அவரிடம், ''உங்களுக்குத் தெரியுமா? அந்த இடத்தை விட்டு புறப்படுமுன்னர் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு புறப்பட்டிருக்க வேண்டும். எனக்கு தாகமாயிருக்கிறது'' என்றார். அதற்கு அவர், ''தேனே, அங்கே ஒரு தண்ணீர் குழாய் உள்ளதே'' என்றார். ''சரி, இன்னும் ஒரு நல்ல இடத்தை பார்க்கும் வரை சென்று கொண்டேயிருங்கள்.” என்றாள். ஆகவே அவர் இன்னும் சிறிது தூரம் சென்றார், ''அதோ, மற்றொரு தண்ணீர் குழாய் இருக்கிறதே” என்றார். அவள் "உம், இன்னும் சென்று கொண்டேயிருங்கள்” என்றாள். நீங்கள் கவனிக்கிறீர்களா? 68. பிறகு அவர், ''பிறகு அவர் கிராமபுறமாக சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒரு தண்ணீர் குழாயும் இருக்க வில்லை,'' என்றார். அவள் சிறிது தண்ணீருக்காக போராடிக் கொண்டிருந்தாள். பிறகு சிறிது நேரம் கழித்து அங்கே வயலில் ஒரு பழைய கிராம் தண்ணீர் குழாய் இருந்தது, நிலங்களின் மத்தியில், ஒரு கால்நடை மந்தையினுடாக செல்ல வேண்டும். அவள் அந்த கால் நடை கூட்டத்தை பார்த்து பயந்தாள், ஆனாலும் அவள், 'லேவி, நான் தண்ணீர் குடித்துத்தானாக வேண்டும்' என்றாள். ஆகவே அவர்கள் காரை நிறுத்தினர். இவர் காரை நிறுத்தும் முன்னரே அவள் வெளியே சென்று அந்த வேலியைக் கடந்து சென்றாள். அவளுக்கு தண்ணீர் தேவையாயிருந்தது. அதே போன்று தேவன் உங்களுக்கு நிஜமாகும்போது, அதைப் போன்ற தாகம் உங்களுக்கு இருக்குமானால், அதாவது ஒன்று தேவன் வேண்டும் இல்லையென்றால் நீங்கள் மரித்துப் போய் விடுவீர்கள் என்ற நிலை, இனியும் உங்களால் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலை, அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகிறது. அப்பொழுது நீங்கள் தேவனோடு அலுவலில் ஈடுபட வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அதை எடுக்கும்போது அப்பொழுது அது சம்பவிக்கின்றது. 69. இப்பொழுது, இந்த தீய ஆவிகள் மக்களை வஞ்சிக்கின்றது. அந்த ஆவிகள் பலமடங்குகள் மிக பக்தியுள்ளவைகள் ஆகும். இப்பொழுது நீங்கள் "என்ன, தேவ பக்தியா?'' என்று கேட்கலாம். ஆம், ஐயா! வேதவசனங்கள், வேதாகமம் கூட அவ்வாறே போதிக்கின்றதே. நிச்சயமாகவே அவ்வாறு போதிக்கின்றது. 70. இப்பொழுது, கவனியுங்கள்! இயேசு பரிசுத்த ஆசாரியர் களாயிருந்த ஒரு கூட்டம் மனிதரிடம் வந்தார்; அவர்கள் நியாயப்பிரமாணங்களை ஒவ்வொரு எழுத்தின் படியேயும் கைக்கொண்டனர்; அவர்கள் மிக மிக பக்தியுள்ள வர்களாக இருந்தனர். இயேசு - யோவான் அவர்களை, "விரியன் பாம்புக் குட்டிகளே (அது பாம்புகள்) வருங் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?” என்று அழைத் தான். இயேசு அவர்களைக் கண்டபோது, ''நீங்கள் உங்கள் பிதா வாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்.” என்று கூறினார். தேவன் தாமே அதைக் கூறிக்கொண்டிருந்தார். அவர்களால் எவ் வளவு பக்தியாயிருக்க முடிந்ததோ அவ்வளவாக இருந்தனர். 71. நினைவில் கொள்ளுங்கள், பிசாசு அவனுடைய மனிதனை எடுக்கும் போது, அவனுடைய ஆவியையும் எடுப்பதில்லை. தேவன் தம்முடைய மனிதனை எடுக்கிறார் ஆனால் தம்முடைய ஆவியை ஒருபோதும் எடுப்பதில்லை. பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய வாழ்க்கையில் வந்து உங்களுடைய ஆவியை பரிசுத்தமாக்குகிறார், உங்கள் மூலமாக ஜீவிக்கின்றார், ஜீவிக்க உங்களுக்கு வல்லமையும் தருகின்றார். ஆனால் உங்களுடைய ஆவியானது சென்றுகொண்டேயிருக்கும் போது, உங்களுடைய ஆவி தேவனோடே தொடர்ந்து தங்கியிருக் கிறது; ஆனால் உங்கள் மீதிருந்த பரிசுத்த ஆவி வேறொருவர் மீது வருகையில், வேறொருவர் மீது, வேறொருவர் ... 72. எலியாவின் மேலிருந்த இந்த ஆவியானது எலிசாவின் மீது வந்தது, ஆவியின் இரட்டிப்பான பாகம்; ஏழுநுறு வருடங்கள் அல்லது எண்ணூறு வருடங்கள் கழித்து அது யோவான் ஸ்நானன் மீது வந்தது, அவனை ... எலியாவை கவனியுங்கள், எலியா எப்படி யிருந்தான் என்று பாருங்கள்; பெரிய வயதான முழுவதும் மயிரைக் கொண்டவனாக, முகம் முழுவதுமாக தாடியுடனே; ஆட்டுத்தோல் போர்த்திக் கொண்டிருந்தவனாக, சுருள்சுருளான புழு போன்று முழுவது மாக மயிர் நிறைந்தவனாக காணப்பட்டான், அதன் மத்தியில் அவன் முகம் காணப்பட்டது, அந்த தோல் துண்டை சுற்றின வனாக பலமாய் மிதித்து நடந்து சென்று கொண்டிருந்தான், அவனுடைய அரையைச் சுற்றிலும் இதைப் போன்று கச்சைகள் காணப்பட்டன. நீங்கள் தானே ... அவன் உங்கள் வீட்டிற்கு நடந்து வந்துக்கொண்டிருக்கிறா னென்றால், நீங்கள், ''ஊ, ஊ, என்னே! உடனே போலீசைக் கூப்பிடு, என் கதவண்டை இப்படிப்பட்ட ஒரு ஆள் நிற்கின்றானே'' என்பீர்கள். ஆனால், அவன் தான் கர்த்தருடைய தீர்க்கதரிசியாயிருந்தான். நிச்சயமாக அவ்வாறு தான்! பிறகு, அவன் மரித்தபோது, அவனுடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு எலியாவின் மீது வந்தது; பிறகு எண்ணூறு வருடங்கள் கழித்து யோவான் ஸ்நானன் மீது வந்தது. அதே விதமாக யோவானும் இருந்து நடந்து கொள்ளும்படிக்குச் செய்தது, ஏனென்றால் அது எலியாவின் ஆவியாக இருந்தது. 73. இப்பொழுது, யோவானின் மீதிருந்த எலியாவின் ஆவி யோவானை எலியாவைப் போன்றே நடந்துகொள்ளும் படிக்குச் செய்யுமானால், உங்கள் மீதிருக்கும் தேவனுடைய ஆவி இயேசுவைப் போலவே நீங்கள் நடந்து கொள்ளும் படிக்குச் செய்யும். இப்பொழுது, அங்கே தான் நீங்கள் பரிசுத்த ஆவியைக் காண முடியும். பாருங்கள்? பரிசுத்த ஆவி அதைத் தான் செய்கின்றது. அது உங்களை சாந்தமுள்ளவர்களாக செய்கிறது, தாழ்மையுள்ளவர்களாகச் செய்கிறது, மன்னிக்கிறவர்களாகச் செய்கிறது. 74. ஒரு கூட்டம் தேவ தூதர்களை அழைக்க உனக்கு வல்லமை இருந்து, உன் முகத்தில் தாடி இருந்தால் அவர்களால் அதைப் பிடுங்கி, உன் முகத்தில் துப்பமுடியுமா? உன் முகத்தில் துப்பிக் கொண்டிருக்கிற மக்களுடைய அன்பிற்காக அதை நீ செய் வாயா? உன்னால் அதைச் செய்ய முடியுமா? யாரோ ஒருவன் உன்னிடம் வந்து, "ஏய், நீ ஒரு மாய்மாலக்காரன்!” என்று கூறி உன்னுடைய கன்னத்தில் அறைந்தால் அவனுடைய மன்னிப்பிற்காக உன்னால் ஜெபிக்க முடியுமா? இப்பொழுது, நீ பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கின்றாயா அல்லது இல்லையா என்பதை நீ இதின் மூலமாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். பாருங்கள்? “என் நாமத்தினிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப் படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப் பீர்கள். '' நீங்கள் அவர்களுக்குச் சமானமாய் நிற்பீர்களா? ''சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.” 75. யாராவது உங்களைக் குறித்து தீமையாக பேசினால், அவர்களைக் குறித்து நல்லதையே பேசுங்கள். அவர்களைக் குறித்து நல்லதாக எதுவும் உங்களால் கூற முடியவில்லையெனில் அப்பொழுது எதையுமே பேசாதிருங்கள். அதைப் அப்படியே விட்டு விடுங்கள். புரிகின்றதா? பிறகு, நீங்கள் தனிமையில் சென்ற பிறகு அவர்களுக்காக ஜெபியுங்கள். 76. அங்கே அந்த நாளில் பரிசுத்த ஆவி எனக்குள்ளாக வந்தது என்பதை நான் புரிந்து கொள்ள ஏதுவாயிருந்த ஒரு காரியமானது என் வாழ்நாளிலே இருக்கிறதென்றால் அது, அந்த காரியத்தால் தான். நான் முரட்டுத்தனமானவனாக, எளிதில் சீறியெழுகின்ற வனாக இருந்தேன், நான் தாய் தந்தையின் வம்சவழியான ஐயர்லாந்து வம்சவழியைச் சார்ந்தவன். என்னால் உணவே உண்ண முடியாது, ஏனெனில் என் வாய் எப்பொழுதுமே யாராவது ஒருவரால் நொறுக்கப்பட்டிருக்கும், எதெற்கெடுத்தாலும் தேவையில்லாமல் நான் திடீரென்று தாக்கி விடுவேன். என் பற்கள் சில உடைந்து போய் அதை இப்பொழுது சரி செய்து வைத்துள்ளேன், பேசக்கூடாத இடத்திலெல்லாம் நான் சத்தமிட்டு (பாருங்கள்?) கூறியுள்ளேன் .... எப்பொழுதுமே தொல்லைக்குள் அகப்பட்டுக் கொள்வேன். ஆகவே நான் கூறினேன். யாரோ, பள்ளியிலுள்ள என் ஆசிரியை, அவர்கள் என்னிடம்... நான் அவர்களிடம், ''மதிப்பிற்குரியவரே, என்னால் - என்னால் திருந்த முடிய வில்லை'' என்றேன். பாருங்கள், ''எல்லா நேரத்திலும் தொல்லையில் சிக்கிக்கொள்வேன்.'' “என்னால் முடியவில்லை'' என்றேன். பாவம் அந்த வயதான டேம்ப்பில் அம்மாள், அவர்கள் மகிமைக்கு சென்று விட்டார்கள். அப்பொழுது அவர்கள், ''சரி, தேனே இங்கே கவனி" என்றார்கள். அவர்கள் என்னை தங்களுடைய மடியின் மீது உட்காரவைத்து என்னை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித் தார்கள். அப்படிப்பட்ட ஒரு அன்பை முதன் முறையாக என் மீது பொழியப்பட நான் கண்டேன், - ஒரு வயதான பெண்மணி. அவர்கள் எனக்காக அழுதார்கள். அவர்கள் “'பில்லி, நான் உனக்காக ஒன்றை நான் செய்யப் போகிறேன். தேனே, நான் உனக்கு ஒரு சிறிய மெல்லிய கயிறைத் தரப்போகிறேன், ''இனிமேல் அந்த பையன்களில் யாராவது ஒருவன் உன் மீது ...'' என்றார்கள். 77. அங்கே என்னை 'கிழிந்த கந்தைக் கீற்றுக் கொட்டை' என்று என்னை அழைப்பார்கள், ஏனெனில் நான் கெண்டக் கியைச் சார்ந்தவன் என்பது உங்களுக்குத் தெரியும், என்னுடைய ஆடைகள் மிக மோசமாக இருக்கும். இப்பொழுதிருக்கிற தலை முழு அளவிற்கு முகம் முழுவதுமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். என் முடியை அவர்கள் பரியாசம் செய்வார்கள். உங்களுக்குத் தெரியுமா, ஒரு மிக மோசமான வேளையாக அது எனக்கிருந்தது. அவர்கள் என்னை அடிப்பார்கள், கன்னத்தில் அறைவார்கள். எப்பொழுதாவது யாராவது ஒருவருக்கு கோபம் வந்துவிட்டால் அவர் சுற்றி சுற்றி நடந்து, என்னைக் கண்டு இறுகப் பிடித்து கன்னத்தில் அறைவார்கள். அப்பொழுது ஒரு சண்டை நடக்கும். எங்களுக்கு அடி விழும் - நாங்களும் அடி கொடுப்போம் ..... நான் கத்திச் சண்டைகள் மற்ற எல்லா சண்டைகளையும் போட்டிருக்கிறேன். 78. நான் எழுந்திருக்கக் கூட முடியாத அளவிற்கு என்னை அடித்து நொறுக்கிய நான்கு அல்லது ஐந்து பையன்களை சுட்டுத் தள்ள ஒரு வின்செஸ்டர் ரக துப்பாக்கியை எடுத்துச் சென்று முயற்சி செய்திருக்கிறேன். தேவன் என்னைத் தடுத்திராவிட்டால் ஒவ்வொரு பையனையும் கொன்று போட்டிருப்பேன். கீழே யிருந்த தோட்டாக்களை எடுத்து துப்பாக்கியினுள் போட்டேன்; சுடுவதற்கு சிறந்த தோட்டாக்களாக அவை இருந்தன. பாருங்கள்? ஒருக்கால் ஐந்து மனிதரை அல்லது ஐந்து பையன்களை கொன்ற கொலைக் காரனாக நான் இருந்திருப்பேன். 79. எனக்கு பன்னிரண்டு வயது தான் இருந்திருக்கும், ஆனால் கடுங் கோபக்காரனாக இருந்தேன்! ஆகவே அந்த ஆசிரியை என்னிடம் ''பில்லி, இந்த மெல்லிய கயிற்றை எடுத்துக்கொள், உனக்கு கோபம் வரும் போதெல்லாம், நின்று, இந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகளைப் போடு. அப்படிச்செய்த பிறகு, அந்த கயிற்றை என்னிடம் கொண்டு வா - உன் கோபம் அடங்கி விடுவது நிச்சயம்” என்றார்கள். 80. நான், ''திருமதி. வேலன், நீங்கள் மிக அருமையான வர்கள். நான் - நான் அவ்வாறு செய்ய முயற்சி செய்யப்போகிறேன்” என்றேன். பாருங்கள்? (ஓ, அது திருமதி டெம்ப்பில்; நான் திருமதி. வேலன் என்று கூறிக்கொண்டிருக்கிறேன். நான் திருமதி .... அங்கே ஒரு சமயம் திரு. வேலன் ஆசிரியையாக இருந்தார்.) ஆகவே அந்த கயிற்றை என் பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டேன். நான் வெளியே புறப்பட்டுச் சென்று ஐந்து நிமிடங்கள் கூட கடக்காத நிலையில் ஒருவன் என் மீது விழுந்து அடித்தான். அப்பொழுது நான் அதை செய்ய ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியுமா. நான் கீழே குனிந்து என் கயிற்றை எடுத்தேன்; ஒரு முடிச்சு போட்டேன்; அந்த கயிற்றை கீழே எறிந்துச் சென்று விட்டேன். பாருங்கள்? என்னால் அதைச் செய்ய முடியவில்லை. பாருங்கள்? 81. ''ஒரு கிறிஸ்தவனாக என்னால் இருக்கவே முடியாது.'' என்றேன். ஆனால் ஒன்றை உங்களுக்கு கூறட்டும், அங்கே ஓஹியோ தெருவில் அந்த இரவில் ஆவியானவர் எனக்குள் வந்தபோது என் கோப சுபாவத்தை நீக்கினது. அன்றோடு அது ஒழிந்தது. நான், "என்னால் அதைச் செய்ய முடியாது. நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது, ஏனெனில் என்னால் அதை மேற்கொள்ள முடியாது. அது எனக்குள்ளாக பிறந்திருக்கின்ற ஒன்று. பையனே, என் அப்பா முரட்டுத்தனமானவர்; பாதி இந்தியரான என் தாயும் கூட, மதுவை கடைசித் துளிவரை விடாமல் குடிக்கும் குடிகாரனிடம் சண்டை போடும் அளவிற்கு கோப சுபாவம் கொண்டவர்களாயிற்றே. அப்படியிருக்க நானா? ஓ, நான் .... என்னிடம் சண்டைக்கு வருபவர்கள் கடும் உதை வாங்குவார்களே; அவ்வளவுதான். அவர்களை அடிக்க ஒரு ஏணியின் மீது ஏறிச் செல்ல வேண்டியிருந்தாலும் கூட நிச்சயமாக நான் எறிச் சென்று அடிப்பேனே'' என்றேன். 82. ஆனால் இப்பொழுதோ, நீங்கள் என்னை வெளியே தரதரவென்று முரட்டுத்தனமாக இழுத்துச் சென்று என்னை அடித்துப் போடுங்கள் ... பாருங்கள்? ஏன்? நான் இல்லை? நான் இங்கே எதைக் கூற முயன்று கொண்டிருக்கிறேன்? ஏதோ ஒன்று சம்பவித்தது. அந்த பழைய வலிமை, அந்த பழைய வில்லியம் பிரன்ஹாம் மரித்துவிட்டார், ஒருவர் உள்ளே வந்து விட்டார். ஆகவே அது என்விரோதிக்காக நான் வருத்தப்பட்டு மன மிறங்கச் செய்கிறது. யாராவது எனக்கு ஏதாவதொரு பொல்லாங்கு செய்தால், நான் அவர்களுக் கெதிராக ஜெபம் செய்வதில்லை, நான் அவர்களுக்காக ஜெபிப்பேன். இது சம்பவிப்பதற்கு முன்னர், நான் அன்றொரு இரவு, நியூ இங்கிலாந்தில் பரிசுத்த ஆவியானவர் அந்த சோதனையை எனக் களித்தார். அவர் எனக்கு வல்லமையை அளித்து அந்த மக்களை நோக்கி நீ என்ன கூற விரும்புகிறாயோ அதை அப்படியே பேசு'' என்று கூறினார். அவர்கள் நடந்து கொண்ட விதமானது .... நான் அங்கே பார்த்து ''நான் உங்களை மன்னிக்கிறேன்'' என்று கூறினேன். சரியாக நான் அவ்விதமாகத் தான் கூற வேண்டு மென்று அவர் எதிர்பார்த்தார். பாருங்கள்? உங்கள் விரோதியை மன்னியுங்கள். பாருங்கள்? உங்களை பாவம் நிறைந்தவர்களாகச் செய்கிறவைகள் இந்த ஆவிகள் தாம். அந்த ஆவிகளை கவனியுங்கள். 83. இங்கே ஒருவன் வருகின்றான். அவன் அங்கே அந்த கல்லறையில் இருந்தான். யாராவது ஒருவர் அவ்வழியாய் வந்தபோது, இவன் வெளியே ஓடிச் சென்று அவர்களை தாக்கி மேற்கொண்டு விடுவான் என்று வேதாகமம் கூறுகின்றது. அவன் மிகவும் கொடியவனாக இருந்த படியால் அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. ஆனால் ஒரு நாளிலே மிக அதிக வல்லமை பொருந்திய ஒன்று அந்த வழியாக நடந்து சென்றது. அவன் லேகியோனாகிய அந்த அநேகமான, வெறுப்பு, மனக்குரோதம், பகைமை, பிசாசு போன்றவற்றால் பிடிக்கப்பட்டு, அவன் அங்கே நடந்து கொண்டிருந்தான், அவன் பெரிய ஆளாக இருந்தான். அவர்கள் அங்கே சென்று, ஒரு படையாகச் சென்று அவனை சங்கிலிகளால் கட்டுவார்கள்; அவனோ அந்த சங்கிலிகளை முறித்துப் போடுவான். அந்த பிசாசு அவனுக்குள்ளாக இருந்தது. அங்கே அவன் இருந்தான். அவன் ... ? .... அவன் இங்கே ஜெபர்சன்வில்லில் போற்றுதலுக்குரிய நட்சத்திரமாக இருந்திருப்பான். நிச்சயமாக இருந்திருப்பான். அவன் அந்த பெரிய ... சில வாலிப பருவ பையன்கள் “ஓ, அவன் பெரிய உருவ மனிதன்” என்றிருப்பார்கள். இரு நூறு பவுண்டுகள் எடை கொண்டு அதே நேரத்தில் ஒரு துளி கூட மனிதனாக இராத மனிதரை நான் கண்டிருக்கிறேன். அது மனிதத்தன்மையல்ல, அது மிருகத்தன்மை. பாருங்கள்? 84. ஆனால் அங்கே மெலிந்த, தோள் சரிந்த ஒரு ஆள் ஒரு நாளிலே அந்த சாலையிலே வந்து கொண்டிருந்தார், தேகம் சிறிது வளைந்தவராக காணப்பட்டார் (நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது, அவருக்கு முப்பது வயது தான், ஆனால் ஐம்பது வயது போல் காணப்பட்டார் என்று வேதம் கூறுகிறது) ஒரு நாள் அந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். ஆகவே இவன், "ஓ, அந்த சிறிய ஆளை பிடித்து சுழற்றி சுழற்றி வீசி அடிப்பேன்” என்றெண்ணி அவரை நோக்கி ஓடினான். ஆனால், ஓ, என்னே, அந்த ஒன்றை அவன் சந்தித்த போது, அவருடைய பாதத்தில் விழுந்தான். அவனை அந்த பிசாசுகள் பிடித்திருந்தன. இப்பொழுது கவனியுங்கள். அந்த நாளிலே... அவன் பிசாசினால் மிகவுமாக பிடிக்கப்பட்டிருந்தான் 85. இப்பொழுது இந்த, இதை நான் உங்களுக்கு ஆணித்தரமாக்க நான் விரும்புகிறேன். அவன் - அந்த பிசாசு அவன் நாவை உபயோகித்து பேசும் அளவிற்கு அந்த மனிதன் பிசாசிற்கு முழுவதுமாக எதிர்ப்பின்றி இணங்கிப் போயிருந் தான். இப்பொழுது, தேவன் உங்கள் நாவை உபயோகித்து பேசத்தக்கதாக நீங்கள் உங்களைத்தாமே முழுவதுமாக தேவனிடம் இணங்கி கீழ்ப்படிந்திருக்கலாமே, அது சரியே! அதைத் தான் நான் வலியுறுத்தி கூறுகிறேன். நான் ஒரு பிரசங்கம் செய்து அது அர்த்தமுள்ளதாக இருக்குமானால், நான் என்னை தேவனிடம் இணங்கச் செய்ததால்தான், வில்லியம் பிரன்ஹாமை அகற்றி விட்டு, கிறிஸ்து தலமை எடுத்து பேச ஆரம்பிப்பதால் தான். பாருங்கள்? அவர் பாஷையில் பேச முடியும். 86. இப்பொழுது கவனியுங்கள். அந்த தீய ஆவி அவனை மிகவும் அதிகமாக பிடித்திருந்தது, ஏனென்றால் அந்த ஆவியானது அவனை மிக... தங்களுடைய நேரமானது வந்து விட்டதென்பதை அந்த பிசாசுகள் அறிந்திருந்தன, ஏனெனில் அவை அன்பை சந்தித்தன. பாருங்கள்? ஆகவே அவைகள், ''அவனை சற்று தொல்லைக்குள்ளாக்கு வோம்'' என்றன. அப்பொழுது அந்த எல்லா... இப்பொழுது என்ன சம்பவித்த தென்று சற்று கவனியுங்கள். அவன், "என்ன, நீர் யார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த சிறிய மெலிந்த சரீரத்தில், ஒரு சிறிய மெலிந்து காணப்படுகின்ற ஆளைப் போன்ற நீர் வரவேண்டும்?'' ''நீர் ஏன் இவ்விதமாக வருகின்றீர்,'' என் றான். மேலும், ''நீர் யார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர்தாம் இஸ்ரவேலின் பரிசுத்தராயிற்றே, அப்படியானால் ஏன் நீர் .... ? (இப்பொழுது கவனியுங்கள்! வருங்காலத்தில் பிசாசுகளுக்கு வேதனை அளிக்கப்படப்போகிற ஒரு தருணம் உள்ளதென்று நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால் இந்த பிசாசுகள் அறிக்கை யிடுவதை சற்று கவனியுங்கள்) 'அந்த காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீ ரோ?'' (ஆங்கில வேதாகமத்தில் அந்த (The) உள்ளது - தமிழாக்கியோன்) வருங்காலத்தில் ஒரு வேதனையானது அவைகளுக்கு உண்டு என்பது அவைகளுக்குத் தெரியும். ''அந்த காலம் வருமுன்பே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ?” பாருங்கள். அப்பொழுது இயேசு, ''உன் பேர் என்ன?'' என்று கேட்டார். அந்த பெயர் அவருக்கு தெரியும்; ஆனால் அவைகள் அதை அறிக்கையிட வேண்டுமென அவர் விரும்பினார். ''நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் நாங்கள் லேகி யோன் எனப்படுகிறோம்'' என்றான் அவன். மேலும் அவன் ''நீர் தாமே இந்த மனிதனை விட்டு எங்களை துரத்தப் போகிறீரென்றால் ... ?,'' என்றான். 87. இயேசு அங்கே ஒரு சிறிய மெலிந்த ஆளாக நின்று கொண்டிருப்பதையும் (பாருங்கள்?) ஏறக்குறைய ஒரு முழு சேனையையும் அடித்துப்போட்டு தோற்கடிக்கக்கூடிய ஒரு மனிதனையும் கவனியுங்கள்; சங்கிலிகளும் கூட அவனைக் கட்டி அடக்க போதுமானதாக காணப்படவில்லை. பாருங்கள், அது மாம்ச பலத்தினால் அல்ல. மாம்ச பலத்தினாலே அதைச் செய்ய முடியாது. உன்னுடைய ஜீவியத்தில் இருக்கின்ற பரிசுத்த ஆவியின் வல்லமை தான் அதைச் செய்யும். பாருங்கள்? 88. அவன், ''அந்த காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த வேண்டாம்; நீர் எங்களை துரத்துவீரானால்.... (அவைகளின் கீழ்த்தரத்தைப் பாருங்கள், துஷ்டத்தனம்) நீர் எங்களைத் துரத்து வீரானால், எங்களை அப்படியே உலகத்திற்குள்ளாக கட்டவிழ்த்து விடவேண்டாம், ஏனெனில் வேறு யாருக்குள்ளாவது நாங்கள் செல்வோம் என்பதை உடனே தீர்மானிப்பது கடினம். நீர் எங்களை துரத்துவீரானால்... யாராவது ஒருவருக்குள் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்; இன்னும் அதிகமான கீழ்த்தரச் செயல்களை நாங்கள் செய்ய விரும்பு கிறோம்'' என்று கூறினான். அது பிசாசாகும். ''அவனை ஒரு கை பார்த்துக்கொள்கிறேன்.” (சகோதரன் பிரன்ஹாம் கீழ்த்தரச் செயலை முகபாவத்தில் தெரிவிக்கின்றார் - ஆசி) பாருங்கள்? அது பிசாசாகும். "நான் அவனை பழிக்கு பழி வாங்குவேன்.'' பாருங்கள்? நினைவில் கொள்ளுங்கள், அங்கு நின்று கொண்டிருப்பது உங்கள் சகோதரனாகும், ஆனால் பிசாசானவன் அவன் மேல் இருக்கிறான். பாருங்கள்? ''கீழ்த்தரமான ஏதாவ தொன்றை நாம் செய்வோமாக. இந்த காரியத்தின் நிமித்தமாக நாம் இந்த கதரேனரை சற்று அவதிக்குள்ளாகும் படிக்குச் செய்வோம்'' என்று கூறி ... அவைகளின் தலைவன் “நாம் அந்த பன்றி கூட்டத் திற்குள்ளாக சென்று விடுவோம்'' என்று கூறினது. 89. இயேசு ''உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். ஆனால் அவனை விட்டு வெளியே வாருங்கள்!'' என்றார். ஓ, என்னே! அந்த விதமான சிறிதான மெல்லிய ஆள் அந்த பெரிய பிசாசு களின் கூட்டமாகிய லேகியோனிடம் பேசுவதைப் பாருங்கள்... ''இவனை விட்டு புறப்பட்டுப் போங்கள்! உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். '' அப்பொழுது அவைகள் அந்த பன்றிகளுக் குள்ளாகச் சென்றன, அந்த பன்றிகள் திடீரென்று உடல் குலுங்கின, அந்த பன்றிகளுக்கு திடீரென்று குலுங்கி எழுச்சியுறச் செய்தன. ஆகவே அவைகள் நேராக ஆற்றண்டை சென்று, ஆற்றில் மூழ்கி, பாய்ந்து அமிழ்ந்து மாண்டது. அது சரிதானே? 90. இப்பொழுது அவைகள்... ஆம், பிசாசுகள் அவை களினின்று வெளியே சென்றன, ஏனெனில் பன்றிகள் மாண்டு போகும் படிக்குச் செய்து விட்டிருந்தன. அவைகளை திடீரென்று எழுச்சியடையச் செய்தன. மற்ற எவரைப் போன்றே அவை களுக்கு திடீரெழுச்சியுண்டாயிற்று. கோபத்தினால் எழுச்சியுறுகிற ஒரு நபரை நீங்கள் கவனித்துப் பார்த்த துண்டா ? ஆம், அது தான் - அதைப் போன்று தான் இதுவும். அது அந்த பிசாசுகள் காண்பீர்களானால், நீங்கள், "உம், கதரேனரிடத்தில் என்ன சம்பவித்தது என்பதை நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன்" என்று கூறுங்கள். பாருங்கள்? அது முற்றிலுமாக சரியே. இன்னும் சில உள்ளே வந்து அவனை முற்றிலுமாக பைத்திய மாக்கி விடுகின்றன; ஏனெனில் பைத்தியம் பிடித்தலில் முதல் கட்டம் கோபமே என்று மருத்துவர் உங்களிடம் கூறுவார். பைத்தியம் பிடித்தலின் முதல் கட்டம் - மேயோ மருத்துவர்களும் அதைத் தான் கூறுகின்றனர். 91. சகோதரன் பாட், அது சற்று கல்வியறிவில்லாத கரடு முரடான பதிலாயிருந்திருக்கும். நான் அறிந்துள்ளதை மாத்திரமே உரைத்தேன், சற்று அது எதிர்ப்பாராத ஒன்றுதான். 102. ரோமர் 7வது அதிகாரம், 25வது வசனம். 92. நான்... நான் மறந்து விட்டேன், அன்றொரு நாளிலே அதைப் பெற்ற போது நான் இதை பார்த்தேன், ஆனால் அது என்னவென்பதை நான் மறந்து விட்டேன். இந்த அருமையான நபரின் கேள்விக்கு கூடுமான வரை நாம் பதிலளிப்போமாக. ரோமர் 7:22, சரி. இருபத்தைந்து, என்னை மன்னியுங்கள். ரோமர் 7,... சமயத்தில் இரு பக்கங்களை புரட்டி விட்டேன். பாருங்கள்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே-ஆதலால் நானே என் மனதினாலே - என் - என் மனதினாலே தேவனுடைய நியாயப் பிரமானத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப் பிரமாணத் துக்கும் ஊழியஞ் செய்கிறேன். இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் அதை சரியாக வாசிக்க வில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே-ஆதலால் நானே என் மனதினாலே - என் - என் மனதினாலே தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப் பிரமாணத் துக்கும் ஊழியஞ் செய்கிறேன். 93. அது சரி. சரியாக அதைத் தான் பவுல் அநேக முறைகள் கூறியிருக்கிறான். நான் நன்மையானதைச் செய்யும்போது, தீமையும் இவ்விடத்திலிருக்கிறது. பாருங்கள்? நீங்களும் சரியாக அதைத் தான் செய்கிறீர்கள். உங்களுடைய மனதினாலே, அது தான் உங்களுடைய இருதயமாகும். பாருங்கள்? இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மனதினாலே நீங்கள் சிந்திப்பதில்லை; அல்லது உங்கள் கண்களினாலே நீங்கள் காண்பதும் கிடையாது. நீங்கள் .... உங்கள் இருதயத்தினாலே நீங்கள் காண்கின்றீர்கள். உங்களுக்கு அது தெரியுமா? உங்கள் இருதயமானது தனக்குள்ளாக உங்களையும் இன்னும் வேறொரு நபரையும் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் விஞ்ஞானமானது அதைக் கண்டு பிடித்ததென்று நீங்கள் அறிவீர்கள். இருதயத்தில் ஒரு சிறிய அறை, அங்கு ஆத்துமா வாழ்கிறதென்று அவர்கள் கூறுகின்றனர். 94. நீங்கள் எப்பொழுதாவது உள் உணர்வு நிலை குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? நீங்கள் ஏதாவதொன்றை செய்ய ஆரம்பித்து ''ஓ, நான் அதை நல்ல முறையில் செயல் படுத்துகிறேன்” என்று நீங்கள் நினைக்கையில், உங்கள் உள் உணர்வு நிலையோ வேறொன்றை உங்களுக்கு கூறுகின்றது. 95, பொய் பேசுவதைக் கண்டு பிடிக்கும் ஆற்றலுடைய பொறிக் கருவியை (lie detector) அவர்களால் உபயோகப்படுத்த முடிகிறது... என் அருமை நண்பர் வழக்கறிஞர் ராபின்சன் அங்கு பின் வரிசையில் உட்கார்ந்திருப்பதை நான் காண்கிறேன். அது பயன்படுத்தப்படும் போது அதை நீங்கள் பார்த்திருக்கிறீர் களா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அதைப் பார்த்திருக்கிறேன் - இங்கே - இங்கே கர்த்தருடைய தூதனைக் குறித்து நான் கூறினது உண்மைதானா என்று கண்டறிய என்னை அந்த பொறிக் கருவியைக் கொண்டு, சோதனைக்குட் படுத் தினார். ஆகவே, அந்த பொறிக் கருவியை உங்கள் எதிரில் வைத்து விட்ட பிறகு இந்த - இந்த காரியத்தை நான் செய்யவில்லை என்று உங்களால் கூடுமான வரை மிக அருமையாக மெருகேற்றபட்ட விதமாக கூறினாலும்- நீங்கள் ஒரு குற்றவாளி யாக இருந்து அந்த பொய்யைக் கண்டறியும் பொறிக் கருவி யானது, நீங்கள் கூறுவது பொய் என்று குறியிடு செய்யும். புரிகின்றதா? எப்படி? அது உங்கள் நரம்புகளின் அதிர்வுகளை அந்தப் பொறிக் கருவியானது கிரகிக்கின்றது. பாருங்கள்? அது உங்களுக்கு கூறி விடும். ஏன் அப்படி நிகழ்கின்றது? மனிதன் தன்னுடைய மூல துவக்கத்திலிருந்தே பொய் சொல்லும் படி யாக உண்டாக்கப்பட வில்லை. பொய் சொல்வது பாவமாகும், உங்களைப் பொய் பேசும்படிக்குச் செய்வது உங்கள் மீதிருக்கும் பிசாசானவன் தான். பாருங்கள்? 96. உங்கள் சரீர அமைப்பானது பொய் பேசக் கூடாத விதத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகத் தான் நீங்கள் மறுபடியும் வாழ வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் என்றென்றுமாக, எப்பொழுதுமே வாழும் விதத்தில் தான் உண்டாக்கப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் பாருங்கள், பாவம் உள்ளே வந்து சரீரத்திற்கு மரணத்தைக் கொண்டு வந்தது. அப்படியானால், பாவமானது உள்ளே வந்து சரீரத்திற்கு மரணத்தைக் கொண்டு வருமானால், அப்பொழுது சரீரமானது மரித்துத் தானாக வேண்டும். ஆனால் அதற்குள்ளாக நித்திய ஜீவனால் வாசம் செய்ய முடியும், இந்த ஆவியானது உனக்குள்ளாக மாற்றப்படும் போது நீ நித்திய ஜீவனை கொண்டிருக்கிறவனாக இருக்கின்றாய். கடைசி நாளிலே தேவன் அந்த சரீரத்தை மறுபடியுமாக எழுப்புவார். அவர் அதைச் செய்யப் போவதாகக் கூறியுள்ளார். 97. ஆகவே என்னுடைய சிந்தை-சிந்தை... அவன் வேறொரு இடத்தில், " எனக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக் கிறது” என்று கூறுகிறான். இப்பொழுது, அந்த சிந்தையில் நீங்கள்-கிறிஸ்துவின் சிந்தையுடன் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள். பாருங்கள், உள்ளே இருக்கின்ற பகுதி (பாருங்கள்?), உள்ளே இருக்கின்ற பங்கு, அதனால் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள். அந்த உள் உணர்வு நிலை, அங்கே தான் விசுவாசமானது நங்கூரமிட்டு தங்கியிருக்கின்றது. 98. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்கே இருக்கின்ற மக்களாகிய நீங்கள் அநேக முறைகள், உங்களில் அநேகர் ஏதோ ஒன்று நடக்கப்போகின்றது என்று அறிந்திருந்த நேரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது நடந்திட முடியாத ஒன்றாக அது இருந்திருக்கும், ஆனால் அது நடந்திருக்கும், அது சம்பவிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறே நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்திருப்பீர்களா? அது தான் விசுவாசம், அந்த உள் உணர்வு நிலையானது கிரியை நடப்பித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, இங்கே சிறிது உஷ்ணமாக காணப்படுகிற தென்றால், வெப்பம் சற்று அதிகரிப்பதை நீங்கள் உணர்ந்தால் அங்கே இருக்கின்ற அந்த கருவியை இயக்கிக் கொள்ளலாம். 99. இப்பொழுது, அங்கே உள்ளே அந்த உள் உணர்வு மனசாட்சியானது (பாருங்கள்?) அங்கே உங்களுடைய சிந்தை யானது. இப்பொழுது இயேசு "ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால்.... (இப்பொழுது நான் எடுக்க நினைத்தது இதுவல்ல) ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய் யாகவே உனக்குச் சொல்லுகிறேன்''. இப்பொழுது தேவனு டைய ராஜ்யத்தை உங்களால் காணjடியாது, ஏனெனில் பரிசுத்த ஆவி தான் தேவனுடையடராஜ்யமாகும். ''இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தை வல்லமை யோடு காணுமுன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை'', எயன்று, அவர் கூறினார். ''அப்படியானால் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே'' என்று வேதாகமம் கூறுகின்றது. அது உங்களுக்குள் இருக்கிறது, அந்த பரிசுத்த ஆவி, அதை உங்கள் கண்களாலே, உங்களால் காணமுடியாது. ஆகவே காண்பது என்றால், "புரிந்து கொள்ளுதல்” என்று அர்த்தம். 100. நீங்கள் ஏதாவது ஒன்றை நோக்கிப் பார்த்து, சரியாக அதை நோக்கிப் பார்த்துக் கொண்டு, "உம், என்னால் எதையுமே காணமுடியவில்லை, என்னால் கண்டு கொள்ள முடியவில்லை” என்று கூறுவீர்களானால், உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அர்த்தமாகும். புரிகின்றதா? புரிகின்றதா? உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காண்பது என்றால் "புரிந்து கொள்ளுதல்” என்று பொருள்படும். ஆனால் உங்கள் கண்களால் எதைவேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் உங்களுக்குள் என்ன இருக்கின்றதோ அதைக் கொண்டு தான் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அதைக் கொண்டு நீங்கள் காண்கிறீர்கள். பாருங்கள்? தேவனுடைய கண்களைக் கொண்டு நீங்கள் காண்கிறீர்கள். 101. ஆகவே இப்பொழுது, உங்கள் கருத்திலே நீங்கள் இருங்கள். நீங்கள் தயாரென்றால் உங்களுக்காக அருமையான ஒரு கருத்து இங்கேயுள்ளது. ஒரு கிறிஸ்தவன் தன் கண்களால் காணாத காரியங்களை பார்த்துக்கொன்டிருக்கிறான் (பாருங்கள்?). ஏனெனில் நாம் காணப்படாததைத் தான் நாம் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? எப்படி நீங்கள் அதைப் பார்க்கின்றீர்கள்? உங்களுடைய உள்ளார்ந்த கண்ணின் மூலமாகத்தான். விசுவாசத்தினால் நீங்கள் அதைக் காண்கிறீர்கள். ஆகவே இப்பொழுது, நாம் அதை நிரூபிப்போம்: முழு கிறிஸ்தவ கவசமானது காணக்கூடாத பண்புகளால், காரியங் களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்தவகவசம் என்றால் என்ன? யாரோ ஒருவர் ''பார்ப்பது தான் விசுவாசமாகும்'' என்கிறார். அந்த நபர் ஒருபோதும் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது, ஏனெனில் கிறிஸ்தவ கவசமானது இதைக் கொண்டு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது, அதுதான்; அன்பு. நீங்கள் எப்பொழுதாவது அதைக் கண்டிருக்கிறீர்களா? அது செயல் படுத்தப் படுகையில் அதைக் கண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் அன்பை கண்டதில்லை. உங்கள் கண்களைக் கொண்டு ஒரு பொருளாகக் காணமுடியாது. அன்பின் ஒரு பகுதியை உங்களிலிருந்து வெளியே எடுங்கள், அது எவ்வாறு காணப்படுகிறது என்பதை நான் பார்ப்பேனாக. பாருங்கள்? அன்பு, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், விசுவாசம் - விசுவாசம், நற்குணம் (பாருங்கள்); சரீரப்பிரகாரமான கண்களாலே முழு கிறிஸ்தவ கவசமானது காணப்படாததாக உள்ளது, ஆனால் அது இருதயத்தாலே புரிந்து கொள்ளப் படுகின்ற ஒன்றாக இருக்கிறது! உங்களுக்குப் புரிகின்றதா. உங்களுக்கு புரிகின்றதா. 102. பவுல், ''என் மனதினாலே... ('அவன் கிறிஸ்துவின் சிந்தையை உடையவனாயிருக்கிறேன்!' என்று கூறினான்) ''நானே என் மனதினாலே தேவனுக்கு ஊழியம் செய்கிறேன், மாம் சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய் கிறேன்'' என்று கூறினான். அது என்ன? இன்றிரவு என் மாம்ச மானது, ''நீ மிகவும் களைப்படைந்திருக்கிறாய். உன் தொண்டை மிகவும் கரகரப்பாகக் காணப்படுகிறது. அங் கே குளிரில் வெளியே சென்று வந்தாய். இன்றிரவு உன்னால் நீ சபைக்குச் செல்ல முடியாது,'' என்று கூறுகிறது. அதுதான் மாம்சத்தின் பிரமாணம். "நீ அவர்களை தொலை பேசியில் அழைத்து விவரத் தைக் கூறி கேள்விகளை சகோதரன் நெவிலுக்கு அனுப்பி அவரை பதிலளிக்கும் படிக்கு கூறி விடு''. ஆனால் பாருங்கள். நான் அதைச் செய்வதாகத் தான் வாக்களித்துள்ளேன். பாருங்கள்? 103. இப்பொழுது, என் சிந்தையில், உங்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர், ''நீ உன் வாக்கைக் காத்துக் கொள்” என்று கூறினார். ஆனால் மாம்சமே, ''நீ மிகவும், களைத்துப் போயிருக் கிறாய்” என்று கூறுகிறது. பாருங்கள்? 104. இப்பொழுது மாம்சமானது, ''இதோ பார், நீ மிகவும் அழகானவள், பள்ளியில் நீ தான் மிகவும் அழகுள்ள ஒருவள். ஆகவே உன்னுடைய பரிசுத்த உருளையான தாயும், உன் மூடபக்தி வைராக்கிய தந்தையும் கூறுவதின் மேல் கவனம் செலுத்தாதே. புரிகிறதா? பள்ளியில் நீ தான் அழகாகக் காணப்படுகின்ற பெண்மணியாவாய்'' ''நீ தான் அழகுள்ள வாலிபன், சிறப்பாகக் காணப்படுகிற பையன், உறுதியாக அமைக்கப்பட்ட கட்டுடல் கொண்டவன் நீ. நகரத்திலேயே நீ தான் புகழ்பெற்றவன்,'' என்று கூறும். நீங்கள் பாருங்கள்? அந்த - அந்த ... ஆகவே உங்களுடைய அவயவங்களை அதற்கு ஒப்புவித்து விடுகிறீர்கள், பிறகு எப்படி நீங்கள் வெளியே வருகிறீர்கள்? ஒவ்வொரு முறையும் அதன் கடைசியில்... பாருங்கள்? 105. பவுல் ''என் மாம்சமானது எப்போதுமே அதற்கு ஒப்புவிக்கவே விரும்புகிறது,'' என்றான். உங்கள் மாம்சமும் அவ்விதம் தான் செய்கின்றது. பாருங்கள்? ஆனாலும் இருதயத்தில் இருக்கின்ற தேவனுடைய ஆவியின் பிரமாண மானது மாம்சத்தை மேற்கொண்டு, செய் என்று இருதயமானது எதைக் கூறுகிறதோ, அதற்கு சரீரத்தை கீழ்படியும் படி செய்கின்றது. அல்லேலூயா! 106. கவனியுங்கள், ஒரு பாவிக்கு அவ்விதமாக அது செய்யக் கூடுமென்றால், வியாதிக்கும் கூட அது கிரியை செய்யாம் லிருக்குமோ? இருதயத்திலிருக்கின்ற தேவனுடைய ஆவியின் பிரமாணமானது ''அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்'' என்பதை அறிந்திருக்கிறது, அவை தாமே தங்களுடைய வல்லமையால் நின்று அந்த சரீரத்திலிருக்கின்ற அந்த வியாதியானது தங்களுக்கு கீழ்ப்படியும் படிக்குச் செய்கின்றது, ஏனெனில் அது பிசாசாகும். உங்களுக்கு புரிகின்றதா. வியூ! இது மிகவும் ஆழமான ஒரு காரியமாகும். நான் உங்களுக்கு அதைத்தான் கூறுகிறேன். அதுதான். பாருங்கள். 107. இப்பொழுது, பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணம் உங்கள் மாம்சத்தில் கிரியை செய்கின்றது, ஆனால் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் உங்கள் இருதயத்தில் கிரியை செய்கின்றது. ஆகவே உங்களுடைய இருதயம், உங்கள் இருதயத்திலுள்ள உங்கள் ஆவியானது செய் என்று எதைக் கூறுகிறதோ அதற்கு சரீர மானது கீழ்ப்படியும்படிக்குச் செய்யும். அது முற்றிலும் சரியே. இப்பொழுது, அதைத் தான் பவுலும் கூறினான். மாம்சமானது எப்பொழுதுமே, ''நான் மிகவும் களைப்புற்றிருக்கிறேன்; என்னால் முடியவில்லை; நான் போதுமானவன் அல்ல; என்னால் அதைச் செய்ய முடியாது” என்று கூறும். நான் இங்கே லாயிஸிடம் அல்லது டோலெரஸ் அல்லது யாரோ ஒருவர் என்னிடம் பரிசுத்த ஆவியைக் குறித்து அல்லது அதற்கடுத்த ஒன்றைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது நான் கூறினேன், "என்ன ... '' டோலெரெஸ் ''நான் நலமாக உணரவேண்டிய அச் சமயத்திலே அதற்கு மாறான ஒரு விதத்திலே நான் உணரத்தக்க தாகச் செய்தது என்ன?,'' என்றார்கள். 108. நான் “அந்த பிசாசுதான். அதைப் பெற்றுக் கொள்ள தயாராக நீங்கள் இருப்பதை அவன் கண்டான். "ஒரு சிறு தைரியமூட்டும் தடையை அவள் மீது நான் வைப்பேன் (சகோ தரன் பிரன்ஹாம் அதை விவரிக்க ஒரு சிறு சத்தத்தை உண்டாக்குகிறார்-ஆசி) , அதை சிறிது அவள் பேரில் அதிகரித்து, அவளை சிறிது அமைதிபடுத்தி விடுவேன்! என்றான்,'' பாருங்கள்? ஆனால், ஓ, என்னே , அந்த சமயத்தில் தான் நீ எழும்ப வேண்டும்! தேவன் உனக்களித்த உன்னுடைய உரிமை களை உரிமை கோர வேண்டும்'', என்றேன். அதைத்தான் பவுல் கூற விழை கிறான். பாருங்கள்? அந்த... ''எப்பொழுதுமே'' - அவன் "நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண் டென்று ... காண்கிறேன்” என்று கூறுகிறான். 109. நான், நீ என்ன செய்ய வேண்டுமென்று கூறட்டும். இதை நான் கவனித்திருக்கிறேன், என் மனைவி மற்றும் நான் ... நான் சற்று துரிதமாக முடிக்கிறேன், ஏனெனில் இன்னும் சில நிமிடங்கள் தான் எனக்கு உள்ளன, இன்னும் சில பெரிய கேள்விகள் என்னிடம் உள்ளன. நான் உங்களை நீண்ட நேரம் உட்கார வைக்க விரும்பவில்லை, ஆனால் உங்கள் கேள்விகளுக்கு என்னால் முடிந்த வரை சிறந்த விதத்தில் பதிலளிக்கவே விரும்புகிறேன். 110. கவனியுங்கள்! காலையில் என்னால் ஆரம்பிக்க முடியும், ஆகவே நான் ..... இப்பொழுது, ஒரு கூட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் படிக்கு தேவன் என்னை வழிநடத்துகிறார், நல்லது, சகோதரனே, எல்லா காரியமும் நடந்தேறுவதை சற்று கவனித்துப் பாருங்கள். அல்லது நீங்கள் என்னை வீட்டிற்குச் செல்ல விடுங்கள், அங்கேயும் நீண்ட தூர தொலைபேசி அழைப்புகள் எனக்கு வருகின்றன. இப்பொழுது நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். சிறு ஜோசப் நேராக என் கழுத்தை நோக்கி என் மீது ஏறி வருவான். சாராள் ஒரு கேள்வியை என்னிடம் கேட்பாள். பெக்கி பியானோவை வாசிக்க ஆரம்பித்து விடுவாள். நான் “உஷ் - உஷ் - உஷ்!'' என்பேன். என் கையை அவர்கள் மீது வைத்து, "ஹே, உஷ், உஷ், உஷ், நான் - வியாதியஸ்தருக்காக அப்பா ஜெபிக்கப் போகிறேன்” என்று கூறுவேன். ''உம், அப்பா, இதோ பாருங்கள், ஜோசப் இவ்வாறு செய்து விட்டான்...'' நீங்கள் பாருங்கள்? ஜெபத்தை ஆரம்பித்து விடுவேன். ஜெபம் முடிந்த பிறகு, அவர்கள் தங்கள் பொம்மைகளை எடுத்து அமைதியாக இருப்பார்கள். அது பிசாசாகும். நிச்சயமாக அது அதுவே தான். 111. பிறகு நான் வந்து, ''ஜோசப், நீ இன்ன - இன்ன காரியத்தை செய்யக்கூடாது'' என்பேன். உங்களுக்குத் தெரியுமா, முதலாவதாக அவன் ஒரு பழக்கத்திற்குள் வந்து விடுவான் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் பிள்ளை களிடத்திலும் அதை கவனிக்கலாம், அவர்கள் உங்களிடம் பொய் பேசுவார்கள். ஆம், அது தான் உங்கள் பிள்ளைகள் மேல் இருக்கின்ற பொய்யின் ஆவியாகும். இதற்கு ஒரே ஒரு பரிகாரம் தான் உண்டு. ஒரு பெரிய பிரம்பு அல்ல, உங்களுக்கு தெரியும், சகோதரன் ஜெஸ், நாங்கள் உதை வாங்கின அந்த கோல். நாங்கள் தொல்லையில் சிக்கிக் கொண்டால் பழைய துப்பாக்கிகளிலிருந்து அந்த கோல்களை எடுப்பார்கள், ஹிக்கரி மரத்தின் உறுதி வாய்ந்த கட்டை, உங்களுக்கு தெரியும், பழைய துப்பாக்கி வாய் முகப்பு கட்டைகள். இந்த விதமான பரிகாரம் வேலை செய்யாது. ஆனால் ஜெபம் தான் அந்த தீய பிசாசை அப்பிள்ளையிடத்திலிருந்து துரத்தியடிக்கும். அது சரியே. ஜெபம் தான் அதைச் செய்யும். 112. ஆகவே உங்கள் சிறு மோலி தன்னுடைய சிறிய காலை உதைத்துக் கொண்டு, அங்குமிங்கும் வெளியே ஓடி, தன்னுடைய சிறு மூக்கை திருப்பிக் கொண்டிருப்பாளானால், அவள் மீதிருக்கும் ஆடைகள் இல்லாமல் போகும் விதத்தில் அவளை நீங்கள் அடிக்கலாம்; ஆனால் இன்னுமாக அவ்விதமாகவே செய்து கொண்டிருப்பாள். ஆனால் நீங்கள் அதை தேவனுக்கு முன்பாக வைத்து, அப் பிள்ளையின் ஆத்துமாவை தேவனுக்கென்று உரிமை கோருங்கள். நீங்கள் அப்படியே செய்து கொண்டு தரித்திருங்கள். எனக்குத் தெரிந்த வரை அது தான் சிறந்த காரியமென்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா! எனக்குத் தெரிந்த வரை அது தான் சிறந்த ஒரு பரிகாரம், அது ஜெபம் தான். 103. இப்பொழுது, நாம் பார்ப்போம். இப்பொழுது இங்கிருக்கின்ற அடுத்த கேள்வி இவ்விதம் இருக்கிறது, உலகம் உண்டாவதற்கு முன்னே முன்குறிக்கப்படுதல் என்றால் என்ன அர்த்தம்; இது வேதாகமத்தில் எங்கு காணப்படுகிறது? உலகம் துவங்குவதற்கு முன்பே  முன்குறித்தல்? 113. சரி, என் விலையேறப்பெற்ற நண்பரே, நாம் ஒரே நிமிடத்தில் எபேசியர் 1 ஆம், அதிகாரத்திற்கு திருப்புவோம். இது சரியான பதிலாக இல்லாதிருக்கும் பட்சத்தில் இந்த பொருளைக் குறித்து நீண்ட நேரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நாம் எபேசியர் 1வது அதிகாரத்தை வாசிக்க ஆரம்பிப்போம். 114. இப்பொழுது, முதல் காரியமாக, இதை நான் கூற விரும்பு கிறேன்,- இந்த, முன்குறித்தல் என்கின்ற வார்த்தையானது பயிற்று விக்கப்படாத ஒரு கூட்டத்திற்கு முன்பாக உபயோகப் படுத்துவது ஒரு ஊழியக்காரனுக்கு கடினமான வார்த்தையாக காணப்படும். பாருங்கள்? அது அவ்வாறே தான். நான் அதை உபயோகப்படுத்துவதில்லை. சில நேரங்களில் இங்கே சபையில் ..... ஆனால் அங்கே கூட்டங்களில், அங்கே வெளியே... எல்லாம் ஒன்றாக எல்லாவற்றிலிருந்தும் ஒன்றாக சேர்க்கப்பட்டிருக் கையில், நான் அந்த வார்த்தையை நான் கவனிப்பேன். நான் முன்னறிவு என்ற வார்த்தையைத் தான் எப்பொழுதும் உபயோகிப்பேன், ஏனெனில் முன்குறித்தல் என்பது தேவனு டைய முன்னறிவே தான். தேவன் முடிவில்லாதவராக இருப்பதால், முன்னறிவின் படியே அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார், அல்லவென்றால் அவர் முடிவில்லாதவரல்ல. பாருங்கள், பாருங்கள்? என்ன நடக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆதலால் முன்னறிவின்படி அவரால் முன் குறிக்க ஏதுவாயிருந்தது? அதன் காரணமாகத் தான் நான் விசுவாசிப்பதென்னவென்றால், தேவன் - தேவன் ... 115. நீங்கள் சுவாசிக்கின்ற காற்றைப் போல; உங்கள் சுவாசம் தான் உங்களுடைய ஆவி என்கின்ற யேகோவா சாட்சிகள் ஸ்தாபனத் தாரின் கருத்துடன் நான் ஒத்துப் போவதில்லை. அது அவ்வாறே இருக்க முடியாது. பாருங்கள் உங்கள் ஆவி உங்களுடைய இருதயத்தில் தான் உள்ளது. பாருங்கள்? நீங்கள் உலகத்திற்கு வருமுன்னறே உங்களுடைய ஆவியைக் கொண்டிருந்தீர்கள். தேவன் எரேமியாவிடம் , அவன் தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னறே அவனைப் பரிசுத்தம் பண்ணி ஜாதிக்கு - ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக்கி, அவனை அறிந்திருந்ததாகவும் கூறினார். (பாருங்கள்?) எரேமியா 1:4. 116. இப்பொழுது கவனியுங்கள். ஆகவே இந்த காரியங்க ளெல்லாம் முன்னறிவு தான் என்பதை நாம் காண்கிறோம். இயேசு பிறப்பதற்கு முன் - யோவான் பிறப்பதற்கு எழு நூற்று பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏசாயா அவனை தரிசனத்தில் கண்டு, வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருந்தவன் இவன்தான் என்று கூறினான் - 712 வருடங்கள். ஏதேன் தோட்டத்திலிருந்து, இயேசு கிறிஸ்து உலகத் தோற்றத்திற்கு முன்னர் .... 117. எப்படி.... ? இதை நாம் வாசிப்போமாக. எபேசியர் 1, 1வது அதிகாரம் - 1வது வசனத்திலிருந்து நாம் வாசிக்க ஆரம்பிப்போம். .....அப்போஸ்தலனாகிய பவுல்... (எப்படி இவன் கூறுகிறான் என்று கவனியுங்கள். பவுல் இவ்விதமாக செய்வது எனக்குப் பிடிக்கும். பவுலை எனக்கு பிடிக்கும், உங்களுக்கும் தானே? ஓ, அவன் கிறிஸ்து வினுடைய அருமையான ஊழியக்காரன் ஆவான். இப்பொழுது இதை கவனியுங்கள்) தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசு வுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: 118. கவனியுங்கள், இது உலகத்திற்கு கூறப் படவில்லை; இது ஒரு அயலானுக்குக் கூறப்படவில்லை. இது இயேசு கிறிஸ்துவுக் குள்ளாக இருக்கிற சபைக்கு கூறப்படுகிறது (ஓ, இது அருமையானதாக உள்ளதல்லவா?) இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற சபைக்கு. அது .... இப்பொழுது இயேசு கிறிஸ்து விற்குள்ளாக எப்படி நீங்கள் செல்கிறீர்கள்? ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ் நானம் பண்ணப்பட்டுள்ளோம். இப்பொழுது - எப்படி ... ஆகவே அவன் இதை பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள மக்களுக்கு மாத்திரமே கூறுகிறான் (பாருங்கள்?) வெளி உலகத்திற்கல்ல. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு - தேவனாகிய நம்முடைய பிதா - ஸ்தோத் திரம்: அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்! 119. ஓ, என்னே ! இதன் பேரில் சற்று சிந்தித்துப் பார்க்க உங்களுக்கு விருப்பமுண்டாகுமா? நல்லது, நமக்கு விருப்ப முண்டு. நிச்சயமாக! அதே பரிசுத்த ஆவி. நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே அவரோடேகூட உட்கார்ந்து, எல்லா ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று கூறுகிறது, சகோதரி ரோஸ். நான் நம்புகிறேன் - அந்த அது .... முந்தின நாளிலே உங்கள் பெயரை என்னால் நினைவு கூற முடியவில்லை. ஜெபவரிசையில் அல்லது ஏதோ ஒன்றில் இருந்தீர்கள் என நான் நம்புகிறேன். பின்னர் அதை நினைவு கூற நான் முயற்சித்தேன். அப்பொழுது நான் - ஆனால் உங்கள் பெயர் ரோஸ் ஆஸ்டின், அது சரியல்லவா...? ..... இங்கே கூடாரத்திற்கு நீங்கள் எப்பொழுதும் வருவது வழக்கம். அதுவே தான். சரி. இப்பொழுது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே - எல்லா ஆவிக்குரிய - ஆசீர்வாதம் ... (இந்த மேற்கோளை சரியாக நான் வாசிக்கிறேனா என்று நான் பார்க்கிறேன்) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்: அவர் கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத் தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே அவரோடே கூட கூட்டமாய்க் கூடியுள்ளோம்) . (இப்பொழுது கவனியுங்கள்! எல்லாம் தயாராக இருக்கிறீர்களா?)... தமக்கு முன்பாக... உலகத் தோற்றத் திற்கு முன்னே ... (நான் உங்களுக்கு பிரசங்கித்தேன்)... கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே, 120. இப்பொழுது பாருங்கள், அவன் சபைக்கு பேசமுடியும். அவன் அதை குழந்தைகளுக்கு கூற மாட்டான், ஆனால் ஏற்கெனவே கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற ஒரு சபைக்கு அவன் பேசிக்கொண்டி ருக்கிறான். இப்பொழுது, அவன் ஏதோ ஒரு சபைக்குச் சென்று “இதோ பாருங்கள்” என்று கூற முடியாது. அது கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கின்ற தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குத்தான். 121. இப்பொழுது நீங்கள் “ஆம், நானும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறலாம். நீங்கள் அப்படித்தான் என்றால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் -பெற்றிருப்பீர்கள், ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக செல்லக்கூடிய ஒரே வழி அதுவேதானாகும். 1 கொரிந்தியர் 12:13 (பாருங்கள்?) - I கொரிந்தியர் 12வது அதிகாரம். சரி. "ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக (அது கிறிஸ்துவின் சரீரம்) ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்.'' இப்பொழுது! அப்படியானால் நாம் ஒரு மனப்பட்டு உன்னதங்களிலே அவரோடு கூட அமர்ந்திருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் அசைவாடி நமக்கு மகத்தான காரியங்களை காண்பித்து, நமக்கு போதித்து, காரியங்கள் நிறைவேறும் படிக்குச் செய்து கொண்டிருக்கிறார். ஓ, என்ன ஒரு இடம். 122. அவன், “அவ்விதமாக அழைக்கப்பட்டவர்களாயிருக்கிற நீங்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய உங்களிடம் நான் பேச விரும்புகிறேன். உலகத்தோற்றத்துக்கு முன்னே தமக்குள் தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார், அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள்.'' என்றான். உலகத்தோற்றத்துக்கு முன்னே தேவன் நம்மை தமக்குள் தெரிந்து கொண்டார். இதே பொருளை இன்றிரவில் நான் பேசுவேன் என்பதை உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் அறிந்திருந்தார். அவர் முடிவில்லாதவர். உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே .... ஓ! வியூ! பரிசுத்த ஆவியை இப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள். வார்த்தை அதைக் கொண்டு வரும். பாருங்கள்? அந்த விதமாகத் தான் அது வருகின்றது: “பேதுரு இந்த வார்த்தைகளை பேசின போது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார்.'' 123. உனக்கு பரிசுத்த ஆவி கொடுக்கப்படவேண்டுமென்று உலகம் என்ற ஒன்று இருக்கு முன்னதாகவே தேவனுடைய எண்ணங்களில் நீ இருந்தாய், ஏனெனில் நீ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதை அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார்; தாமாகவே அவர் உன்னைத் தெரிந்து கொண்டார். ஏனெனில் நீ வாஞ்சித்தது ... நீ அல்லது இயேசு உங்கள் இருவரில் ஒருவராவது பூமியின் மீது இருப்பதற்கு முன்னதாகவே அவர் உன்னை கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார். பிறகு உன்னை தமக்குள்ளாகக் கொள்ளத்தக்கதாக உனக்கு பரிசுத்த ஆவி அளிக்கப்பட்ட ஒரு வழியை ஆயத்தம் செய்ய இயேசுவை, மரிக்கும்படிக்கு அவர் அனுப்பினார். ஓ, அது... எனக்குத் தெரியும் நான் .... இது தான் சபை, நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். ஓ, இது எனக்கு மிகவும் ஐசுவரியமிக்க ஒன்றாகும். இது நான் விரும்பாதது; இது என் வாஞ்சைகளாயிராதது; இது என் சொந்த விருப்பமாய் இல்லாதது; இது என்னுடைய தெரிந்து கொள்ளுதலே அல்ல; இதனுடன் எனக்கு ஒரு தொடர்பும் இல்லாதிருந்தது என்பதை நான் நினைக்கும் போது- ஆனால் உலகமானது துவங்குவதற்கு முன்னதாகவே தேவன் நம்மைக் கண்டு நம்மை ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்திலே நம்முடைய பெயர்களை எழுதி வைத்தார். உலகம் என்கின்ற ஒன்று இருக்கும் முன்பே! தேவனைக் குறித்து பேசுவது என்பது! வியூ! 124. அங்கே நான் அந்த பெரிய கண்ணாடி இருக்குமிடத்தில் நின்று கொண்டிருக்கும் போது .... ஒரு நூற்று இருபது மில்லியன் வருடங்கள் நீளமுள்ள விண்வெளியை உங்களால் காண முடியும். (நான் இந்த கண்ணாடியின் மூலமாக பார்க்க தருணமில்லாதிருந்தது, ஆனால் அவர்கள் எடுத்த புகைப் படத்தை நான் கண்டேன்) - நான் அந்த இடத்திலேயே என் கைகளை மேலே உயர்த்தினேன், நான் ''நீர் எவ்வளவு மகத்துவமானவர், நீர் எவ்வளவு மகத்துவமானவர்!'' என்றேன். அந்த கிரகங்களில் ஒன்றாகிலும் சுழல்வதற்கு முன்பாகவே (அல்லேலூயா!) இயேசு கிறிஸ்துவிற்குள்ளாக தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார். இப்பொழுது, நீர் எவ்வளவு மகத்துவ மானவராக இருக்கிறீர். ஆம், ஐயா! 125. உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்னதாகவே, கிரகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, சூரியன் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, சந்திரன் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, எந்த ஒன்றுமே இருப்பதற்கு முன்னதாகவே, தேவனும் தம்முடைய சிந்தைகளுமாக, தேவன் மாத்திரமே இருந்தபோது, தேவனுடைய நித்திய சிந்தை உன்னை முன்குறித்தலின் படி, முன்னறிவின் படியே உன்னைத் தெரிந்து கொண்டு, நீ பூமியில் இருக்கப் போகிறாய் என்றும், பாவம் என்ற ஒன்று இருக்கும் என்றும் அறிந்திருந்தார். 126. யாரோ ஒருவர், “அப்படியானால், ஏன் - ஏன் பாவம் இருந்தது?'' என்று கேட்டார். அப்படியானால் பாவம் என்ற ஒன்று இல்லாதிருந்தால், ஒரு இரட்சகர் என்கின்ற அவருடைய தன்மை வெளியாகாமலிருந்திருக்கும். அவர் ஒரு இரட்சகராக இருக்கத்தக்கதாக ஒரு பாவி இருக்க வேண்டியதாயிருந்தது. அவர் சுகமாக்குபவராக இருக்கத்தக்கதாக ஒரு வியாதியுள்ள மனிதன் இருக்க வேண்டியதாக இருந்தது. ஆமென்! உங்களுக்கு புரிகின்றதா. அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டியதா யிருந்தது. தேவன் தான் அதைக் கண்டு அது அவராலே முன் குறிக்கப்பட்டதாயிருந்தது. பிசாசானவன் காட்சியிலேயே கிடையாது. ஓ, "அப்பா, பிதாவே” என்று பிள்ளைகள் தம்மிடம் அழுது அவர்களை தம்மிடம் கொண்டு வரும் ஒரு கருவியாக சாலையின் ஓரத்திலிருக்கிற குப்பையான அவனை தேவன் உபயோகப்படுத்துகின்றார். அந்த நாளில் தூதர்கள் எப்படிப் பாடுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எவ்வளவு அற்புதமாயிருக்கும்! நாம் மீட்பின் சம்பவங்களைப் பாடுகையில் தூதர்கள் தலைகளை தாழ்த்துவார்கள்; நாம் எதைக் குறித்து பேசுகிறோம் என்பதை அவர்கள் அறியாதிருப்பார்கள். நிச்சய மாக. அவர்கள் இழக்கப்பட்டவர்கள் அல்ல. அது என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. நாம் எவ்வளவு அருமையாக உணர்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது, நாம் ஒரு காலத்தில் பாவிகளாயிருந்து தேவனிடமிருந்து அகன்றிருந்து, நம்பிக்கையில்லாமல், இரக்கம் இல்லாதவர்களாய், இந்த சீர்கேடான உலகத்திலே தேவனில்லாமல், மரித்துக்கொண்டு, பிசாசின் பாதாளத்திற்கு போய் கொண்டிருந்த வேளையில்; தேவன் தாழ இறங்கி குனிந்து நம்மை தூக்கி எடுத்து, நம்மை மீட்டார்; இப்பொழுது நாம் தூதர்களுக்கு மேலாக இருக்கிறோம். சரியாக இப்பொழுகே! 127. அது என்ன? ஒரு தூதன் பணியாளன் ஆவான். நாமோ குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறோம். அதிகமாக நினைவு கூறப்படுவது யார், உங்களுடைய வேலைக்காரனா அல்லது உங்களுடைய குமாரனா அல்லது குமாரத்தியா? ஓ, என்னே! பரிசுத்தவானுக்கான ஜெபம் ஒரு தேவ தூதனை விட இலட்சக் கணக்கான முறை அதிகம் மேலே செல்லும் (ஆம் ஐயா!) ஏனெனில் அவன் குமாரனாயிருக்கிறான். ஓ, என் சகோதரனே, சகோதரியே. அது சரியே. 128. நீ .... சபை ... நான் விசுவாசிப்பதில்லை .... ஆவியால் நிரப்பப்பட்ட ஜனங்களாகிய நீங்கள் யார் என்பதையும் தேவன் உங்களை வைத்திருக்கின்ற ஸ்தானத்தையும் நீங்கள் எப்போதும் உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய குமாரர்களா யிருக்கிறீர்கள். ஏன், தேவ தூதன் ஒரு பணியாளன் ஆவான். நீயோ குமாரனாயிருக்கிறாய்! ஒரு தூதனால ஒரு செய்தியை மாத்திரமே கொண்டு வரமுடியும், ஆனால் அதை செயலாக்கத் தில் கொண்டு வருவது நீ தான். ஆமென்! காட்சியில் இருக்கும் செயலாற்றுபவன் நீ தான். நீ குமாரனா யிருக்கிறாய். உனக்கு செய்தியைக் கொண்டு வரத்தக்கதாக தேவ தூதர்கள் பணியாளர் களாக இருக்கிறார்கள். "நீ இன்ன... இன்னதைச் செய்யும்ப டியாய் நான் இந்த செய்தியை உனக்கு கொண்டு வந்திருக் கிறேன். இது பிதாவிடமிருந்து வந்திருக்கிறது. நான் இதை உனக்குக் கொண்டு வருகிறேன். ஆம்!'' என்று கூறுவார்கள். அவ்வளவே தான். ஆமென்! நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். அவர் நம்மை முன்குறித்தார்! இப்பொழுது ஒரு நிமிடம் சற்று கவனியுங்கள். 103. தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்த முள்ளவர்களும் (கவனியுங்கள், நீங்களாகவே அவ்வாறே இருக்க வேண்டுமென்று முயற்சிக்காதீர்கள், ஏனெனில் உங்களால் முடியாது)... குற்றமில்லாதவர்களுமா யிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... (இப்பொழுது, நாம் தெரிந்து கொள்ளவில்லை.... என்னால் அவரை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? நானூறு இலட்சக் கோடி, இலட்சக் கணக்கான, இலட்சக் கோடி, நூறாயிரங்கோடி ஆண்டுகளுக்கு முன்பே எப்படி என்னால் அவரைத் தெரிந்து கொண்டிருக்க முடியும்? ஆனால் அவர் தான் என்னைத் தெரிந்து கொண்டார். ஆமென்? ஓ, சகோதரன் உட், அதுவே தான், பாருங்கள்?) ஓ, சகோதரனே, இங்கே சில நிமிடங்களுக்கு முன்னர் நான் கண்ட ஒரு கேள்விக்கு இது ஒரு பதிலாக இருக்கும். எங்கோ சற்று முன்னர் நான் கண்டேன் ... ஓ ஆம். . எப்படி ஒரு மனிதனால் தேவனோடு மிக நெருங்கி ஜீவிக்கையில், அவன் பாவமில்லாமல் இருக்க முடியுமா? இதை கவனியுங்கள். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு... உலகத்தோற்றத்துக்கு முன்னே ... 129. அவருடைய அன்பு இதைச் செய்தது. என்னுடைய பாவத்துக்கு அவருடைய அன்பு பரிகாரத்தை செலுத்தியது. அவருடைய அன்பு அதை எடுத்துப்போட்டது.இருப்பதிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தி அன்பு மாத்திரமே. தன்னுடைய மனைவியை மிகவும் நேசிக்கிற ஒருவனைப் பார்ப்பீர்களானால், அவன் தன் மனைவிக்காக உயிரைக் கூட தாராளமாக விடுவான். மேலும் சகோதர அன்பானது .... 130. அங்கே நகரத்திற்கு வெளியே இருக்கின்ற இடத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு மனிதன் இருந்தார், அவர் சபைக்கு எப்பொழுதேனும் ஒரு முறை சபைக்கு வருவார். அவர் தன் சகோதரனின் வீட்டில் முன்னொரு நாளிலே உட்கார்ந்து கொண் டிருந்தார். அவர் ''சகோதரன் பில்லிற்கு ஏதாவது சம்பவித்தால் என்ன ஆகும்?” என்றார். மேலும் அவர், "நான் சந்தோஷமாக என் மார்பை உந்தித் தள்ளி அவரை தாக்க வரும் துப்பாக்கி குண்டுகளை என் மார்பில் வாங்கிக் கொள்வேன்” என்றார். பாருங்கள்? உனக்காக மரித்தல். அதுதான் அன்பு. தன்னுடைய சகோதரனுக்காக உயிரைக் கொடுக்கும் அந்த மனிதனின் மகத்தான அன்பைப் போல வேறெதுவும் கிடையாது. பாருங்கள்? 131. அன்பினால், அன்பினாலே உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்மைத் தெரிந்து கொண்டார். இப்பொழுது கவனியுங்கள்: தம்முடைய தயவுள்ள சித்தத்தின் படியே நம்மை இயேசு கிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார் ...... (இதோ, முன்குறித்தல் என்கின்ற வார்த்தை ) .... முன்குறித்திருக்கிறார் - 132. சகோதரன்மைக் இதைக் குறித்தென்ன? இது அற்புதமான தல்லவா? அவர் உன்னை நேசித்தார். உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்னதாகவே அவர் உங்களை நேசித்தார். உங்கள் சுபாவத்தை அவர் அறிந்திருந்தார்; உங்கள் பலவீனங்களை அவர் அறிந்திருந்தார்; உங்கள் பழக்கங்களை அவர் அறிந்திருந்தார். நீங்கள் என்னவாயிருக்கப் போகிறீர்கள் என்பதையும், உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அவர் அறிந்திருந்தார். அவர் அப்பொழுது அங்கிருந்த அந்த மகத்தான பிரபஞ்சத்தை முழுவதுமாக பார்த்து "அவனை நான் காண்கிறேன்'' என்றார். உயிரின் ஒரு சிறு தூள் கூட இருப்பதற்கு முன்பாகவே அவர் அதைச் செய்ததால், நீங்கள் தேவனோடு நித்தியமானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, நீங்கள் நித்தியமாக மாறுகிறீர்கள், ஏனெனில் நீங்கள்தேவனோடிருந்தீர்கள், தேவனின் பாகமாக இருந்தீர்கள். நான் என்ன கூற விழைகிறேன் என்பதை உங்களாலே காண முடிகிறதா? நீங்கள் தேவனைப் போன்றே நித்தியமானவர்களாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் .... 133. என் தந்தை எவ்வளவாக பிரன்ஹாமாக இருந்தாரோ அதே விதமாகவே நானும் பிரன்ஹாமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பிரன்ஹாமின் இரத்தமாக இருக்கிறேன். நான் என் தந்தையுடன் பிரன்ஹாமாக இருக்கிறேன், ஏனெனில் என் தந்தையிலிருந்து நான் பிறந்தவனாயிருப்பதால் அவரோடே நானும் ஒரு பிரன்ஹாமாக இருக்கிறேன். நீங்களும் உட் (Wood) ஆக இருக்கிறீர்கள். ஏனெனில் உங்கள் தந்தைக்கும் உட் என்று தான் பெயர். உங்கள் தந்தை ஜிம் வுட் (Jim Wood) எவ்வளவாக இருந்தாரோ அதேவிதமாக நீங்களும் வுட் (Wood) ஆக இருக்கி றீர்கள். நீங்கள் பாங்க்ஸ் வுட் (Banks Wood) அவ்வளவே. ஆமென்! ஓ, என்னே! நீங்களும் நெவில் தான். ஏனெனில் உங்கள் தகப்பனும் நெவில் ஆக இருந்தார். அவர் எவ்வாறு நெவில்லாக இருந்தாரோ அந்தவிதமாக நீங்கள் நெவில்லாக இருக்கிறீர்கள். மகிமை! தேவனும் நித்தியமானவராக இருப்ப தினால் நாமும் நித்தியமானவர்களாக இருக்கிறோம்; ஏனெனில் நாம் தேவனுடைய ஒரு பாகமாயிருந்து, நித்திய ஜீவனின் மூலமாக தேவனுடைய குமாரரும் குமாரத்திகளு மாயிருக் கிறோம், ஆதலால் நாம் அழிந்து போகவே முடியாது. ''கடைசி நாட்களிலே நான் அவர்களை எழுப்புவேன்”. 134. அவர்கள் அங்கே பவுலின் தலையை துண்டிக்க ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்த போது .... அவன் அந்த மரண பாதையை கடக்க வேண்டியவனாக இருந்தான். தீமோத்தேயுவிற்கு அந்த கடைசி நிருபத்தை எழுதினான், ''நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை முடித்தேன்; விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்! இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதி பதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருள்வார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” என்றான். அப்பொழுது மரணம், ''நான் உன்னை நோக்கி வருகிறேன்” என்றது. அவன் "உன் கூர் எங்கே?'' என்றான். பாதாளம் அவனிடம் "உன்னை நான் விழுங்குவேன்'' என்றது. 135. அவன், "உன் ஜெயம் எங்கே ?'' என்றான். அவன் ஒரு உதாரணத்தைக் கொண்டிருந்தான். அவன் திரும்பி கல்வாரியை நோக்கிப் பார்த்து, "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவி னாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான். உங்களுக்கு புரிகின்றதா. ஓ, அது உணர்வுகளை கிளர்ச்சி யடையச் செய்யத் தான் வேண்டும்; அது அப்படியே ஆகத் தான் வேண்டும். 136. ஜீவன்... வார்த்தையானது புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது, ஜீவன், ஜீனுமாகிய வார்த்தை ஜீவனைப் பிடித்துக்கொள்கிறது, ஆகவே மானிடனிற்குள்ளாக இருக்கின்ற ஏதோ ஒன்று கூச்சலிடத் தான் வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, யாரோ ஒருவர், "பில்லி, மக்கள் எழும்பி, தங்கள் கைகளை மேலே அசைத்து அல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லது ஆமென், என்று கூறச் செய்வது எது?'' என்றார். வேதாகமம் என்ன கூறுகிறதென்பதை கவனியுங்கள். 137. பவுல், ''நாம் எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக் கொள்ளும் போது கல்லாதவர்களாவது... அவன் ஆசீர்வதிக்கப் பட்டிருந்தால் - அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனா யிருந்தால் எவ்விதம் அவன் 'ஆமென்' என்று கூறுவான்?'' என்றான். பாருங்கள்? நீங்கள் எதைப் பேசுகின்றீர்களோ அதைக் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டியவர்களாக இருத்தல் வேண்டும். அந்நிய பாஷை, அது ஒரு வியாக்கியானம் அல்லது வெளிப்படுத்தலாயிருந்தால் தான் ... அதை உங்களால் புரிந்து கொள்ளக் கூடுமானால், அப்பொழுது உங்களால் ''ஆமென்” என்று கூற முடியும். அவன் என்ன சொல்லுகின்றான் என்பதை அவன் அறிந்துகொள்ளுகிறான். பாருங்கள்? 138. இப்பொழுது! ஓ, என்னே! அங்கே தாவீதை நோக்கி அந்த சத்துரு வந்து கொண்டிருந்த அந்த நாளைப் பாருங்கள். அவன் அவர்களுக்கு திராட்ச ரசம் மற்றும் அப்பம் நல்ல இறைச்சியும் அளித்தான். அப்பொழுது அந்த விரோதி வந்து கொண்டிருக் கையில் என்ன செய்வதென்று திகைத்து நின்றார்கள்; இவர்க ளெல்லாரும் அங்கே வெளியே ஒன்று கூடினார்கள்; எல்லா இஸ்ரவேலரும் விருத்தசேதனத்திற்கு கீழ் ஒன்று கூடினார்கள். (கவனியுங்கள்? இது பழைய யூத விருத்த சேதனத்தின் கீழாகும்) அப்பொழுது அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி, ''தேவன், நீரே எங்கள் தேவனாவீர். நீர் எங்களை காத்துக் கொண்டு வந்துள்ளீர். நீர் தீர்க்கதரிசியாகிய மோசேயைக் கொண்டு வந்து இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தீர். வனாந்திரத்தினூடாக நீர் அவர்களைக் கொண்டு வந்தீர். அவர்கள் அங்கே இருந்த போது அவர்கள் மீது கைவைக்கவும் கூட யாருக்குமே துணிவில்லை. உம்முடைய சுதந்திரத்தின் அருகில் யாருமே வரவில்லை. அவர்கள் அப்படிச் செய்ய பயந் தனர்,'' என்றார்கள். அவர்களுடைய எண்ணிக்கை சிறியதாக இருந்தது, ஆனால் அவர்களை எதிர்த்து வந்தவர்கள் அப்படியே திரும்பி ஓடினர். ஏனெனில் அவர்களைத் தாக்க வந்தவர்கள், தங்கள் தாக்குதல் தங்கள்மீதே திரும்பக் கண்டார்கள். அவன், ''ஓ, நீர் எவ்வளவு மகத்துவமான தேவன். இப்பொழுதும் கர்த்தாவே நாங்கள் பாவம் செய்தோம் .... இதோ எங்கள் மனைவிகள், இதோ எங்கள் சிறு பிள்ளைகள்; இந்த மணி நேரத்தில் நாங்கள் இடுக்கமான ஒரு சூழலில் இருக்கிறோம், ஓ, நாங்கள் என்ன செய்வது? விரோதி வந்து கொண்டிருக்கிறானே. நாங்கள் என்ன செய்வது?'' என்றான். 139. அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கையில் ஆவியானவர் கூட்டத்திலிருந்து ஒருவனின் மீது வந்தார். அப்பொழுது அவன், ''கர்த்தர் உரைக்கிறதாவது நீங்கள் சண்டையிட மாட்டீர்கள்; அப்படியே தரித்திருங்கள்! (ஆமென்!) அந்த குறிப்பிட்ட வழியாகச் சென்று அங்கே அவர்களைச் சந்தியுங்கள்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். அவர் அப்பொழுது சத்துருக்கள் நடுவில் குழப்பம் நேரிடும் படிக்குச் செய்தார், அப்பொழுது அவர்கள் ஒருவரை யொருவர் கொலை செய்துக் கொண்டனர். உங்களுக்குப் புரிகின்றதா. உலகத் தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்து இயசுவுக்குள்ளாக தெரிந்து கொள்ளப்படத்தக்கதாக முன்குறிக்கப்பட்டார்கள். இப்பொழுது, 104, ஒரு மனிதன், தேவனோடு மிகவும் நெருங்கி ஜீவிக்கும் போது அவன் பூமியிலிருக்கையில் அவனால் பாவமே செய்ய முடியாது என்று நீர் கூறினர். அப்படியானால் 1 யோவான் 1:8லிருந்து 10 வரை விளக்கவும். 140. நாம் 1 யோவான் 1:8 முதல் 10 வரை பார்ப்போம். இவைகளை பார்க்க இன்னு சிறிது நேரம் எனக்கிருக்குமானால் .... எனக்கிருந்தது; நண்பர்களே, அதை நான் எடுக்கவில்லை. நான் - நான் வெளிய செல்ல முயற்சி .... நல்லது, நான் யோவானை பிறகு பார்க்கிறேன், நான் .... அது எபிரெயர்களின் அடுத்த பகுதியில் இருக்கும். சரி. 1 யோவான் 1:8 முதல் 10 - யோவான் 1:8 முதல் 10. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நமமைச்சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. 141. இப்பொழுது, என் சகோதரனே சற்று பொறுத்தருள்க. இங்கே 3வது அதிகாரத்திற்கு திருப்பி 9வது வசனத்தைப் பாருங்கள். சரியாக என் வேதாகமத்திலுள்ள பக்கத்தில் நீங்கள் எடுங்கள். எட்டாம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம்: பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவனு டைய குமாரன் வெளிப்படுத்தப்பட்டார் (இப்பொழுது நான் பேசிக் கொண்டிருந்ததைக் குறித்தே தான், உன்னை அறிந்து தேவன் முன் குறிக்கின்றார்) தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்ய மாட்டான். 142. இவ்வாறு தான் வார்த்தை கூறுகிறது. இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டும். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. இப்பொழுது சில மக்கள், ''நல்லது, இப்பொழுது, இங்கே ஒரு அருமையான சிறுமி அல்லது அருமையான சிறு பையன் இங்கே உள்ளார்கள். இவர்கள் ஆரம்பத்தில் பாவம் இல்லாதவர்கள்'' என்று கூறுகிறார்கள். நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டு, பொய்கள் பேசுகிற வர்களாக உலகத்திற்கு வந்தீர்கள். நீங்கள் இந்த உலகத்தில் பிறந்த போது, நீங்கள் ஒரு பொய்யனாக, ஒரு திருடனாக இருந் தீர்கள், இருக்கின்ற எல்லா காரியங்களும், எல்லா பாவமும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள், ஒரு திருடனாக அல்ல, ஏனெனில் நீங்கள் திருடவில்லை. ஆனால் நீங்கள் .... நீங்கள் ஒரு பொய்யன் அல்ல, ஏனெனில் நீங்கள் பொய் பேசவில்லை. ஆனால் நீங்கள் பிறந்த போது, அந்த ஆவி உங்களுக்குள் இருந்தது, ஏனெனில் நீங்கள் உலகத்தாராயிருந் தீர்கள். அதன் காரணமாகத்தான் நீங்கள் சீர்படத்தக்கதாக உங்களுள் சீர்திருத்தத் தைக் கொண்டிருக்க முடியாது; நீங்கள் மரித்து பிறகு பிறக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். சிலுவையிலறையப்படுதல் இல்லாமல் உங்களால் பிறப்பை கொண்டிருக்க முடியாது; உங்களால் உயிர்த்தெழுதலைக் கொண்டிருக்க முடியாது; நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக உயிர்த் தெழத்தக்கதாக உலகத்தின் காரியங்களுக்கு நீங்கள் சிலுவையிலறையப்பட்டாக வேண்டும். 143. நீங்கள் உங்கள் அறிவுப்பூர்வமான கருத்துக்களின் பேரில் இன்னும் அதைப் போன்றவைகளின் பேரில் சார்ந்திருக்கப் போகின்றீர்கள் என்றால், நீங்கள் தேவனுடைய ஆவியால் பிறக்கவே முடியாது. நீங்கள் அதை மறக்க வேண்டும், பவுல் செய்தது போல, அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் மறந்து, கிறிஸ்து இயேசுவைத் தவிர வேறெதையும் அறியாதவர்களாய் புதியதாகப் பிறக்க வேண்டும். ஓ ... இங்கே ... நான் அதை உங்களுக்கு ... பாருங்கள்? ஒரு புது சிருஷ்டியாகச் செய்வது பிறப்பாகும். இங்கே இருக்கின்ற அந்த கிரேக்க வார்த்தை, முன்பொரு நாள் நான் கிரேக்க அகராதியில் நான் ஆராய்ந்தேன், பிறப்பு என்கின்ற வார்த்தைக்கு ''சிருஷ்டிப்பு” என்று அர்த்தம். அது “நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதுச் சிருஷ்டிகளாயிருக்கிறீர்கள்” என்று கூறுகிறது. அங்கே ஒரு வார்த்தை இருக்கிறது, சிருஷ்டி என்ற வார்த்தை சிருஷ்டிப்பு என்பதே. நீங்கள் ஒரு புது சிருஷ்டிகளாக இருக்கிறீர்கள். உலகத்தில் அல்ல, ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக. நீங்கள் ஒரு புதிய ... 144. இப்பொழுது, நீங்கள் உலகத்திலிருந்தபோது, ஓ, அந்த ஆடம்பரமான காரியங்கள், நேர்த்தியான ஆடைகள் அல்லது அழகான ஏதோ ஒன்றை உங்களுக்குத் தெரியுமா என்கிறீர்கள். பிறகு ... ? .... அது அந்தப் பக்கத்தில் பாருங்கள்? "ஓ, நான் சபைக்குச் செல்கிறேன், நிச்சயமாக. நான் நரகத்திற்குப் போக விரும்பவில்லை, ஆனாலும் நீங்கள் அறிவீர்கள் .... '' ஒரு வாலிபப் பெண்ணிற்கு பழுப்பு நிறக் கண்கள் அழகாக உள்ளன, அல்லது ஒரு வாலிபப் பையனுக்கு சுருளான தலைமயிர்தான் அவனுக்கு வசீகரம் - அல்ல வென்றால் ''அவன் ஒரு ... '' ஏதோ ஒன்று அல்லது மற்றொன்று - அல்லது இச்சையுள்ள அல்லது குடிக்கின்ற அல்லது ஏதாவது ஒன்று கவனத்தை கவர்ச்கிக்க ஏதோ ஒன்று - என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் உலகம்; நீங்கள் உலகத்திலிருக்கிறீர்கள். வேதம், ''நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ள - வைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களில் தேவ அன்பு என்பதே இல்லை,'' என்று கூறுகின்றது. ஆகவே அதை உங்களிடத்திலிருந்து வெளியே எடுத்துப் போடத்தக்கதாக, நீங்கள் மரிக்கத்தான் வேண்டும், மரிக்க வேண்டும், சிலுவையிலறையப்பட வேண்டும், அடக்கம் பண்ணப்பட வேண்டும், பிறகு கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஒரு புது சிருஷ்டியாக உயிர்த்தெழ வேண்டும். 145. இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் முன்னர்; நீங்கள் நித்திய ஜீவனுக் கென்று விசுவாசிக்க வேண்டும். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரை உங்களிடம் நித்திய ஜீவன் கிடையாது, ஏனெனில் அது தான் நித்திய ஜீவன். பரிசுத்த ஆவி தான் தேவன்; அது உங்களுக்குள் இருக்கின்ற தேவனுடைய ஜீவன் ஆகும். அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். அது இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா? பாருங்கள்? கவனியுங்கள்! பாருங்கள்? நீங்கள் அதற்கென்று விசுவாசிக்கின்றீர்கள். 146. சற்று பொறுங்கள், இங்கே ஒரு அருமையான காரியம் இருக்கின்றது. இது மிகவும் கடினமான ஒன்றாக இருக்குமானால் பெண்களாகிய நீங்கள் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். (பாருங்கள்) இதில் காரியத்தை ஆணித்தரப்படுத்தலாம். ஒரு தாய் ஜீவனை எடுக்கின்றாள். ஆனால் குழந்தையானது இன்னும் பிறக்காமலிருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த குழந்தையை சரியாக பாவித்து இயற்கை விதிகளைக் கொண்டு சரியாக பேணுவீர் களானால் அந்த குழந்தை யானது இயற்கையாகவே பிறக்கும். ஆனால் நீங்கள் இயற்கையான விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லையென்றால், குழந்தை மிகவுமாக பாதிக்கப் படும், அல்லது ஏதோ ஒன்று அதற்குச் சம்பவிக்கும், அதினால் குழந்தைக்கு தொல்லை ஏற்படும் (பாருங்கள்?) அது பிறப்பதற்கு முன்பாக அது அதைக் கொன்று போடும். 147. நல்லது, அதுவே தான் காரியம். அந்த பாதிப்புகள் சாத்தானிடமிருந்து வருகின்றன. சாத்தான் நரகத்தின் விஷ அம்புகளை எடுத்து எய்து சபையை பாதிப்புறும் படிக்குச் செய்ய முயற்சிக்கின்றான். அது பிறப்பதற்கு முன்பே அதை அவர்கள் கொன்று விடுகின்றனர். ஆனால் நீங்கள் வேதாகமத்தை எடுத்து அதினாலே போஷித்து - அதற்கு குழந்தை ஆகாரத்தை அளித்தால், அந்த தாய் போதுமான விட்டமின்களை எடுத்து .... நல்லது எனக்குத் தெரிந்த வரையில் இதுதுான் வைட்டமின் களில் சிறந்த வைட்டமின் ஆகும். ஆவிக்குரிய வைட்டமின் ஆகும். பாருங்கள்? அது உங்களை வளரும் படிக்குச் செய்கிறது. 148. இப்பொழுது, சபையானது அந்த ஆவிக்குரியவைட்ட மின்களை புசிக்க வேண்டியதாயுள்ளது; அந்த வைட்ட மின்கள் சரியாக இங்கே உள்ளது, அவை ஒரு புத்தகத்தில் முழுமையா யுள்ளன. ஆகவே நீங்கள் அந்த ஆவிக்குரிய வைட்ட மின்களை புசிக்க, கற்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், அது குழந்தையை பிறப்பிற்கு கொண்டு வரும். நான் என்ன கூற விழைகின்றேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? 149. இப்பொழுது அந்த சிறு குழந்தையானது ஜீவனைப் பெறுகையில் - அது ஜீவனைப் பெறுகையில், அந்த சிறிய அணுக்கள், செல்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு அது அசைந்து மற்றும் உதைத்துக் கொண்டிருக்கும். அது அப்பொழுது அசைந்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்னுமாக அது பிறக்கவில்லை. ஆனால் அது உலகத்தை வந்தடைந்தவுடன் ஒரு மருத்துவரோ, தாயோ அல்லது யாராவது ஒருவர் அதை மேலே தூக்கி (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய கைகளைத் தட்டுகிறார் - ஆசி.) அதற்கு ஒரு சிறிய அடி கொடுப்பார். அப்பொழுது அது "வீல் வீல்' என்று கூச்சலிடும். (பாருங்கள்?) அப்பொழுது அது சுவாசிக்க ஆரம்பிக்கும். அது ஜீவ சுவாசத்தை சுவாசிக்க ஆரம்பித்தவுடன் அது ஜீவிக்கின்ற ஆத்துமாவாகி விடுகின்றது. 150. ஆகவே அது தான் சில சமயங்களில் ... நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறத்தயாராக இருக்கும் போது; நீங்கள் பிரசவ வேதனையில் இருப்பீர்கள்; நீங்கள் விடுவிக்கப்பட வேண்டு மென்று வாஞ்சித்துக் கொண்டிருப்பீர்கள். உங்களில் எத்தனைப் பேர் சரியாக இப்பொழுதே அவ்விதமாக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற வாஞ்சித்து, அது உண்மை யாகவே என்னவென்பதை அறிய விரும்பி, அதற்குள்ளாகச் செல்ல வேண்டுமென்று இருக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற விரும்புகிறவர்கள் எத்தனை பேர்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள்? நீங்கள் பிரசவ வேதனையில் இருக்கிறீர்கள், நீங்கள் எங்கிருக்கிறீர்கள் - விடுவிக்கப்பட வாஞ்சிக்கின்றீர்கள். உங்களுக்குள்ள தேவை என்னவெனில் ஒரு சிறு சுவிசேஷ அடி, அதைப் போன்ற ஒன்று (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய கைகளைத் தட்டுகிறார் - ஆசி.) அப்பொ ழுது நீங்கள் "மகிமை!'' என்று கூச்சலிடுகிறீர்கள். அது சம்பவிக்கும் போது ..... நான் பைத்தியம் பிடித்தவன் என்று நீங்கள் என்னைக் குறித்து நினைப்பதை நானறிவேன், ஆனால் உலகத்திற்கு பைத்தியமாக காணப்படுகின்ற கிறிஸ்துவின் சிந்தையையுடையவர்களாக நாம் - நாம் இருக்கிறோம். ஏதோ ஒன்று உள்ளில் கூச்சலிடுகின்றது; அப்பொழுது அது வந்து கொண்டேயிருக்கிறது. 151. ஒரு நபர் கூறினதைப் போன்று, அது தண்ணீ ர் வருவது நின்று போன ஒரு குழாயைப் போன்று. நீங்கள் அதற்குள் ஒரு சிறிய கம்பியை நுழைத்து, கம்பியின் இந்த முனையைப் பிடித்து அழுத்தி குத்தித் தோண்டுவீர்களானால் அப்பொழுது தண்ணீர் வேகமாக அதினூடாக வரத் தவிக்கும். நீங்கள் இன்னுமாக தோண்டுவீர்களானால், அங்கே ஏதோ ஒன்று நுழைய தீவிரிக்கிறதை நீங்கள் காண்பீர்கள். உங்களால் அதை உணர முடியும்; அது அந்த முனையில் இருக்கின்றது. பிறகு அந்த கம்பியை வேகமாக மேலே இழுப்பீர்களானால் (சகோதரன் தண்ணீர் பாய்ந்தோடுகின்ற இரைச்சலின் சத்தத்தை வாயால் சத்தமிட்டுக் காட்டுகிறார்-ஆசி) அந்த தண்ணீரானது குழாயினுள் வேகமாக வரும். அந்த விதமாகத் தான் அது இருக்கிறது. அப்பொழுதிலிருந்து அந்த தண்ணீரானது வந்து கொண்டே யிருக்கின்றது. அந்த விதமாகத் தான் பரிசுத்த ஆவியும் கூட வருகின்றது. பாவமானது குழாய்களை அடைத்துப் போட்டது. நீங்கள் பின்னே சென்று ''நான் அமைதியானவன் .....?... உங்களுக்குத் தெரியுமா ... ? ..... மக்கள் என்னைத் தவறாக எண்ணுவார்கள் .... ? .... அந்த பரிசுத்த ஆவி ... '' என்பீர்கள். முதாலாவதாக என்ன சம்பவிக்கிறதென்று தெரியுமா? 152. இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியின் சிறு அசைவை உணரும்போது... நீங்கள் ஜீவனைப் பார்க்கிலும் அதை அதிகமாக விரும்புவீர்கள்- உங்கள் ஜீவனைப் பார்க்கிலும் அதிகமாய் விரும்புவீர்கள். "நான் அதைப் பெற்றாக வேண்டும் அல்லது நான் மரித்து விடுவேன்'' - எல்லாவற்றைக் காட்டிலும் அதையே நீங்கள் மேலாகக் கருதுவீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றை பிடித்துக் கொள்கிறீர்கள். ''கர்த்தாவே, இது தான்” என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் குப்பியை வெளியே இழுக்கிறீர்கள். வீயூ! இதோ அது வருகின்றது! வேகமாக வருகின்றது! ஓ, என்னே ! விடுதலை! ஓ! என்னே ! அங்கே ஒரு ... ? .... அங்கே ஒரு ஜீவனானது அமர்கிறது. நீங்கள் “தேவனுக்கு மகிமை ... ? ....'' என்று கூறுகிறீர்கள். 153. பெந்தெகொஸ்தேயில் அங்கே பேதுரு அங்கே பின்னால் ஒளிந்து கொண்டு "கதவைத் திறந்து வெளியே பாருங்கள், அங்கே யூதர்கள் யாராவது வருகின்றனரா என்று பாருங்கள்” என்றான். "இல்லை. யாரையும் என்னால் காணமுடியவில்லை.'' ''சரி; அப்படியே தரித்திருங்கள்; ஏனெனில் நான் உங்களுக்கு கூறுகிறேன் - அவர்கள் இங்கே மேலே வருவார்களானால் ... ? ...   154. அவர்கள் எல்லாரும் அங்கே அமர்ந்திருந்தனர், ஒரு பெரிய பலத்த இடிமுழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு சத்தமானது வந்தது. அது அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதுமாக நிரம்ப ஆரம்பித்தது. ஏதோ ஒன்று சம்பவிக்க ஆரம்பித்தது. அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே ஓடினர்; கதவு களைத் திறந்தனர், படிகட்டுகளின் கீழாக ஓடி வெளியே சென்று குடிகாரர்களைப் போல தள்ளாடிக்கொண்டு அங்கே... ஆவி யினால் நிறைந்து, கூச்சலிட்டு, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். 155. அவர்களோ, ''இந்த மனிதர் குடித்து வெறித்திருக் கின்றனர். இவர்கள் கூறுவதை கவனியுங்கள். இயேசு சிலுவையிலறையப்படும் போது அவரை மறுதலித்த, கதவிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும் அந்த கோழையை அங்கே பாருங்கள். 'அவரை எனக்கு தெரியவில்லை, தெரியாது' என்றானே அவன். ஒரு சிறிய பெண், 'ஆம், உன் பேச்சு உன்னை அடையாளம் காட்டுகிறதே. மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன்' என்றாளே, அதற்கு இவன், 'அவரை நான் அறியேன்' என்று கூறி சபிக்கவும் செய்தானே,'' என்றார்கள். 156. ஆனால் வாய்க்காலானது திறக்கப்பட்டு ஆவியானவர் அவன் மூலமாக பாய்ந்தோட ஆரம்பித்த போது அவன், ''யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தை களுக்கு செவி கொடுங்கள் (ஆமென்!) நான் தான் தலைவன். இதை நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக; இவர்கள் குடியினால் வெறிகொண்டவர்கள் அல்ல. (தன் சபைக்காகப் பேசுகிறான்) நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர் களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக் கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்ட படியே இது நடந்தேறுகிறது: 'கடைசி நாட்களில் நான் மாம்ச மான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் கூறினார்'' என்றான். உம் - ம் - ம், என்ன ஒரு வித்தியாசம்! வியூ! என்னே ! இது ஒரு பயங்கரமான காரியம் என்று நீங்கள் ஒருக்கால் நினைக்கலாம், ஆனால் சத்தியம் என்ன என்பதை நீங்கள் காண நான் - நான் - அதைச் செய்ய வேண்டும். அதில் அப்படியே தரித்திருங்கள். 157. இப்பொழுது, நிச்சயமாகவே நீங்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறீர்கள். 158. இப்பொழுது, நான் இதை விவரிக்கத்தக்கதாக - இந்த நாளிலே ... ''நாம் பாவஞ் செய்யவில்லையென்போமானால், நாம் தேவனைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்.” நீங்கள் பாவஞ்செய்வீர்கள் என்று கூறியிருக்கிறார். நீங்கள் பாவஞ் செய்யவில்லையென்பீர்களானால் ... நான் ... 159. ''நான் பாப்டிஸ்ட் சபையில், மெத்தொடிஸ்ட் சபையில், பெந்தெகொஸ்தே சபையில், பிரஸ்பிடேரியன் சபையில் பிறந்திருந்தேன்; நான் அதில் பிறந்திருந்தேன்.'' அது எந்த ஒரு வித்தியாசத்தையுமே பிறப்பிக்காது, நீ அதிலிருந்து மறுபடியு மாக பிறந்து வெளியே வரவேண்டும். அது சரியே. நாம் பாவமே செய்யவில்லையென்று கூறுவோமானால், நீங்கள் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருக்கிறீர்கள். ஆகவே அந்த வார்த்தை , அது தான் சத்தியமாயிருக்கின்றது. வசனமே சத்தியம் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? ''ஆதியிலே வார்த்தை இருந்தது .... அந்த வார்த்தை மாம்சமாகி ..... வார்த்தை ” “'பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்.'' ஆகவே அவர்தான் அந்த வசனம், வார்த்தை . பாருங்கள்? ஆகவே அந்த வார்த்தை அல்லது கிறிஸ்து உங்களுக்குள் .... அவர்தான் வார்த்தையாயிருந்தார். உங்களில் எத்தனை பேர் அதை அறிவீர்கள்? பாருங்கள்? சரி. 160. நல்லது இதை நாம் இந்த விதமாக வாசிப்போம், ''நீங்கள் பாவஞ்செய்யவில்லை என்பீர்களானால், நீங்கள் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மேலும் கிறிஸ்து நமக்குள் இல்லாதிருக்கிறார். '' பாருங்கள், பாருங்கள்? இப்பொழுது அது .... பாருங்கள், நீங்கள் பாவஞ் செய்யவில்லை என்று கூறுவீர்களானால் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கத் தான் வேண்டும். 161. இப்பொழுது, நாம் அடுத்த வசனத்திற்குச் செல்வோம், ''தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், பாவம் செய்யான், ஏனெனில் .... '' 162. இப்பொழுது பாவம் என்றால் என்ன? யார் அதைக் கூறினது, யாரோ ஒருவரா? அவிசுவாசம். வேதாகமம் அதைத் தான் பாவம் என்று கூறுகின்றது. ஒரேயொரு பாவம் தான் இருக்கின்றது, அது அவிசுவாசமாகும். அது சரி. ''அவரை விசுவாசியாதவனோ ஏற்கெனவே ஆக்கினைத் தீர்ப்புக்குட் பட்டாயிற்று.'' ஆகவே நீங்கள் ஒருவன் பாவம் செய்வான். 163. இப்பொழுது நீங்கள், "ஆம் இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். அந்நாட்களிலே அவர்கள் பரிசுத்த ஆவியை அந்த விதமாகப் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் நம்புகிறேன், ஆனால் இப்பொழுது அவ்விதமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்'' என்று கூறலாம். 164. ''ஆனால், சகோதரனே, வேதாகமம், 'வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்' என்று கூறுகின்றது” ''எனக்குத் தெரியும், ஆனால்... நீங்கள் பாவஞ் செய்கிறீர்கள். நீங்கள் சரியாக பாவம் செய்கிறீர்கள். தேவன் கூறியதை நீங்கள் அவிசுவாசிக்கிறீர்கள். ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்” 165. ''நல்லது, எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ள விதம் என்னவென்றால்... ''உங்களுக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. வேதாகமம் கூறுகிறது - அவர் கூறினார், ''எந்த ஒரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாயிருப்பதாக, என்னுடையது சத்தியமாயிருப்பதாக.'' அது சரி. நீங்கள் ''நல்லது, அவர் முக்கியமானவரே, அவர் மாறாதவர் தான், ஆனாலும் என்னால் .... அவர் மாறாதவர் என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?” எனலாம். ''ஆம், அவர் இங்கே இருந்த போது செய்த அதே காரியங்களை சபையில் செய்கின்றார்'' 166. ''ஓ, என்னால் அதை விசுவாசிக்க முடியவில்லை,'' என்றால் நீ பாவம் செய்கின்றாய். நீ பாவம் செய்கின்றாய். தேவனால், பரிசுத்த ஆவியால் பிறந்த ஒருவன் அந்த காரியங்களைக் கூற மாட்டான். அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறேன் என்று கூறிக் கொண்டு அந்தக் காரியங்களைக் கூறினால், அதை அவன் பெற்றுக்கொள்ள வில்லை என்பதன் அத்தாட்சியாக அது காணப்படுகிறது. அவன் என்ன செய்திருந்தாலும் அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. அவனுக்கு தெய்வீக சுகமளித் தலில் விசுவாசம் இல்லையெனில், உயிர்த்தெழுதலின் வல்ல மையில் விசுவாசம் இல்லையெனில், முதலாவது காலத்திலே எப்படி பரிசுத்த ஆவியானது ஊற்றப் பட்டதோ சரியாக அதே விதமாக நம்மீது ஊற்றப் பட்டிருப்பதை விசுவாசிக்காமல் இருந்தால், நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருக்கிற அதே தேவன், அப்போஸ்தலர்கள் செய்த அதே காரியங்கள் சரியாக இப்பொழுது நடைபெறுகின்றன, அந்நிய பாஷையில் பேசி, களிகூர்ந்து மற்ற எல்லா காரியங்களும்; இவைகளை அவன் விசுவாசிக்கவில்லையெனில் அவன் தேவனால் பிறந்தவன் அல்ல. ஏனெனில் தேவனால் பிறந்த எவனும் அந்த விதமான பாவங்களை செய்ய முடியாது. அவர்கள் தேவனால் பிறந்தவர்களா இல்லையா என்பதை இந்த விதத்தில் தான் கண்டறிய வேண்டும். 167. நீங்கள் ஒரு நபரிடம் சென்று, ''டாக்டர். இன்னார் - இன்னார்-அவர்களே, ரேவரெண்ட், டாக்டர்., அல்லது இன்னார் - இன்னார் அவர்களே (அது அருமையானது தான், எனக்கு அவ்வாறு பட்டங்கள் இருந்தால் நலமாயிருக்கும் என்றெண்ணுகிறேன்), அப்போஸ்தலர்கள் அன்று செய்த விதமாக சபையிலும் தெய்வீக சுகமளித்தலானது செய்யப்பட வேண்டுமென்பது உண்மை தானோ?'' என்று கேட்டால். ''ஓ இல்லை, இல்லவே இல்லை!'' என்பானென்றால், அவன் பாவம் செய்கின்றான். அவன் ஒரு அவிசுவாசி. அது சரி. 168. நீங்கள், ''அவர்கள் அங்கு செய்தது போல நாமும் அதே விதமாகவே பரிசுத்த ஆவியை பெறுவோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் இங்கே வேதாகமத்தில் அப்போஸ் தலர் இரண்டாம் அதிகாரத்தை நான் வாசித்துக் கொண்டிருந் தேன். அது என்ன கூறுகிறதென்றால் ... பரிசுத்த ஆவியானவர் இறங்கினார், அவர்கள் குடித்து வெறி கொண்ட வர்கள் போல தள்ளாடினார்கள், அவர்கள் வெளியே ஓடி அந்த மக்களின் பாஷைகளிலே பேசினார்கள், அதைப் போன்ற காரியங்களைச் செய்தார்கள்; குடித்து வெறித்தவர்களைப் போன்று காணப் பட்டார்கள், சபையும் அவர்கள் குடித்து வெறித்திருந் தார்கள் என்று எண்ணுகிறது. பாப்டிஸ்டு சபையில், நம்முடைய பாப் டிஸ்ட் சபையில், நம்முடைய மெத்தோடிஸ்ட், நம்முடைய பிரஸ்பிடேரியன் சபையில், அல்லது எதுவாயிருந் தாலும் சரி, நாம் பரிசுத்த ஆவியைப் பெறுகையில் நாம் அந்த விதமாக நடந்து கொள்வதைக் என்னால் காண முடிய வில்லையே” என்று கேட்கலாம். ''நல்லது, பிள்ளையே, நான் கூறுவதென்னவென்றால் அது அந்த பன்னிரண்டு பேருக்கு மாத்திரம் தான்.'' அவன் பாவம் செய்கின்றான். அவன் தேவனுடைய ஆவியால் பிறந்தவனல்ல, ஏனெனில் வேதாகமம் கூறுகிறது ''தேவனுடைய ஆவியினால் பிறந்தவன் அவிசுவாசிக்கமாட்டான். அவன் ஒரு விசுவாசி, அவனால் .... '' ஏன்? ஏன்? ஓ, இது தான் காரியம். அந்த புறாவானது அவனுக்குள் இருந்து அவனை வழி நடத்துகிறது. ஏனெனில் தேவனுடைய ஆவி அவனுக்குள் இருக்கின்றது, அவனால் அதை மறுதலிக்கவே முடியாது; அவனால் முடியாது. அது தேவனுடைய ஆவியாக இருக்குமானால், தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியாது. நான் என் சொந்த வார்த்தையை மறுதலிப்பேனானால் அப்பொழுது நான் ஒரு பொய்யனாக ஆகிவிடுவேன். ஆகவே நீங்கள் தேவனுடைய ஆவியைக் கொண்டிருக்கிறேன் என்று கூறி, தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பீர்களானால், ஒன்று தேவன் ஒரு பொய்யராக இருக்க வேண்டும் அல்லவென்றல் நீங்கள் ஒரு பொய்யனாக இருக்க வேண்டும், ஒன்று இப்படியிருக்க வேண்டும் அல்லது மற்றதாயிருக்க வேண்டும். ஆகவே வேதம் எந்த ஒரு மனிதனுடைய வார்த்தையும் பொய் யாயிருப்பதாக, என்னுடையது சத்தியமாயிருப்பதாக - '' என்று கூறுகின்றது. ஆகவே தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதனால் தேவனுடைய வார்த்தையுடன் முரண்பாடு கொண்டிருக்க மாட்டான்; அது சரியே என்று தான் அவனால் கூற முடியும். வேறெதையும் அவனால் செய்யவே முடியாது. கவனியுங்கள், இது தான் சத்தியம். 169. கவனியுங்கள், இதை நான் திரும்பவுமாக வாசிக்கட்டும். தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில், அந்த வித்து ... 170. தேவனுடைய வித்து? என்பது என்ன? ஆபிரகாமிற்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் - வித்தானது. அந்த வித்தானது இப்பொழுது என்ன? கிறிஸ்துவே. கிறிஸ்து தான் தேவனுடைய வித்தாக இருக்கின்றாறா? அவர் அப்படி இல்லையெனில் யாருடைய வித்தாக அவர் இருக்கிறார். அது சரி, அது சரி. அவர் தான் தேவனுடைய வித்து. 171. தேவனுடைய வித்தானது அவனுக்குள் தங்கியிருக் கின்றது. பரிசுத்த ஆவியானவர் நிலைத்திருக்கவே வருகின்றார்; ஒரு எழுப்புதல் கூட்டத்திலிருந்து மறு எழுப்புதல் கூட்டம் வரைக்குமல்ல - ஆனால் நித்தியமாக இருக்கவே. இப்பொழுது, அதைக் குறித்த வேத வசனத்தை நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், எபேசியர் 4:30. ''நீங்கள் மீட்கப்படும் நாளுக் கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி யைத் துக்கப்படுத்தாதிருங்கள்.'' தேவனுடைய வித்தானது அவனுக்குள்ளாக அப்படியே தங்கி விடுகிறது, ஆகவே அவனால் பாவம் செய்ய முடியாது, ஏனெனில் அவன் தேவனால் பிறந்தவன். தேவனுடைய வார்த்தையை அவனால் அவிசுவாசிக்க முடியாது. 172. இப்பொழுது, ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போகாமல் "ஓ அது வேறொரு காலத்திற்குத் தான்” என்று கூறினால், நினைவில் கொள்ளுங்கள் அவன் ஒரு அவிசுவாசியே, அவன் தேவனால் உண்டானவன் அல்ல, நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது, அப்படித்தானே? நேரம் என்ன? ஓ, என்னே! நான் மறுபடியுமாக ஞாயிற்றுக்கிழமை யன்று திரும்பி வர எனக்கு விருப்ப மில்லை. இதை நான் வேகமாக, மிக வேகமாக முடிக்கட்டும். என்னால் கூடுமா? இது மிக அருமையாக இருக்கிறது. ஓ, அந்த தேவனு டைய வார்த்தை. இது அருமையான ஒன்று என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அது சரி. சகோதரன் பிரன்ஹாம் ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும். இதை சற்று நான் முடிவில் பார்க்கட்டும், இதை நான் எடுப்பேன். 105. நாம் உயிர்த்தெழுதலில் எந்த ரூபத்தில் இருப்போம்? 173. நாம் கீழே சென்ற போது எப்படி இருந்தோமோ அந்த விதத்திலே தான். சரியாக உயிர்தெழுதலானது . இதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த புத்தகமானது கீழே விழுகின்றது (சகோதரன் பிரன்ஹாம் ஒரு புத்தகத்தை கீழே போடுகின்றார் - ஆசி) பிறகு நான் இந்த புத்தகத்தை எடுத்து, வேறொரு புத்தகம், இதற்கு பதிலாக வைத்து விடுகிறேன். இது உயிர்த்தெழுதல் அல்ல. உயிர்த்தெழுதல் என்றால், ''கீழே சென்ற அதே காரியத்தை மேலே கொண்டு வருதல்” என்பதேயாகும். இயேசு உயிர்த்தெழுந்தாரா? அவர்கள் அவரை அறிந்து கொண்டனரா? அவர் அதே இயேசுவாக அவர்களுடன் நின்று கொண்டிருந் தாரா? "உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்.” நீ மரித்த போது எப்படி இருந்தாயோ, அந்த விதமாகவே நீ எழுந்திருப்பாய். அது தான் உயிர்த்தெழுதல் -நீ மனித சரீரமாக மரிக்கின்றாய்; நீ மனித சரீரமாக உயிர்தெழுகின்றாய். அது சரியாக அந்த விதமாகத்தான் இருக்கும். ஆகவே உயிர்த்தெழுதலிலும் அது அந்த விதமாகத் தான் இருக்கும். இதன் பேரில் இன்னும் நாம் இரண்டு மணி நேரம் பேசலாம், ஆனால் நாம் நிறுத்திக் கொள்வது நல்லது. 106. எபிரெயர் 4 மற்றும் 6 விளக்கவும் (சீக்கிரமாக, மிக சீக்கிரமாக நாம் முடித்துவிடுவோம்) அதை எபிரெயர் 10:26வுடன் ஒப்பிட்டு விளக்கவும் - 6 மற்றும் 4, (என்னை மனிக்கவும், 6:4 மற்றும் 10:26. நாம் 10:26ஐ பார்ப் போம், சரி, நான் இங்கே அதை எடுத்துவிட்டேன். பாருங்கள்?) ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப் படுத்துகிறபடியால் மனந்திரும்புதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். 174. அது சரியாக நமக்கு கூறுகிறது. இப்பொழுது கவனியுங்கள். முன்பொரு இரவு நான் இதை எடுத்தேன். நான் இதை விவரித்த போது உங்களில் எத்தனைப் பேர் இங்கிருந் தீர்கள்? சரி, அது என்ன வென்பது உங்களுக்குத் தெரியும். பாருங்கள், அது எல்லைக் கோட்டு விசுவாசிகளை குறிக்கிறது. 175. எத்தனைப் பேர் உபாகமம் 1ல் வாசித்துள்ளீர்கள், அதில் அந்த வேவுகாரர்கள் கானான் தேசத்திற்குள் சென்று அதினுடைய காரியங்களை ருசிபார்த்தார்கள், கானான் ஆயிரவருட அரசாட்சிக்கு அடையாளமாக இருக்கவில்லை. எத்தனைப்பேர் அதை அறிவீர்கள்? ஒரேயொரு கரம் தான் உயர்த்தப்பட்டிருக் கிறதே? ஜூனி. அது சரி. கானான் ஆயிரவருட அரசாட்சிக்கு நிழலாயிருக்கவில்லை, ஏனெனில் அங்கே யுத்தங்கள், சண்டை கள், கொள்ளைகள் மற்ற எல்லா காரியங்களும் கானானில் இருந்தது. அது பரிசுத்த - கானான் பரிசுத்த ஆவிக்கு நிழலாயிருந்தது. அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்ததை, உலகத்தை விட்டு வெளியே வந்ததைக் குறிக்கிறது. அவர்கள் வனாந்தரத்தில் தான் பரிசுத்தமாக்கப்பட்டு, வெளியே அழைக் கப்பட்ட சபையாய் இருந்தனர். கானானில் தான் அவர்கள் பரிசுத்த ஆவியுடன் குடியேறினர் (பாருங்கள்; பாருங்கள்) ஏனெனில் அவர்கள் இன்னுமாக யுத்தங்களைக் கொண்டிருந் தனர். உங்களுக்கு யுத்தங்கள் கிடையாது என்று நீங்கள் நம்பவில்லையெனில் பரிசுத்த ஆவியை ஒரு தரம் பெற்றுக் கொள்ளுங்கள். 176. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவர்கள் கானானில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? அவர்கள் தங்கள் உரிமைகளை சுதந்தரித்துக் கொண்டிருந்தனர். மகிமை! அவர்கள் தங்கள் உரிமைகளை சுதந்தரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கானானிற்குள் செல்லும் வரைக்கும் அவர்களால் தங்களுடைய உரிமைகளை சுதந்தரித்துக் கொள்ள முடியா திருந்தது. அவர்களுக்கு வனாந்தரத்தில் எதுவுமே சொந்த மானதாக இல்லை. பிறகு, அவர்கள் கானானிற்குள் வந்த போது, அப்பொழுது தங்கள் உரிமைகளைக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமக்கும் உரிமைகள் உண்டு. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, நீங்கள் தானானிற்குள் இருக்கிறீர்கள். நீங்கள் அதற்காக போரிடத்தான் வேண்டும். ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீங்கள் போரிட்டாக வேண்டும். ஆம் ஐயா! அதன் காரணமாகத் தான் மக்கள், "சகோதரன் பிரன்ஹாம் இன்றைக்கு நீங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள்'' என்று கூறுகின்றனர். சகோதரனே விரைவில் கானானிற்குள் செல், நீ எதைச் சேர்ந்தவன் என்பதை உணர்ந்து கொள்வாய். கவனி ஜெபம் ஆரம்ப ... ? ... ஆம், ஐயா! அவன், ''சாத்தானே, இங்கே பார். இது என்னுடையது! நான் தான் இதன் சுதந்தரவாளி! தேவன் அவ்விதமாக கூறியுள்ளார்! வெளியே செல்! (அது சரியே!) என் நிலத்தை விட்டு வெளியே செல்!” என்றான். "உன்னுடைய நிலமா?” என்கிறான் சாத்தான். ''அதற்கான உரிமைப் பத்திரம் என்னிடம் இருக்கின்றது. வெளியே செல்! பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலோடு நாளை உனக்கு சட்டப்பூர்வமான முன்னறிவிப்பு எச்சரிக்கையை அளிப்பேன்.'' அவன் வெளியே செல்கிறான். நிச்சயமாக, அவன் சென்றுதானாக வேண்டும். 177. இப்பொழுது, இப்பொழுது, பரம ஈவை ருசி பார்த்தவர்களைக் கவனியுங்கள். இப்பொழுது, இங்கே கவனியுங்கள். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால் .... (10, இது 10ம் அதிகாரத்தில் 26வது வசனம்) .... பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், 178. இப்பொழுது, அவைகளில் ஒன்று அதை ருசிபார்த்தது தான், அடுத்ததாக இருப்பது நீங்கள் அதைப் பெற்று அதனுடைய அறிவை பெற்றீர்கள். அப்படியானால் நீங்கள் எதில் பாவம் செய்கிறீர்கள்? அவிசுவாசம் .... இப்பொழுது அவை இரண்டும் எப்படி காணப்படுகிறதென்று கவனியுங்கள். புரிகின்றதா? "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நீங்கள் மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர்களாயிருந்தால் ...'' இப்பொழுது .... ஒரு நிமிடம், இதை நான் எடுக்கட்டும். நாம், புதுப்பித்து ... ... ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் அருமையான பரம ஈவை ருசி பார்த்தும், ... (எதை ருசிபார்த்தார்கள். பாருங்கள்?) ... பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 179. அவன் இன்னுமாகச் சென்று நீ முள் பூண்டுகளைப் போலவே நீ உள்ளே உட்காருவதைக் கூறுகிறான், பூமியின் மேல் அடிக்கடி மழையானது பெய்கின்றது; நீ முள் பூண்டுகளைப் போல உள்ளே உட்கார்ந்திருந்தாயானால், பரிசுத்த ஆவி விழும்போது, ஓ, என்னே, மற்றவர்களைப் போல நீயும் அதன் பேரில் சந்தோஷமடைந்தாய், ஆனால் நீயோ அதை உன் கையால் தொட்டு, அங்கே புறப்பட்டுச் சென்று கர்த்தருக்காக உழைத்து அதற்காக ஏதோ ஒன்றை செய் என்றால், இல்லை, இல்லை என்னால் செய்ய முடியாது என்கிறாய். பாருங்கள்? அப்படி யானால் அது எதைக் காண்பிக்கிறதென்றால், தேவனுடைய ஆவி உனக்குள் இல்லை என்று தான் காண்பிக்கின்றது. புரிகின்றதா? பிறகு நீ அப்படியே வெளியே கழன்று வந்து விடுவாய், “சுட்டெரிக்கப் படுவதே அதின் முடிவு”' 180. ஆனால் இங்கே , நாம் அவிசுவாசிப்போமானால்.... இப்பொழுது, பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். அந்த காரியமானது உனக்கு தெரியப்படுத்தப்படும் போது, நீ அதி லிருந்து மனப் பூர்வமாக திரும்பி, ''எனக்கு- எனக்கு- எனக்கு ஒன்றும் தேவை இல்லை'' என்று கூறினால், நீ அதைக் கண்ட பிறகு, அது மறுபடியுமாக உன் இருதயத்தை நோக்கிக் கூப் பிடாது, உன் காரியம் முடிக்கப்பட்டது; அது சரி. உன்னுடைய கிருபையின் நாளை நீ பாவமாக்கிப் போட்டாய். பாருங்கள்? சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர்களாயிருந்தால் ..... (இப்பொழுது என்னுடைய வேதத்தில் அதை நான் குறித்திருக்கிறேன்... ஓரப்பகுதியில் ''m'' என்று குறிக்கப்பட்டுள்ளது - பாவம் என்றால் மனப்பூர்வ மாய் அவிசுவாசித்தல். பாருங்கள், பாருங்கள்?) .... மனப்பூர்வமாய் .... பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், (எல்லா காரியங்களும் உனக்கு நலமாக வெளியரங்கமாக்கப்பட்டிருக்கையில் தேவன் அதை உனக்கு மனமாரக் கொடுக்கையில் நீ மனப்பூர்வமாய் தேவனைப் புறக்கணித்து புறம்பே செல்வாயானால் ... பாருங்கள்?) நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்கு தலும் விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்த மென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு அதிகமான கொடிதான ஆக்கினைக்குப் பாத்திர வானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்? (ஓ, என்னே!) 181. அது என்னவாக இருக்கும்? ஒரு பிரசங்கி, ஒரு போதகன், நாம் ... ஏனெனில் நானும் ஒரு பிரசங்கி, ஒரு பிரசங்கியை நாம் எடுத்துக் கொள்வோம். அவன் இங்கே நடந்து வருகிறான், மேலே வருகிறான், கிறிஸ்துவை பறைசாற்றுகிறான், விபச்சாரம் மற்றும் எல்லா காரியங்களும் இனிமேல் இல்லாத ஒரு நிலைக்கு வருகிறான், ஒரு அருமையான சுத்தமான வாழ்க்கையை வாழ் கிறான், அவன் இங்கே வருகிறான், தேவனுடைய கிருபை யானது அவனுக்கு அருமையானதாக அமைந்திருந்தது, அப்பொழுது அவன் சரியாக பரிசுத்த ஆவியின் அறிவிற்குள் நடந்து செல்கிறான் (பாருங்கள்?) நடந்து செல்கிறான், தேவன் அவனை சரியாக பரிசுத்த ஆவியின் அறிவிற்குவழி நடத்துகிறார், அங்கே அவன் அதைக் காண்கிறான், ஆனால் அவன், ''இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். என்னுடைய சபை அதை ஏற்றுக் கொள்ளாது, என்னால் அதைச் செய்ய முடியாது. என்னை அவர்கள் வெளியேற்றி விடுவார்கள். ஆலோசனை சங்கமானது என்னை வெளியேற்றிவிடும். ஊழியக்காரர்கள் கூட்டத்தில் என்னை சபையை விட்டு புறம்பாக்கி விடுவார்கள்” என்று கூறுவான். ஏனெனில் அவனைப் பரிசுத்தப் படுத்தி சத்தி யத்தை அறியும் அறிவு என்கின்ற வரையில் அவனைக் கொண்டு வந்த அந்த அதே இரத்தத்தை தகுதியில்லாதது என்று எண்ணி தேவன் அவனை பரிசுத்த ஆவியினண்டை ஒவ்வொரு அடியாக அடிமேல் அடி வைத்து நடத்தி வந்த பிறகு, அதை தன்னுடைய காலின் கீழ் மிதித்தால், பாவத்தினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை. 182. நீங்கள், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள்.'' என்று கூறலாம். ஒரு நிமிடம்! அந்திக் கிறிஸ்துவின் ஆவி அதைத்தான் செய்யும். அவைகளின் இரண்டு தலைகளை கவனித்தீர்களா? யார் அந்த யூதாஸ்காரியோத்து? பிசாசு! அவன் கேட்டின் மகன் என்று வேதம் கூறுகின்றது. கேடு என்றால் என்ன? நரகம். அவன் நரகத்தின் குமாரன், நரகத்தி லிருந்து வந்தான், நரகத்திற்குச் சென்றான். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருந்தார், பரலோகத் திலிருந்து வந்தார், பரலோகத்திற்கு திரும்பிச் சென்றார். அவர்களிருவரும் சிலுவைகளில் மரித்த போது... யூதாஸ் ... யூதாஸ் சிலுவையில் மரித்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களில் எத்தனைப் பேர் அதை அறிவீர்கள்? அவன் ஒரு மரத்தின் மீது செத்தான். இயேசுவும்கூட ஒரு மரத்தின் மீது மரித்தார். அது வெட்டி எடுக்கப்பட்ட ஒன்றாயிருந்தது; அவ்வளவுதான். ''மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். ஆகவே அவன் நரகத்திலிருந்து வந்தான். ஆகவே கவனியுங்கள்.... அவன் சபைக்குள்ளாக எவ்வளவாக கள்ளத்தனமாக பதுங்கிச் செல் கிறான். அவனால் முடிந்த வரை மிக உயரிய ஒரு நிலைக்கு வரு கிறான். பாருங்கள். அவன் எவ்வளவு வஞ்சிக்கிறவனாகயிருக் கிறான், யூதாஸ் எவ்விதமாக வந்தான்? அவன் என்னவாக இருந்தான்? ஒரு பொருளாளர், பொக்கிஷ தாரியாக இருந்தான், ஒரு சகோதரனாக சபையில் கிரியை செய்து கொண்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, ஒரு... (ஒலிப் பதிவு முழு நிறைவு பெறாத நிலையில் முடிவுறுகிறது - ஆசி.)